என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி புத்தாடை அணிந்து கொண்டாடினர்.
    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்றநாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி புத்தாடை அணிந்து கொண்டாடினர்.

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகசிவ னடியா ர்களுக்கு குளிர்பா னங்கள் வழங்கி மகிழ்ந்த இஸ்லாமியர்கள்.

    ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமி யர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பெரும் தொற்றுகாரண மாக இரண்டு ஆண்டுக ளுக்குப் பிறகு நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்றநாகூர் தர்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகை யில் ஆயிரரக்கணக்கான இஸ்லாமியர்கள்பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். 

    அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டி கையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்ஒருவரை யொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது மத நல்லிண க்கத்திற்கு எடுத்துக்காட்டாக நாகூர் தர்கா வந்தசிவனடி யார்களுக்கு அங்கிருந்த இஸ்லாமியர்கள் குளிர்பா னங்களை வழங்கி தங்களது ஈகை கடைமையை நிறை வேற்றினர். கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் தொழுகை யில் ஈடுபட்டதுமகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லா மியர்கள் தெரிவித்தனர்.

    நாகை ஆயுதப்படை வளாகத்தில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்;

    நாகப்பட்டினம் ஆயுதப்படை வளாகத்தில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பெருவிழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த நாடகம், தப்பாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றது. மேலும் கள்ளச்சாராய விற்பனை செய்து தற்போது மனம் திருந்தியவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 16 பேர்களுக்கு 4,80,000 மதிப்பிலான தையல் மிஷின்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் பெட்டி கடை வைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டது. 

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சித்திரை கார்த்திகை வழிபாடு நடைபெற்றது.
    நாகப்பட்டினம்;

    நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயமாகும் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது இவ்புகழ்பெற்ற இவ்வாலயத்தில் சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் சிங்காரவேலவர் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கு பால் பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் மஞ்சள் விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சிங்காரவேலனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    உயிரிழப்பு ஏற்படாத வகையில் கோவில் திருவிழாக்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என ஒரு நபர்குழு அதிகாரி குமார்ஜெயந்த் பேட்டியளித்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீசுவரர் கோவிலின் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தேர்த் திருவிழா நடைபெற்றது. திருச்செங்காட்டாங்குடி மேலவீதியை சேர்ந்த தீபன்ராஜ் (30) தேருக்கு முட்டுக்கட்டை போடும் போது தவறி விழுந்தார். இதில் தேர் சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு அதிகாரியான வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த் வந்தார். கோவிலின் தெருவடை த்தான் தேரை ஆய்வு செய்தார். பின்னர் தேர் சென்ற நான்கு மாட வீதிகளிலும் ஆய்வு செய்தார்.அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    களிமேடு சம்பவத்திற்கும் திருச்செங்காட்டாங்குடி சம்பவத்திற்கும் வேறுபாடு உள்ளது. திருச்செங்கா–ட்டான்குடியில் நடந்த சம்பவம் மீண்டும் நடக்ககூடாது என்பதற்காக விசா ரணை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். இனி கோவில் திருவிழாக்களில் உயிரிழப்புகள் நடக்காத வகையில், திருவிழாக்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
    சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் கொண்டாட்டம் நடைபெற்றது. ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒரு மாத காலமாக நோன்பு நோற்று விரதமிருந்த இஸ்லாமியர்கள் மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து ஆரத்தழுவி கைகுலுக்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
    நாகூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    ரமலான் நோன்புகடைபிடித்து வரும் இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் பண்டி கையை கொண்டாட தயாராகி வருகின்றனர். 

    இந்த நிலையில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கவுதியா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சங்க தலைவர் சாஹாமாலிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வ கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.  

    நிகழ்ச்சியில் நாகூர் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு அரிசி, மளிகை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.1000 மதிப்புள்ள ரமலான் பரிசு தொகுப்புகள் வழங்க ப்பட்டது.
    பிரதாபராமபுரம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரத்தில் உள்ள ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    பூவைத் தேடி ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் இருந்து மேளதாளத்துடன் புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் பச்சைகாளி, பவளகாளி, நடன காளி, பார்வதி, சிவன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்த நடனக்கலைஞர்கள் நடனம் ஆடியது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்த பின்னர், பக்தர்கள் சுமந்து வந்து பால் கொண்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. 

