என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hoisting"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளை கொட்டு உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • இன்று இரவு சிம்மவாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை சுவாமிகள் ஆகியோர் வெள்ளி சிம்மாசனத்தில் ஆடி வீதி வழியாக வலம் வருவர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று இரவு சிம்மவாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை சுவாமிகள் ஆகியோர் வெள்ளி சிம்மாசனத்தில் ஆடி வீதி வழியாக வலம் வருவர்.

    இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை இரவு அன்ன வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    அடுத்தபடியாக ஆகஸ்டு 1-ம் தேதி இரவு வெள்ளி சிம்மாசனத்திலும், 2-ம் தேதி இரவு வெள்ளி யானை வாகனத்திலும், 3-ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும், 4-ம் தேதி இரவு வெள்ளி கிளி வாகனத்திலும், 5-ம் தேதி இரவு புஷ்ப்பல்லக்கு வாகனத்திலும், 6-ம் தேதி இரவு தங்க குதிரை வாகனத்திலும், 7-ம் தேதி இரவு புஷ்ப விமானத்திலும், 8-ம் தேதி இரவு கனக தண்டியல் வாகனத்திலும் அம்மன் அருள் பாலித்த பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக் கொட்டு உற்சவம் தொடங்கி இருப்பது, பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமேசுவரம் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இந்த விழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    ஆடித் திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று கோவில் திருக்கல்யாணம் மண்டபத்தில் வாஸ்து ஜெயந்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து இன்று தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை ஒட்டி ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணை யர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள், பணி ணயாளர்கள் கலந்து கொண்டனர்.

    முக்கிய திருவிழாவான தேரோட்ட நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி நடக்கிறது. ஆகஸ்டு 2-ந் தேதி மாலை மாற்றும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி பர்வதவர்தனி அம்மன்-ராமநாதசாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி யும் நடைபெற உள்ளது. 8-ந் தேதி மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறுவதோடு திருவிழா முடிவடைகிறது.

    ஆடித்திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு 17 நாட்களில் தினசரி சுவாமி-அம்மன் அலங்காரத்துடன் புறப்பாடாகி கோவிலை சுற்றி 4 ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ×