என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் அகஸ்தியருக்கு திருமணக்கோலத்தில் வேதாரண்யேஸ்வரர் காட்சி அளித்தார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவிலிலுள்ள சாமிக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

    நேற்று சாமிக்கு திருக்கல்யாணம் நடை பெற்று அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார்

    மேலும் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாதர் பண்டார சந்நிதி, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
    நாகை அருகே காமேஸ்வரம் கிராமத்தில் கராத்தே, சிலம்பம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவற்றை கிராமங்கள்தோறும் ஊக்குவித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுந்தமாவடி சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி தற்காப்பு கலை கூடம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில் கராத்தே, சிலம்பம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக், குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன. இதன் மூலம் அழிந்துவரும் நாட்டுப்புற கலைகளான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலையான கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்கள் செய்து காட்டிய வீர சாகசங்கள். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது அதைத்தொடர்ந்து பயிற்சி முடித்த 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு 9 வகையான கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை கீழையூர் ஒன்றிய செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார்

    இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கராத்தே சங்கத் தலைவரும் விழுந்தமாவடி சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி தற்காப்பு கலை கூட ஒருங்கிணைப்பாளருமான ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவுசல்யா இளம்பரிதி, காமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன், வேளாங்கண்ணி தி.மு.க பேரூர் செயலாளர் மரியசார்லி, காமேஸ்வரம் ஊராட்சி நாட்டாண்மை காமராஜ், புனித செபஸ்தியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆரோக்கியதாஸ் பலர் கலந்து கொண்டனர்.
    திருமருகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

    வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன் முன்னிலை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். சேகல் கிளை நிர்வாகி சட்டநாதன் வரவேற்றார். இதில் சேகல் கிராமத்தை சேர்ந்த சுமார் 25 குடும்பத்தினர் மாற்று கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். 

    அவர்களை மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன் வரவேற்றார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் பேரறிவாளன், திருப்புகலூர் முன்னாள் ஊராட்சி மன்ற சுப்பரவேல், பொறுப்பாளர்கள் விடுதலைகனல், சுரேஷ், கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.
    நாகை அருகே சிறுமிக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் மட்டுமே கொண்ட பள்ளியில் வேதாரண்யம் அடுத்துள்ள தகட்டூரை சேர்ந்த தமிழ்செல்வன் (58) பள்ளி தலைமையாசிரியராகவும், ஆசிரியையாக தேவகி (47) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்‌.

    இந்நிலையில் மது போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் அப்பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் குளத்தில் தள்ளி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. 

    இதனால் பெற்றோரிடம் சொல்லத் தயங்கிய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து தனது மகளிடம் தாயார் விசாரித்ததில் தலைமையாசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. 

    தொடர்ந்து புகார் அளிக்க சென்ற பெற்றோரிடம் அந்த ஆசிரியர்க்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு மிரட்டியும், பணம் தருவதாக சொல்லியும் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் நாகை மாவட்ட குழந்தைகள் சேவை அமைப்பு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நேரடியாக சிறுமியின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று பாலியல் தொந்தரவு நடந்துள்ளது என்பதை உறுதி படுத்தினர். 

    இதுதொடர்பாக நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமையாசிரியரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இதுகுறித்து கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் தமிழ்செல்வன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். 

    மேலும் அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை தேவகியை வேறு பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.மேலும் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியரை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிவன்-பார்வதிக்கு சந்தனம் பூசி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்த இடம்.
     
    இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் சிவலிங்கத்திற்கு பின்புறம் திருமண கோலத்தில் சிவனும் பார்வதியும் அமைந்துள்ளனர். இந்த சிவனும் பார்வதிக்கும் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று கையால் அரைக்கப்பட்ட சந்தனம் பூசப்பட்டு காட்சி தருவார்.

     இந்த சந்தனம் ஆண்டு முழுவதும் சாமிமேல் அப்படியே இருக்கும். சென்றாண்டு பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு நேற்று உச்சி காலத்தில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று சாமிக்கு பல்வேறு திரவியங்கள் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்பட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
     
    பின்னர் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலிகை களான சந்தனாதி தைலம் சாம்பிராணி தைலம் போன்ற தைலங்கலால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இன்று உச்சிக்காலத்தில் அகஸ்தியர்க்கு திருக்கல்யாண தரிசனம் நடைபெற்றது. 

    இதையடுத்து மாலையில் கையால் அரைக்கப்பட்ட சந்தனம் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பூசப்பட்டு தீபாரதனை நடைபெற உள்ளது. சிறப்பு அபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதினம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    வேதாரண்யத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    இந்நிலையில் கத்திரி வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. 

    ஆனால் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பள பகுதிகளில் மழை நீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

     மீண்டும் உற்பத்தி துவங்குவதற்கு ஒரு வார காலம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
    திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன குருபூஜை விழாவில் நூல் வெளியீடு விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன திருமடத்தில் நடைபெற்ற மகாகுருபூஜை விழாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

    வேளாக்குறிச்சி ஆதீன முனிபுங்கவர்களில் ஒருவரான ஸ்ரீகாழி மறைஞானதேசிகர் அருளிச்செய்த சிவபுண்ணியத் தெளிவு நூல் வேளாக்குறிச்சி ஆதீன வெளியீடாக, வேளாக் குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட்டார். 