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுமகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பனங்குடியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியுள்ளார்.
    நாகப்பட்டினம்;

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராம சபை கூட்டமாகும். இந்த கிராமசபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும். இதுவரை நாம் என்ன பயனடைந்திருக்கிறோம். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அடுத்த 3 மாதத்திற்குள் கிராமசபை கூட்டம் நடைபெறும். 

    இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். இந்த கிராமத்தில் துறைகள் ஒருங்கிணைந்து கிராம மக்களின் 17 தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்வதற்கான பொறுப்பு ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும் உள்ளது. 

    இந்த வருடம் 2022-23க்கு 100 நாள் வேலையில் என்ன திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதையும், இந்த கிராமசபை கூட்டத்தில் கூறப்படுகின்ற திட்டத்தில் உங்களுடைய அனைத்து கருத்துகளையும் தெரிவிக்கலாம். இந்த பனங்குடி கிராமத்தை நீர்நிறைந்த கிராமமாக மாற்ற குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது மற்றும் பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலமாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சவுந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி, வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குலா அக்கண்டராவ், திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், பனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் வினோதினி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கட்டுமாவடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலை–மையிலும், குத்தாலத்தில் மகேந்திரன் தலைமையிலும், நரிமணத்தில் கார்த்திக் தலை–மையிலும், திருமருகலில் கண்ணன் தலைமையிலும், உத்தம–சோழபுரத்தில் ஜனனி பாலாஜி தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோடியக்கரைக்கு அருகே வெள்ளபள்ளம் நாலுவேதபதிக்கு இடையே இலங்கையை சேர்ந்த ஒரு படகு நிற்பதை பார்த்த கடலோர காவல்படையினர் உடனடியாக படகின் அருகே சென்று பார்த்தனர். அதில் இலங்கை நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தமிழக எல்லைக்குள் மீன் பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து எல்லைதாண்டி மீன் பிடித்ததாக அந்த 6 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் எதற்காக எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் 6 பேரையும் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். படகையும் பறிமுதல் செய்தனர்.

    அங்கு அவர்களிடம் பெயர், இலங்கையில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், எதற்காக எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் போன்றவை குறித்து விசாரித்து வருகின்றனர்.

    விசாரணை முடிந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    விசாரணை முடிந்த பின்னர் இலங்கை மீனவர்கள் 6 பேரும் நாகை கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அதன்பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 பேரும் சிறையில் அடைக்கப்படுவர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளிவாசலில் மதநல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய ஊராட்சிகளில் நடுவில் அமைந்துள்ள முகைதீன் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    கடந்த 40 ஆண்டுகளாக 29 நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்து மதத்தைச் சேர்ந்த வேதாரண்யம் ருத்திராபதி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

    இன்று நோன்பு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து உணவு நோன்புகஞ்சி அவரது வீட்டில் சமைத்து பள்ளிவாசலுக்கு எடுத்து வந்து பரிமாறி மகிழ்ந்தனர். பின்பு முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.
    நாகையில் நீதி, காவல்துறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்: 

    நாகையில் நீதித்துறை மற்றும் காவல்துறை கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி கிங்ஸ்லி கிரிஸ்டோபர், தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா, போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர் (நாகை), நிஷா (மயிலாடுதுறை) ஆகியோர் தலைமை தாங்கினர். 

     இதில் காவல்துறை, நீதித்துறை உடைய சந்தேகங்கள், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 

     இதன் மூலம் இனிவரும் காலங்களில் அதிக அளவில் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிலைநாட்டப்படும் என்று உறுதி ஏற்கப்பட்டது. 

    மேலும் சிறப்பாக செயல்படும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

    தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அரசு சார்பில் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்ட–ங்குடி உத்திராபதிஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர்ச் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த முட்டுக்கட்டை போடும் தொழிலாளி தீபன்ராஜுக்கு அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    பின்னர் அவரது உறவினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ, திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    ×