என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முழுமை யாக கட்டுப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடி க்கையின் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பகுதிகளில் அமைந்துள்ள சாராயக்கடை மற்றும் மதுபான கடை உரிமையாளர் மேலாளர்களை கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு சட்ட வரைமு றைகளை மீறி அதிக அளவில் மது பாட்டில்கள் சாராயம் தனிநபர் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மேலாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது.நடப்பாண்டு 2022-ல் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 1466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55022 லிட்டர் பாண்டி சாராயம் 1835 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 30 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 14 நபர்கள் மீது மதுவிலக்கு தடுப்புக் காவல் சட்ட ப்படி நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
திருமருகல் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமிற்கு செல்வராசு எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.
நாகை மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் பேசினார். கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் ராணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார், திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மருத்துவம், இதய நோய், தோல் நோய், எலும்பு சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், யோகா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டன. முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கற்பகம் நன்றி கூறினார்.
2024 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரணியம் உப்பு சத்தியாக்கிரக நினைவு கட்டிட வளாகத்தில் உள்ள தியாகி சர்தார் வேதரத்தினம் மற்றும் வைரப்பன் சுப்பை பிள்ளை சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
பின்னர் அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் அருகே உப்பு அள்ளியும், நினைவு தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, சர்தார் பேரன்கள் வேதாரத்தினம், கேடிலியப்பன், முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நாகையில் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
2024 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணிகள்தான் இந்தியாவில் வெற்றி பெறும்.
கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
8 மாநிலங்களில் நிலக்கரி ஒரு நாளைக்கு தான் கையிருப்பு உள்ளது.அந்த மாநிலங்களிலும் அனல் மின் நிலையங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது.
மாநில அரசுகளே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பது சாத்தியமல்ல.
இலங்கையில் பொருளாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றால் சுயசார்பு நிலை வேண்டும். அதற்கு இந்தியா உதவி செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது மாநில செயலாளர் நௌஷாத்,விவசாய பிரிவு மாநில தலைவர் மீரா உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாகை அருகே தேரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை:
நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த தேர் செல்லும்போது அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டபடியே இழுத்து செல்லப்பட்டு உள்ளது. கோவில் திருவிழாவில் அருகேயுள்ள கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தேர் புறப்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்பு முட்டுக்கட்டை போடப்பட்டபோது, தீபராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளியான தீபராஜன் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நாகை அருகே மற்றொரு சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த தேர் செல்லும்போது அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டபடியே இழுத்து செல்லப்பட்டு உள்ளது. கோவில் திருவிழாவில் அருகேயுள்ள கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தேர் புறப்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்பு முட்டுக்கட்டை போடப்பட்டபோது, தீபராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளியான தீபராஜன் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.
தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நாகை அருகே மற்றொரு சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
நாகையில் வீட்டில் 20 கிலோ கஞ்சா பதுக்கிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆதி செல்வம். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
அந்த நிலையில் ஆதிசெல்வம் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வருவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் ரவுடி ஆதிசெல்வம் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்த 20 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் ஆதி செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேதாரண்யம் அருகே நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி, ஆதனூர் ஆகிய ஊராட்சிகளில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மற்றும் நீர் பரிசோதனைக்கு தங்கள் வயலில் இருந்து தண்ணீர் மற்றும் மண் மாதிரிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் யோகேஷ், நடமாடும் மண் பரிசோதனை மைய அலுவலர் சுதா, தோட்ட கலை உதவி அலுவலர் நெகதீஸ்வரி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் விவசாயிகள் பயிர் காப்பீடு உழவர் கடன் அட்டை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த அறிமுக வேளாண்மை வளர்ச்சித் திட்டம் பிரதமர் கவுரவ நிதி திட்டம் சரிபார்ப்பு நுண்ணுயிர் நீர்ப்பாசன திட்டம் மண் மாதிரி பரிசோ தனை மாதிரி சேகரிப்பு ஆத்மா இறைவன் திட்ட விலக்கம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் விவசாயத் துறையினர் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை நாகை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து பிளாஸ்டிக் தவிர்த்தல், மாசுபாடு தவிர்த்தல் என்ற கருத்துகளை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசார பேரணி நடத்தினர்.
