என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன குருபூஜை விழாவில் நூல் வெளியீடு விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன திருமடத்தில் நடைபெற்ற மகாகுருபூஜை விழாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

    வேளாக்குறிச்சி ஆதீன முனிபுங்கவர்களில் ஒருவரான ஸ்ரீகாழி மறைஞானதேசிகர் அருளிச்செய்த சிவபுண்ணியத் தெளிவு நூல் வேளாக்குறிச்சி ஆதீன வெளியீடாக, வேளாக் குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட்டார். 

    இதில் தருமை ஆதீனம் ராஜன்கட்டளை ஸ்ரீமத் மாணிக்க வாசக தம்பிரான் சுவாமிகள், சூரியானார் கோவில் ஆதீனம், ஸ்ரீமத் சிவாக்கிரயோகி சுவாமிகள் ஆகியோர் நூலை பெற்று க்கொண்டனர். முன்னதாக முனைவர் ராஜேஸ்வரன், புலவர் விவேகானந்தன் ஆகியோரின் உரையரங்கம் நடைபெற்றது.

    நகை மாவட்டத்தில்க டைமடை பகுதியில் வாய்க்கால்கள், ஆறுகளில் தூர்வாரும் பணிகளை சிறு குறு தொழில் துறை செயலாளர் ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 80, கோடி ரூபாய் மதிப்பில் 4295 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆறு, வடிகால் மற்றும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    இதைப்போல் டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த பாப்பாகோயில் மற்றும் நரியங்குடி பகுதிகளில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் பாசன வடிகால் வாய்க்கால்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இப்பணிகளை சிறு, குறு தொழில்துறை செயலர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் பாசன வடிகால் வாய்க்காலில் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சிறு, குறு தொழில்துறை செயலர் அருண்ராய் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணை திறப்பிற்குள் இப்பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் எனவும் அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நாகையில்உ ணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வில் கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் ஷவர்மா போன்ற உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வெளிப்பாளையம் வண்டிபேட்டை பகுதியில் மொத்தமாக விற்பனை செய்யும் சிக்கன் இறைச்சிக்கடை குடோனில் இருந்து கெட்டுப்போன சுமார் 250 கிலோ சிக்கன் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

     பின்னர் இறைச்சிக் கடையின் உரிமையாளர் சேக் தாவுதை எச்சரித்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இது போன்று மீண்டும் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தால், கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.

    திருமருகல் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்கள் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டன. 

    கீழப்பூதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்னமரக்குடி, பெருநாட்டான்தோப்பு, மேலப்புதனூர்ஆகிய பகுதிகளில் சுமார்5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரம் இருபுறங்களிலும் இருந்த கருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் சாய்ந்து கிடந்தது

    இதனால் இப்பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதி க்கு ள்ளாகி வந்தனர். இந்நி லையில் இடையூறாகஇருந்த கருவேல மரங்களை ஊராட்சி மன்ற தலைவர் சத்திய மூர்த்தி, வார்டு உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் வெட்டி அகற்றினர்.

    திட்டச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்ட ச்சேரி அடுத்த கொந்தகையில் முத்துமாரியம்மன், மன்னப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்தல், அக்னி கப்பரை வீதிஉலா,சக்தி கரகம் வீதி உலா நிகழ்ச்சி கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிக ழ்வானசாமி வீதிஉலா நேற்றுநடை பெற்றது. இதில்முத்து மாரியம்மன், மன்னப்ப அய்யனார் சாமிகள் வாகனங்களில் எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.
    வேதாரண்யம் அருகே குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ.96 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் அங்கு நகைக்கடை வைத்துள்ளார். இவருக்கும் சின்னசேலத்தைச் சேர்ந்த தியாகு ஆசாரிக்கும் வியாபார ரீதியாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

     தற்சமயம் அட்சய திரிதியை வந்ததால் குறைந்த விலைக்கு அதாவது கிராமிற்கு ரூ.400 குறைத்து தங்கம் வாங்கி தருவதாக கூறினாராம். இதை நம்பி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த பண்டரிநாதன் (65) என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசினாராம். முருகன் 2 கிலோ தங்கம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதையடுத்து கருப்பம்புலத்திற்கு 96 லட்சத்துடன் வந்த முருகனிடம் பண்டரிநாதன் 850 கிராம் தங்கத்தை கொடுத்து விட்டு பாக்கியை நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என அனுப்பி விட்டாராம். 

    இதையடுத்து முருகன் தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகையை கொடுத்து விட்டு தனியே சென்ற போது பண்டரிநாதன் ஆட்களை அனுப்பி முருகனை மிரட்டி அடித்து அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்று விட்டனராம்.