    இதில் தருமை ஆதீனம் ராஜன்கட்டளை ஸ்ரீமத் மாணிக்க வாசக தம்பிரான் சுவாமிகள், சூரியானார் கோவில் ஆதீனம், ஸ்ரீமத் சிவாக்கிரயோகி சுவாமிகள் ஆகியோர் நூலை பெற்று க்கொண்டனர். முன்னதாக முனைவர் ராஜேஸ்வரன், புலவர் விவேகானந்தன் ஆகியோரின் உரையரங்கம் நடைபெற்றது.

    நகை மாவட்டத்தில்க டைமடை பகுதியில் வாய்க்கால்கள், ஆறுகளில் தூர்வாரும் பணிகளை சிறு குறு தொழில் துறை செயலாளர் ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 80, கோடி ரூபாய் மதிப்பில் 4295 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆறு, வடிகால் மற்றும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
    இதைப்போல் டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த பாப்பாகோயில் மற்றும் நரியங்குடி பகுதிகளில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் பாசன வடிகால் வாய்க்கால்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இப்பணிகளை சிறு, குறு தொழில்துறை செயலர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் பாசன வடிகால் வாய்க்காலில் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சிறு, குறு தொழில்துறை செயலர் அருண்ராய் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணை திறப்பிற்குள் இப்பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் எனவும் அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நாகையில்உ ணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வில் கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் ஷவர்மா போன்ற உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வெளிப்பாளையம் வண்டிபேட்டை பகுதியில் மொத்தமாக விற்பனை செய்யும் சிக்கன் இறைச்சிக்கடை குடோனில் இருந்து கெட்டுப்போன சுமார் 250 கிலோ சிக்கன் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

     பின்னர் இறைச்சிக் கடையின் உரிமையாளர் சேக் தாவுதை எச்சரித்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இது போன்று மீண்டும் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தால், கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.

    திருமருகல் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்கள் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டன. 

    கீழப்பூதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்னமரக்குடி, பெருநாட்டான்தோப்பு, மேலப்புதனூர்ஆகிய பகுதிகளில் சுமார்5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரம் இருபுறங்களிலும் இருந்த கருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் சாய்ந்து கிடந்தது

    இதனால் இப்பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதி க்கு ள்ளாகி வந்தனர். இந்நி லையில் இடையூறாகஇருந்த கருவேல மரங்களை ஊராட்சி மன்ற தலைவர் சத்திய மூர்த்தி, வார்டு உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் வெட்டி அகற்றினர்.

    திட்டச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்ட ச்சேரி அடுத்த கொந்தகையில் முத்துமாரியம்மன், மன்னப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்தல், அக்னி கப்பரை வீதிஉலா,சக்தி கரகம் வீதி உலா நிகழ்ச்சி கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிக ழ்வானசாமி வீதிஉலா நேற்றுநடை பெற்றது. இதில்முத்து மாரியம்மன், மன்னப்ப அய்யனார் சாமிகள் வாகனங்களில் எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.
    வேதாரண்யம் அருகே குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ.96 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் அங்கு நகைக்கடை வைத்துள்ளார். இவருக்கும் சின்னசேலத்தைச் சேர்ந்த தியாகு ஆசாரிக்கும் வியாபார ரீதியாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

     தற்சமயம் அட்சய திரிதியை வந்ததால் குறைந்த விலைக்கு அதாவது கிராமிற்கு ரூ.400 குறைத்து தங்கம் வாங்கி தருவதாக கூறினாராம். இதை நம்பி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த பண்டரிநாதன் (65) என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசினாராம். முருகன் 2 கிலோ தங்கம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதையடுத்து கருப்பம்புலத்திற்கு 96 லட்சத்துடன் வந்த முருகனிடம் பண்டரிநாதன் 850 கிராம் தங்கத்தை கொடுத்து விட்டு பாக்கியை நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என அனுப்பி விட்டாராம். 

    இதையடுத்து முருகன் தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகையை கொடுத்து விட்டு தனியே சென்ற போது பண்டரிநாதன் ஆட்களை அனுப்பி முருகனை மிரட்டி அடித்து அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்று விட்டனராம்.

    பாதிக்கப்பட்ட முருகன் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தனிப்படை போலீசார் கருப்பம்புலத்தைச் சோ்ந்த பண்டரிநாதன் (65), கார் டிரைவா் திருச்சி விக்னேஷ் (29), சென்னை பாலகுமார் (32), திருத்துறைப்பூண்டி எழிலூரைச் சேர்ந்த துர்க்காதேவி (42), கருப்பம்புலம் செல்லத்துரை (43), வடமழை மணக்காடு தனுஷ்கொடி (32), திருத்துறைப்பூண்டி மணிமாறன் (25) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

    இவர்களிடம் இருந்து 4 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    ×