என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருமருகல் அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகையில் பிடாரி அம்மன், வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடை பெறுவது வழக்கம்.அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி காப்புகட்டி துவங்கப்பட்டது.திருவிழா வில் நேற்று முதல்நாள் காவடி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளானபக்தர்கள் பால் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்றுநடை பெற்றது. இதில் மூன்று தேர்கள் வீதி உலா,எல்லை சுற்றுதல், தேர் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    தொடர்ந்து இரவு பூத சிலைகள் வீதிஉலா, வேண்டுதல் சிலைகள் வீதிஉலா மற்றும் மூன்று தேர்கள் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. இந்த திருவிழா வரும் மே 6-ம் தேதி முடிவடைகிறது. ஏற்பா டுகளை அகரக்கொந்தகை கிராமவாசிகள் செய்திருந்தனர்.
    வேதாரண்யத்தில் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாகை மாவட்டச் சிறப்புப் பேரவைக் கூட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் புயல் குமார் தலைமை வகித்தார். எழுத்தாளர் புலவர் பாலையன் தொடங்கி வைத்தார். 

    அமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் இரா. காமராசு, இன்றைய சமூகப் போக்கில் நிலவும் பிரச்னைகளும் கலை இலக்கிய தேவைகளும் குறித்து பேசினார். நாட்டார் வழக்காற்றியலில் தேடல்கள் குறித்து முனைவர் கனிமொழி செல்லத்துரை பேசினார்.

    தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற கோவி.ராசேந்திரன், சுகன்யா, அமுதசுரபி, ஸ்ரீநிதி, திருக்குறள்களை எழுதி திருவள்ளுவர் ஓவியம் தீட்டிய நித்யா, பரதநாட்டியம் நிகழ்ந்திய கோமதி உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.

    நிகழ்ச்சியில், மருத்துவர் அருட்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சம்பந்தம், கவிஞர் ராஜா, கோபிநாதன், பொறியாளர் மாதவன், வக்கீல் சதீஸ் பிரபு, கவிஞர் ஜெய.கந்தசாமி, நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வராசு, அ.மா.குணசீலன், தங்க.குழந்தைவேலு, கவிஞர் பாலு தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு:

    பேரவையில் அமைப்பின் சிறப்புத் தலைவராக பாலையன் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக புயல் சு.குமார், செயலாளர் தென்னடார் அம்பிகாபதி, பொருளாளர் கைலாசம், துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், பார்த்தசாரதி, துணைச் செயலாலர்கள் சதீஸ்பிரபு, அருள்முருகன் உள்பட 33 பேர்களைக் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்ய்ப்பட்டது.

    கூட்டத்தில், சாத்தூரில் மே.20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாட்டில் சிறப்பாக பங்கேற்பது, 

    நாகை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களை ஒருங்கிணைத்து தனி கலைக்குழுவாக ஏற்படு த்தவும், படைப்பாளர்களின் பட்டியல் தயாரிப்பது, மாதம் ஒரு முறை இளம் படைப்பாளர் கனக்கு படைப்புகள் உருவாக்கம் குறித்த வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    நலிந்துவரும் நாட்டுப்புறக் கலைஞர்க ளுக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடை ஏதுவாக தமிழக அரசின் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும், துளசியாப்பட்டினம் ஒளவையார் கோயிலில் அரசு எடுக்கும் ஒளவை விழாவை எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தவும், ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பா டுகளை பிரதிபலிக்கும் நாட்டுப்புறவியலை தனி பாடத் திட்டமாக கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழக அரசை வலியுறுத்தி நின்றவேற்றப்பட்டது.

    திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 25-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    விழாவையொட்டி 24-ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது.25-ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையடுத்து முன்னதாக சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 29-ம் தேதி தெருவடைச்சான் சப்பரம், 30-ம் அமுது படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்தி சாமிகள் வீதியுலா நடைபெற்றது.

    இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தங்கம் விற்பதாக கூறியவர்கள் அளித்த தகவலின்பேரில் நாகை அருகே உள்ள வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலத்திற்கு வந்துள்ளார். அப்போது ஒரு பெண் உள்பட 7 பேர் அவரிடம் இருந்த ரூ.96 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சிறிதளவு தங்கத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    வேதாரண்யம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முக்கிய கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் முருகன். இவரிடம் நாகை மாவட்டத்தை சிலர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு தருவதாகவும் போன் மூலமாக மிக நம்பிக்கையாக பேசியுள்ளனர்.

    நேற்று அட்சய திரிதியைெயாட்டி நகை வாங்கலாம் என முருகன் நேற்று மாலை கள்ளக்குறிச்சியில் இருந்து ரூ.96 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனியாக காரில் நாகை மாவட்டத்துக்கு வந்துள்ளார்.

    பின்னர் தங்கம் விற்பதாக கூறியவர்கள் அளித்த தகவலின்பேரில் நாகை அருகே உள்ள வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது ஒரு பெண் உள்பட 7 பேர் அவரிடம் இருந்த ரூ.96 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சிறிதளவு தங்கத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் முருகன் அவர்களிடம் ரூ.96 லட்சத்துக்கு உரிய நகைகளை கொடுங்கள், இல்லாவிட்டால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த 7 பேரும் முருகனை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு அடித்து விரட்டியுள்ளனர்.

    இதையடுத்து முருகன் நடந்த சம்பவம் பற்றி வேதாரண்யம் போலீசில் உடனடியாக புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த பண்டரிநாதன், விக்னேஷ், முருகையன், தனுஷ்கோடி, வெள்ளதுரை, மணிமாறன் மற்றும் துர்க்காதேவி ஆகிய 7 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் 7 பேரும் முருகனிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்ததோடு அவரை தாக்கி நகைகளையும் பறித்தது தெரியவந்தது.

    மேலும் இலங்கையில் இருந்து நகைகளை கடத்தி வந்து இவர்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்தனரா? இல்லை போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டனரா? எப்படி கள்ளக்குறிச்சியில் உள்ள நகைக்கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு ஏமாற்றினர். இதில் மேலும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவண தேவர் வலியுறுத்தியுள்ளார்.
    நாகப்பட்டினம்;

    முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

    திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி என்னும் கிராமத்தில் சூர்யா என்ற மாணவன் சாதிய அடையாள கயிறை கையில் கட்டி இருந்ததற்காக இரண்டு சக மாணவர்களால் சாதிவெறியுடன் அடித்து கொலை செய்துள்ளனர். 
    சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் அரங்கேறி வருகின்றன. 

    பள்ளி கல்வித்துறை இதற்கு முட்டுக்கட்டை போடாவிட்டால் எதிர்கால தலைமுறையே நாசமாகி விடும். பள்ளி வளாக–த்துக்குள் செல்போன், போதை பொருட்கள் மாணவர்கள் பயன்படுத்தும் வீடியோக்கள் பரவி வருகிறது. ஆசிரியரையே மாணவன் அடிக்க செல்கிறான் ஆசிரியர்கள் மாணவ ர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். தவறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இப்போது கையில் கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு உயிர் பலியாகி உள்ளது. 

    இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாணவன் சூர்யா குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    வேதாரண்யம் தாலுகா தகட்டூர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக அளித்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம்அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக அளித்த சம்பவம் சுற்று வட்டார கிராமங்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

     வேதாரண்யம் தாலுகா தகட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட மலையன்காடு கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கையை  அதிகரிக்கும்  வகையில் கிராம மக்கள் "நம் பள்ளி" "த ம்பெருமை" என்ற முழக்கத்துடன் மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசை யாக கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

    இதில் இன்டர்நெட் வசதிகளுடன் கூடிய தொலைகாட்சி பெட்டி தண்ணீர் சுத்திகரிப்பான்  குழந்தைகளுக்கு தேவை யான விளையாட்டுபொரு ட்கள், சேர், மற்றும்மின்வி சிறி உள்ளிட்ட ரூபாய் இரண்டுலட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட 125 பொருட்களை வழங்கினார்.