    பாதிக்கப்பட்ட முருகன் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தனிப்படை போலீசார் கருப்பம்புலத்தைச் சோ்ந்த பண்டரிநாதன் (65), கார் டிரைவா் திருச்சி விக்னேஷ் (29), சென்னை பாலகுமார் (32), திருத்துறைப்பூண்டி எழிலூரைச் சேர்ந்த துர்க்காதேவி (42), கருப்பம்புலம் செல்லத்துரை (43), வடமழை மணக்காடு தனுஷ்கொடி (32), திருத்துறைப்பூண்டி மணிமாறன் (25) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

    இவர்களிடம் இருந்து 4 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    திருமருகல் அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகையில் பிடாரி அம்மன், வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடை பெறுவது வழக்கம்.அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி காப்புகட்டி துவங்கப்பட்டது.திருவிழா வில் நேற்று முதல்நாள் காவடி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளானபக்தர்கள் பால் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்றுநடை பெற்றது. இதில் மூன்று தேர்கள் வீதி உலா,எல்லை சுற்றுதல், தேர் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    தொடர்ந்து இரவு பூத சிலைகள் வீதிஉலா, வேண்டுதல் சிலைகள் வீதிஉலா மற்றும் மூன்று தேர்கள் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. இந்த திருவிழா வரும் மே 6-ம் தேதி முடிவடைகிறது. ஏற்பா டுகளை அகரக்கொந்தகை கிராமவாசிகள் செய்திருந்தனர்.
    வேதாரண்யத்தில் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாகை மாவட்டச் சிறப்புப் பேரவைக் கூட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் புயல் குமார் தலைமை வகித்தார். எழுத்தாளர் புலவர் பாலையன் தொடங்கி வைத்தார். 

    அமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் இரா. காமராசு, இன்றைய சமூகப் போக்கில் நிலவும் பிரச்னைகளும் கலை இலக்கிய தேவைகளும் குறித்து பேசினார். நாட்டார் வழக்காற்றியலில் தேடல்கள் குறித்து முனைவர் கனிமொழி செல்லத்துரை பேசினார்.

    தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற கோவி.ராசேந்திரன், சுகன்யா, அமுதசுரபி, ஸ்ரீநிதி, திருக்குறள்களை எழுதி திருவள்ளுவர் ஓவியம் தீட்டிய நித்யா, பரதநாட்டியம் நிகழ்ந்திய கோமதி உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.

    நிகழ்ச்சியில், மருத்துவர் அருட்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சம்பந்தம், கவிஞர் ராஜா, கோபிநாதன், பொறியாளர் மாதவன், வக்கீல் சதீஸ் பிரபு, கவிஞர் ஜெய.கந்தசாமி, நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வராசு, அ.மா.குணசீலன், தங்க.குழந்தைவேலு, கவிஞர் பாலு தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு:

    பேரவையில் அமைப்பின் சிறப்புத் தலைவராக பாலையன் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக புயல் சு.குமார், செயலாளர் தென்னடார் அம்பிகாபதி, பொருளாளர் கைலாசம், துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், பார்த்தசாரதி, துணைச் செயலாலர்கள் சதீஸ்பிரபு, அருள்முருகன் உள்பட 33 பேர்களைக் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்ய்ப்பட்டது.

    கூட்டத்தில், சாத்தூரில் மே.20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாட்டில் சிறப்பாக பங்கேற்பது, 

    நாகை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களை ஒருங்கிணைத்து தனி கலைக்குழுவாக ஏற்படு த்தவும், படைப்பாளர்களின் பட்டியல் தயாரிப்பது, மாதம் ஒரு முறை இளம் படைப்பாளர் கனக்கு படைப்புகள் உருவாக்கம் குறித்த வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    நலிந்துவரும் நாட்டுப்புறக் கலைஞர்க ளுக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடை ஏதுவாக தமிழக அரசின் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும், துளசியாப்பட்டினம் ஒளவையார் கோயிலில் அரசு எடுக்கும் ஒளவை விழாவை எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தவும், ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பா டுகளை பிரதிபலிக்கும் நாட்டுப்புறவியலை தனி பாடத் திட்டமாக கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழக அரசை வலியுறுத்தி நின்றவேற்றப்பட்டது.

    திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 25-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    விழாவையொட்டி 24-ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது.25-ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையடுத்து முன்னதாக சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 29-ம் தேதி தெருவடைச்சான் சப்பரம், 30-ம் அமுது படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்தி சாமிகள் வீதியுலா நடைபெற்றது.

    இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தங்கம் விற்பதாக கூறியவர்கள் அளித்த தகவலின்பேரில் நாகை அருகே உள்ள வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலத்திற்கு வந்துள்ளார். அப்போது ஒரு பெண் உள்பட 7 பேர் அவரிடம் இருந்த ரூ.96 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சிறிதளவு தங்கத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    வேதாரண்யம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முக்கிய கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் முருகன். இவரிடம் நாகை மாவட்டத்தை சிலர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு தருவதாகவும் போன் மூலமாக மிக நம்பிக்கையாக பேசியுள்ளனர்.

    நேற்று அட்சய திரிதியைெயாட்டி நகை வாங்கலாம் என முருகன் நேற்று மாலை கள்ளக்குறிச்சியில் இருந்து ரூ.96 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனியாக காரில் நாகை மாவட்டத்துக்கு வந்துள்ளார்.

    பின்னர் தங்கம் விற்பதாக கூறியவர்கள் அளித்த தகவலின்பேரில் நாகை அருகே உள்ள வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது ஒரு பெண் உள்பட 7 பேர் அவரிடம் இருந்த ரூ.96 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சிறிதளவு தங்கத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் முருகன் அவர்களிடம் ரூ.96 லட்சத்துக்கு உரிய நகைகளை கொடுங்கள், இல்லாவிட்டால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த 7 பேரும் முருகனை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு அடித்து விரட்டியுள்ளனர்.

    இதையடுத்து முருகன் நடந்த சம்பவம் பற்றி வேதாரண்யம் போலீசில் உடனடியாக புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த பண்டரிநாதன், விக்னேஷ், முருகையன், தனுஷ்கோடி, வெள்ளதுரை, மணிமாறன் மற்றும் துர்க்காதேவி ஆகிய 7 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் 7 பேரும் முருகனிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்ததோடு அவரை தாக்கி நகைகளையும் பறித்தது தெரியவந்தது.

    மேலும் இலங்கையில் இருந்து நகைகளை கடத்தி வந்து இவர்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்தனரா? இல்லை போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டனரா? எப்படி கள்ளக்குறிச்சியில் உள்ள நகைக்கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு ஏமாற்றினர். இதில் மேலும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவர்களின் ஒழுங்கீன செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவண தேவர் வலியுறுத்தியுள்ளார்.
    நாகப்பட்டினம்;

    முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

    திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி என்னும் கிராமத்தில் சூர்யா என்ற மாணவன் சாதிய அடையாள கயிறை கையில் கட்டி இருந்ததற்காக இரண்டு சக மாணவர்களால் சாதிவெறியுடன் அடித்து கொலை செய்துள்ளனர். 
    சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் அரங்கேறி வருகின்றன. 

    பள்ளி கல்வித்துறை இதற்கு முட்டுக்கட்டை போடாவிட்டால் எதிர்கால தலைமுறையே நாசமாகி விடும். பள்ளி வளாக–த்துக்குள் செல்போன், போதை பொருட்கள் மாணவர்கள் பயன்படுத்தும் வீடியோக்கள் பரவி வருகிறது. ஆசிரியரையே மாணவன் அடிக்க செல்கிறான் ஆசிரியர்கள் மாணவ ர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். தவறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இப்போது கையில் கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு உயிர் பலியாகி உள்ளது. 

    இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாணவன் சூர்யா குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    வேதாரண்யம் தாலுகா தகட்டூர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக அளித்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம்அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக அளித்த சம்பவம் சுற்று வட்டார கிராமங்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

     வேதாரண்யம் தாலுகா தகட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட மலையன்காடு கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கையை  அதிகரிக்கும்  வகையில் கிராம மக்கள் "நம் பள்ளி" "த ம்பெருமை" என்ற முழக்கத்துடன் மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசை யாக கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

    இதில் இன்டர்நெட் வசதிகளுடன் கூடிய தொலைகாட்சி பெட்டி தண்ணீர் சுத்திகரிப்பான்  குழந்தைகளுக்கு தேவை யான விளையாட்டுபொரு ட்கள், சேர், மற்றும்மின்வி சிறி உள்ளிட்ட ரூபாய் இரண்டுலட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட 125 பொருட்களை வழங்கினார்.

    பின்பு 1950 ல் தொடக்கபட்ட இப் பள்ளியில் நடைபெற்ற முதன்முதலாக நடை பெற்றஆண்டு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார் விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் மாவட்ட கவுன்சிலர் சுப்பையன் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தசாமி, சந்திர சேகரன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் விழா முடிவில் பள்ளி ஆசிரியர் விரசேகரன் நன்றி கூறினார்.
    ×