என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    பிரதாபராமபுரம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரத்தில் உள்ள ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    பூவைத் தேடி ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் இருந்து மேளதாளத்துடன் புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் பச்சைகாளி, பவளகாளி, நடன காளி, பார்வதி, சிவன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்த நடனக்கலைஞர்கள் நடனம் ஆடியது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்த பின்னர், பக்தர்கள் சுமந்து வந்து பால் கொண்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. 

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பனங்குடியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியுள்ளார்.
    நாகப்பட்டினம்;

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராம சபை கூட்டமாகும். இந்த கிராமசபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும். இதுவரை நாம் என்ன பயனடைந்திருக்கிறோம். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அடுத்த 3 மாதத்திற்குள் கிராமசபை கூட்டம் நடைபெறும். 

    இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். இந்த கிராமத்தில் துறைகள் ஒருங்கிணைந்து கிராம மக்களின் 17 தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்வதற்கான பொறுப்பு ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும் உள்ளது. 

    இந்த வருடம் 2022-23க்கு 100 நாள் வேலையில் என்ன திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதையும், இந்த கிராமசபை கூட்டத்தில் கூறப்படுகின்ற திட்டத்தில் உங்களுடைய அனைத்து கருத்துகளையும் தெரிவிக்கலாம். இந்த பனங்குடி கிராமத்தை நீர்நிறைந்த கிராமமாக மாற்ற குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது மற்றும் பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலமாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சவுந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி, வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குலா அக்கண்டராவ், திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், பனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் வினோதினி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கட்டுமாவடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலை–மையிலும், குத்தாலத்தில் மகேந்திரன் தலைமையிலும், நரிமணத்தில் கார்த்திக் தலை–மையிலும், திருமருகலில் கண்ணன் தலைமையிலும், உத்தம–சோழபுரத்தில் ஜனனி பாலாஜி தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோடியக்கரைக்கு அருகே வெள்ளபள்ளம் நாலுவேதபதிக்கு இடையே இலங்கையை சேர்ந்த ஒரு படகு நிற்பதை பார்த்த கடலோர காவல்படையினர் உடனடியாக படகின் அருகே சென்று பார்த்தனர். அதில் இலங்கை நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தமிழக எல்லைக்குள் மீன் பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து எல்லைதாண்டி மீன் பிடித்ததாக அந்த 6 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் எதற்காக எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் 6 பேரையும் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். படகையும் பறிமுதல் செய்தனர்.

    அங்கு அவர்களிடம் பெயர், இலங்கையில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், எதற்காக எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் போன்றவை குறித்து விசாரித்து வருகின்றனர்.

    விசாரணை முடிந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    விசாரணை முடிந்த பின்னர் இலங்கை மீனவர்கள் 6 பேரும் நாகை கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அதன்பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 பேரும் சிறையில் அடைக்கப்படுவர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளிவாசலில் மதநல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய ஊராட்சிகளில் நடுவில் அமைந்துள்ள முகைதீன் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    கடந்த 40 ஆண்டுகளாக 29 நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்து மதத்தைச் சேர்ந்த வேதாரண்யம் ருத்திராபதி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

    இன்று நோன்பு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து உணவு நோன்புகஞ்சி அவரது வீட்டில் சமைத்து பள்ளிவாசலுக்கு எடுத்து வந்து பரிமாறி மகிழ்ந்தனர். பின்பு முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.
    நாகையில் நீதி, காவல்துறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்: 

    நாகையில் நீதித்துறை மற்றும் காவல்துறை கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி கிங்ஸ்லி கிரிஸ்டோபர், தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா, போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர் (நாகை), நிஷா (மயிலாடுதுறை) ஆகியோர் தலைமை தாங்கினர். 

     இதில் காவல்துறை, நீதித்துறை உடைய சந்தேகங்கள், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 

     இதன் மூலம் இனிவரும் காலங்களில் அதிக அளவில் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிலைநாட்டப்படும் என்று உறுதி ஏற்கப்பட்டது. 