    பின்பு 1950 ல் தொடக்கபட்ட இப் பள்ளியில் நடைபெற்ற முதன்முதலாக நடை பெற்றஆண்டு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார் விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் மாவட்ட கவுன்சிலர் சுப்பையன் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தசாமி, சந்திர சேகரன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் விழா முடிவில் பள்ளி ஆசிரியர் விரசேகரன் நன்றி கூறினார்.
    உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி புத்தாடை அணிந்து கொண்டாடினர்.
    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்றநாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி புத்தாடை அணிந்து கொண்டாடினர்.

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகசிவ னடியா ர்களுக்கு குளிர்பா னங்கள் வழங்கி மகிழ்ந்த இஸ்லாமியர்கள்.

    ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமி யர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பெரும் தொற்றுகாரண மாக இரண்டு ஆண்டுக ளுக்குப் பிறகு நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்றநாகூர் தர்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகை யில் ஆயிரரக்கணக்கான இஸ்லாமியர்கள்பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். 

    அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டி கையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்ஒருவரை யொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது மத நல்லிண க்கத்திற்கு எடுத்துக்காட்டாக நாகூர் தர்கா வந்தசிவனடி யார்களுக்கு அங்கிருந்த இஸ்லாமியர்கள் குளிர்பா னங்களை வழங்கி தங்களது ஈகை கடைமையை நிறை வேற்றினர். கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் தொழுகை யில் ஈடுபட்டதுமகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லா மியர்கள் தெரிவித்தனர்.

    நாகை ஆயுதப்படை வளாகத்தில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்;

    நாகப்பட்டினம் ஆயுதப்படை வளாகத்தில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பெருவிழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த நாடகம், தப்பாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றது. மேலும் கள்ளச்சாராய விற்பனை செய்து தற்போது மனம் திருந்தியவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 16 பேர்களுக்கு 4,80,000 மதிப்பிலான தையல் மிஷின்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் பெட்டி கடை வைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டது. 

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சித்திரை கார்த்திகை வழிபாடு நடைபெற்றது.
    நாகப்பட்டினம்;

    நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயமாகும் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது இவ்புகழ்பெற்ற இவ்வாலயத்தில் சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் சிங்காரவேலவர் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கு பால் பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் மஞ்சள் விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சிங்காரவேலனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    உயிரிழப்பு ஏற்படாத வகையில் கோவில் திருவிழாக்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என ஒரு நபர்குழு அதிகாரி குமார்ஜெயந்த் பேட்டியளித்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீசுவரர் கோவிலின் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தேர்த் திருவிழா நடைபெற்றது. திருச்செங்காட்டாங்குடி மேலவீதியை சேர்ந்த தீபன்ராஜ் (30) தேருக்கு முட்டுக்கட்டை போடும் போது தவறி விழுந்தார். இதில் தேர் சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு அதிகாரியான வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த் வந்தார். கோவிலின் தெருவடை த்தான் தேரை ஆய்வு செய்தார். பின்னர் தேர் சென்ற நான்கு மாட வீதிகளிலும் ஆய்வு செய்தார்.அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    களிமேடு சம்பவத்திற்கும் திருச்செங்காட்டாங்குடி சம்பவத்திற்கும் வேறுபாடு உள்ளது. திருச்செங்கா–ட்டான்குடியில் நடந்த சம்பவம் மீண்டும் நடக்ககூடாது என்பதற்காக விசா ரணை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். இனி கோவில் திருவிழாக்களில் உயிரிழப்புகள் நடக்காத வகையில், திருவிழாக்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
    சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் கொண்டாட்டம் நடைபெற்றது. ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒரு மாத காலமாக நோன்பு நோற்று விரதமிருந்த இஸ்லாமியர்கள் மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து ஆரத்தழுவி கைகுலுக்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
    நாகூரில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    ரமலான் நோன்புகடைபிடித்து வரும் இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் பண்டி கையை கொண்டாட தயாராகி வருகின்றனர். 

    இந்த நிலையில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கவுதியா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சங்க தலைவர் சாஹாமாலிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வ கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.  

    நிகழ்ச்சியில் நாகூர் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு அரிசி, மளிகை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.1000 மதிப்புள்ள ரமலான் பரிசு தொகுப்புகள் வழங்க ப்பட்டது.
    ×