search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு பூஜைகள்
    X
    புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு பூஜைகள்

    சிவன்-பார்வதிக்கு சந்தனம் பூசி இன்று சிறப்பு வழிபாடு

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிவன்-பார்வதிக்கு சந்தனம் பூசி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்த இடம்.
     
    இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் சிவலிங்கத்திற்கு பின்புறம் திருமண கோலத்தில் சிவனும் பார்வதியும் அமைந்துள்ளனர். இந்த சிவனும் பார்வதிக்கும் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று கையால் அரைக்கப்பட்ட சந்தனம் பூசப்பட்டு காட்சி தருவார்.

     இந்த சந்தனம் ஆண்டு முழுவதும் சாமிமேல் அப்படியே இருக்கும். சென்றாண்டு பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு நேற்று உச்சி காலத்தில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று சாமிக்கு பல்வேறு திரவியங்கள் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்பட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
     
    பின்னர் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலிகை களான சந்தனாதி தைலம் சாம்பிராணி தைலம் போன்ற தைலங்கலால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இன்று உச்சிக்காலத்தில் அகஸ்தியர்க்கு திருக்கல்யாண தரிசனம் நடைபெற்றது. 

    இதையடுத்து மாலையில் கையால் அரைக்கப்பட்ட சந்தனம் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பூசப்பட்டு தீபாரதனை நடைபெற உள்ளது. சிறப்பு அபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதினம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×