என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உத்தராபதீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா
Byமாலை மலர்5 May 2022 7:25 AM GMT (Updated: 5 May 2022 7:25 AM GMT)
திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 25-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி 24-ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது.25-ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது.
இதையடுத்து முன்னதாக சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 29-ம் தேதி தெருவடைச்சான் சப்பரம், 30-ம் அமுது படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்தி சாமிகள் வீதியுலா நடைபெற்றது.
இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X