என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோடியக்கரைக்கு அருகே வெள்ளபள்ளம் நாலுவேதபதிக்கு இடையே இலங்கையை சேர்ந்த ஒரு படகு நிற்பதை பார்த்த கடலோர காவல்படையினர் உடனடியாக படகின் அருகே சென்று பார்த்தனர். அதில் இலங்கை நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தமிழக எல்லைக்குள் மீன் பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து எல்லைதாண்டி மீன் பிடித்ததாக அந்த 6 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் எதற்காக எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் 6 பேரையும் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். படகையும் பறிமுதல் செய்தனர்.
அங்கு அவர்களிடம் பெயர், இலங்கையில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், எதற்காக எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் போன்றவை குறித்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை முடிந்த பின்னர் இலங்கை மீனவர்கள் 6 பேரும் நாகை கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அதன்பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 பேரும் சிறையில் அடைக்கப்படுவர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த தேர் செல்லும்போது அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டபடியே இழுத்து செல்லப்பட்டு உள்ளது. கோவில் திருவிழாவில் அருகேயுள்ள கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தேர் புறப்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்பு முட்டுக்கட்டை போடப்பட்டபோது, தீபராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளியான தீபராஜன் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நாகை அருகே மற்றொரு சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.