    மேலும் சிறப்பாக செயல்படும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அரசு சார்பில் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்ட–ங்குடி உத்திராபதிஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர்ச் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த முட்டுக்கட்டை போடும் தொழிலாளி தீபன்ராஜுக்கு அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    பின்னர் அவரது உறவினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ, திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தகவல் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முழுமை யாக கட்டுப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடி க்கையின் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பகுதிகளில் அமைந்துள்ள சாராயக்கடை மற்றும் மதுபான கடை உரிமையாளர் மேலாளர்களை கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு சட்ட வரைமு றைகளை மீறி அதிக அளவில் மது பாட்டில்கள் சாராயம் தனிநபர் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மேலாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது.நடப்பாண்டு 2022-ல் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 1466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55022 லிட்டர் பாண்டி சாராயம் 1835 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 30 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

    மேலும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 14 நபர்கள் மீது மதுவிலக்கு தடுப்புக் காவல் சட்ட ப்படி நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    திருமருகல் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமிற்கு செல்வராசு எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

     நாகை மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் பேசினார். கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் ராணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார், திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மருத்துவம், இதய நோய், தோல் நோய், எலும்பு சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், யோகா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டன. முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கற்பகம் நன்றி கூறினார்.
    2024 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
    வேதாரண்யம்:

     வேதாரணியம் உப்பு சத்தியாக்கிரக நினைவு கட்டிட வளாகத்தில் உள்ள தியாகி சர்தார் வேதரத்தினம் மற்றும் வைரப்பன் சுப்பை பிள்ளை சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

    பின்னர் அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு  ஸ்தூபியில் அருகே  உப்பு அள்ளியும், நினைவு தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, சர்தார் பேரன்கள் வேதாரத்தினம், கேடிலியப்பன், முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நாகையில் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2024 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணிகள்தான் இந்தியாவில் வெற்றி பெறும். 
    கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

     8 மாநிலங்களில் நிலக்கரி ஒரு நாளைக்கு தான் கையிருப்பு உள்ளது.அந்த மாநிலங்களிலும் அனல் மின் நிலையங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. 
    மாநில அரசுகளே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பது சாத்தியமல்ல.

     இலங்கையில் பொருளாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றால் சுயசார்பு நிலை வேண்டும். அதற்கு இந்தியா உதவி செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அப்போது மாநில செயலாளர் நௌஷாத்,விவசாய பிரிவு மாநில தலைவர் மீரா உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    நாகை அருகே தேரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நாகை:

    நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவின்போது, தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது.

    இந்த தேர் செல்லும்போது அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டபடியே இழுத்து செல்லப்பட்டு உள்ளது.  கோவில் திருவிழாவில் அருகேயுள்ள கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், தேர் புறப்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்பு முட்டுக்கட்டை போடப்பட்டபோது, தீபராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது.  இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளியான தீபராஜன் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  எனினும் அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

    தஞ்சை அருகே களிமேட்டில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நாகை அருகே மற்றொரு சம்பவம் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


    நாகையில் வீட்டில் 20 கிலோ கஞ்சா பதுக்கிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆதி செல்வம். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. 

    அந்த நிலையில் ஆதிசெல்வம் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வருவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    அதன்படி இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் ரவுடி ஆதிசெல்வம் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அவரது வீட்டில் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்த 20 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    இதனையடுத்து வழக்கு பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் ஆதி செல்வத்தை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வேதாரண்யம் அருகே நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி, ஆதனூர் ஆகிய ஊராட்சிகளில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மற்றும் நீர் பரிசோதனைக்கு தங்கள் வயலில் இருந்து தண்ணீர் மற்றும் மண் மாதிரிகளை வழங்கினர். 

    நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் யோகேஷ், நடமாடும் மண் பரிசோதனை மைய அலுவலர் சுதா, தோட்ட கலை உதவி அலுவலர் நெகதீஸ்வரி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் விவசாயிகள் பயிர் காப்பீடு உழவர் கடன் அட்டை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த அறிமுக வேளாண்மை வளர்ச்சித் திட்டம் பிரதமர் கவுரவ நிதி திட்டம் சரிபார்ப்பு நுண்ணுயிர் நீர்ப்பாசன திட்டம் மண் மாதிரி பரிசோ தனை மாதிரி சேகரிப்பு ஆத்மா இறைவன் திட்ட விலக்கம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

     இதில் விவசாயத் துறையினர் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கலந்து கொண்டனர்.
    ×