பேரணியை நாகை முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஞ்சுகம், வேட்டைக்காரனிருப்பு தலைமையாசிரியர் பீட்டர் பிரான்சிஸ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வீரப்பன், இணைச் செயலாளர் வைத்தியநாதன், செயற்குழு உறுப்பினர் நாகூரான் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் பொய்யாமொழி மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணியில் மாணவர்கள் வணிக நிறுவனங்களிலும் வீடுகளிலும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி சென்றனர். விழாவில் தேசிய பசுமைப்படை ஆசிரியர் கண்ணையன் வரவேற்றார் பட்டதாரி ஆசிரியர் ரங்கசாமி நன்றி கூறினார்.
திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்த மான அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா நடைபெற்றது.
இதில் திருமுறை கருத்தரங்கு மற்றும் நூல் வெளியீட்டு விழாவும் நடைப்பெற்றது.
வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் தலைமையேற்று ஆசி வழங்கினார்.
தொடர்ந்து சூரியனார் கோவில் ஆதீனம் மகாசந்நிதானம் ஆசிவழங்கி தொடர்ந்து திருப்புகலூா் தலவரலாறு நூலினை வேளாக்குறிச்சி ஆதீன குருமகாசந்நிதானம் வெளியிட கும்பகோணம் நீதிமன்ற தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி எஸ்.பிரகாஷ் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து உழவாரப்பணி அரம்பையர் நடனம் மகாஅபிஷேகம் புல்லாங்குழல் இசை சங்கம சமர்ப்பணம் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நாலுவேதபதி பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் அருகே நாலுவேதபதி சீனிவாசனார் உயர்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் மற்றும் மாசுபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் பிளாஸ்டிக்கின் தீமைகளை எடுத்துக் கூறி மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் பள்ளி மாணவர்கள் கொண்டு வந்துள்ள நீரின் தரம் ஆய்வு செய்து விளக்கினார். தேசிய பசுமை படை இன் சார்பாக முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையாசிரியரிடம் பள்ளிக்காக நீர் பரிசோதனை கருவி வழங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர். சுந்தரபாண்டியன் மரக்கன்றுகள் வழங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். விழா நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் ஆர். பி. உதயகுமார் மற்றும் மூக்காச்சி தெரு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருட்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் மா தியாகராஜன் வரவேற்றார். இறுதியாக தேசிய பசுமைப்படை ஆசிரியை சுபா நன்றி கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் மழைநீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க தடுப்பணை அமைக்கும் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் 330 கிலோமீட்டர் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் கிராமத்துமேடு, சோழவித்தியாபுரம், ஆய்மழை உள்ளிட்ட கிராமத்தில் நடைபெற்று வரும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கூடுதல் தலைமைச் செயலரிடம் விளக்கி கூறினார்.
அப்போது விவசாயிகள் அனைத்து பாசனவாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் தூர்வார வேண்டும் எனவும், பழுதடைந்த சட்டர் மற்றும் தடுப்பனைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது கூடுதல் தலைமை செயலர் கூறும்போது:-
காவேரி டெல்டாவில் 10 மாவட்டங்களில் 80 கோடி மதிப்பீட்டில் 4,965 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறுகள். கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்கு தடையின்றி விரைவாக சென்றடைய பணிகள் விரைவுபடுத்தப்பட்டு மே மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மழை நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.
சாமந்தான்பேட்டையில் மீன்பிடி துறைமுகத்திற்கான பூர்வாங்க பணி தொடங்கியது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த சாமந்தான்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசாணை வெளியிடப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதையடுத்து சாமந்தான்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் தொடங்கினர்.
இதற்காக சாமந்தான்பேட்டை கிராமத்திற்கு எக்கோ சவுண்டர் கருவிகளுடன் வந்த அவர்கள், கடல் முகத்துவாரம் அருகே இரு புறமும் கருங்கல் தடுப்பு சுவர் அமைய உள்ள பகுதியில் படகில் சென்று கடலின் மேல்மட்டத்திலிருந்து ஆழம் வரை அளவீடு செய்தனர். மேலும் கடல் ஆழத்தின் அடியில் உள்ள சேறு மற்றும் மணலையும் அவர்கள் தர ஆய்வுக்கும் எடுத்துக் கொண்டனர்.
திருமருகலில் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கூட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகலில் தமிழ்நாடு அரசு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படி சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி, முன்னாள் ஒன்றிய தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீராசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.






