என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2ம் சேத்தியில் அமைந்துள்ள ஆனந்த காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2ம் சேத்தி செட்டியார்குத்தகை ஆனந்த காமாட்சி அம்மன் முனிஸ்வார ஆலய சித்திரை பெருவிழாகடந்த 3 ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது
நாள்தோறும் சுவாமி சிறப்பு அபிஷேகம் வீதியுலா நடைபெற்றது நேற்று மாலை மஞ்சள் விளையாட்டு நடைபெற்றது பின்பு அம்பாள் குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக அம்மனுக்கு மாவிளக்கு போடுதல் காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்தி கடனை செலுத்தினார் இரவு வணவேடிக்கையும் அன்னதானமும் இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில் பக்தர்களுக்கு இனிப்பு கஞ்சி வழங்கபட்டது விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கணேஷ், பொன்னுதுரை, மனோகரன், திருநாவுக்காரத மற்றும் மருளாளிகள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
கடல் சீற்றமாக உள்ளதால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் அசானி புயல் எதிரொலியால் கடும் சீற்றம் காரணமாக கடல்நீர் 100 முதல் 200 மீட்டர் வரை கரை உயர்ந்துள்ளது.
இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அசானி புயல் எச்சரிக்கையாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்
இந்நிலையில் வேதாரண்யம் பகுதி கடற்கரையில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று காலை லேசாக கடல் உள்வாங்கியது. இன்று திடீரென கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் பெருக்கெடுத்து சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் கரை உயர்ந்தது.
இதனால் மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதாமல் இருக்க மேட்டுப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றமாக உள்ளதால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் வலைகளைப் பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் தணிந்து மீன்பிடிக்கச் செல்ல இன்னும் ஓரிரு நாள் ஆகும் என மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் அசானி புயல் எதிரொலியால் கடும் சீற்றம் காரணமாக கடல்நீர் 100 முதல் 200 மீட்டர் வரை கரை உயர்ந்துள்ளது.
இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அசானி புயல் எச்சரிக்கையாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்
இந்நிலையில் வேதாரண்யம் பகுதி கடற்கரையில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று காலை லேசாக கடல் உள்வாங்கியது. இன்று திடீரென கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் பெருக்கெடுத்து சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் கரை உயர்ந்தது.
இதனால் மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதாமல் இருக்க மேட்டுப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றமாக உள்ளதால் பைபர் படகில் சென்று மீன் பிடிக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் வலைகளைப் பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் தணிந்து மீன்பிடிக்கச் செல்ல இன்னும் ஓரிரு நாள் ஆகும் என மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
திருமருகலில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனர். இதற்கு மகளிரணி மாநில குழு துணைத்தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பி னர் அற்புதராஜ் ரூஸ்வல்ட், வட்டத்துணை தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசன், ஜோதிலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொ ண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுவுடையா நன்றி கூறினார்.
நாகை அரசு கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் மாணவ-மாணவி களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாகை அருகே வீட்டில் திருட முயன்ற வாலிபரை துரத்தி பிடித்த பொதுமக்கள் அவரை மரத்தில் கட்டி வைத்து விடிய விடிய காவல் காத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் தெற்குதெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவரது வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரை டவுசர் அணிந்தபடி மர்மநபர் ஒருவர் புகுந்தார்.
இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவனை நோட்டம் விட்டபடியே பின் தொடர்ந்துள்ளனர். இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட அந்த மர்மநபர் அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடிக்க தொடங்கினார். சுமார் 300 மீட்டர் தூரம் ஆங்காங்கே விழுந்து விழுந்து ஓடிய திருடனை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் அவரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து விசாரித்தனர். இதில் அவர் சென்னையை சேர்ந்த வினோத்ராஜ் என்பதும் ஏற்கனவே அதே பகுதியில் காணாமல் போன கணேசன் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து வேளா ங்கண்ணி போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவினால், வினோத்ராஜ் தப்ப விடாமல் விடிய விடிய மக்களே காவல் காத்தனர். இன்று அவரை போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச் சங்க மாநாடு நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதா ரண்யத்தில் நாகை மாவட்ட பாரதி மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கத்தின் 14வது மாநாடு மாவட்ட தலைவர் அமரேசன் தலைமையில் நடைபெற்றது.விழாவில் நகர மன்ற தலைவர் புகழேந்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணைத் தலைவர் எஸ். எஸ்.தென்னரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு நல அலுவலகம் தனிக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும், பச்சிளம் குழந்தைகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடமாடும் சிகிச்சை மைய வாகனம் கிராமங்களுக்குச் சென்று சேவையை தொடங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்கூடம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும், தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
வேதாரண்யம் கோவிலில் நடந்த திருக்கல்யாணத்தில் அகஸ்தியருக்கு திருமணக்கோலத்தில் வேதாரண்யேஸ்வரர் காட்சி அளித்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவிலிலுள்ள சாமிக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
நேற்று சாமிக்கு திருக்கல்யாணம் நடை பெற்று அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார்
மேலும் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாதர் பண்டார சந்நிதி, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
நாகை அருகே காமேஸ்வரம் கிராமத்தில் கராத்தே, சிலம்பம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவற்றை கிராமங்கள்தோறும் ஊக்குவித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுந்தமாவடி சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி தற்காப்பு கலை கூடம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில் கராத்தே, சிலம்பம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக், குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன. இதன் மூலம் அழிந்துவரும் நாட்டுப்புற கலைகளான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலையான கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்கள் செய்து காட்டிய வீர சாகசங்கள். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது அதைத்தொடர்ந்து பயிற்சி முடித்த 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு 9 வகையான கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை கீழையூர் ஒன்றிய செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கராத்தே சங்கத் தலைவரும் விழுந்தமாவடி சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி தற்காப்பு கலை கூட ஒருங்கிணைப்பாளருமான ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவுசல்யா இளம்பரிதி, காமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன், வேளாங்கண்ணி தி.மு.க பேரூர் செயலாளர் மரியசார்லி, காமேஸ்வரம் ஊராட்சி நாட்டாண்மை காமராஜ், புனித செபஸ்தியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆரோக்கியதாஸ் பலர் கலந்து கொண்டனர்.
திருமருகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன் முன்னிலை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். சேகல் கிளை நிர்வாகி சட்டநாதன் வரவேற்றார். இதில் சேகல் கிராமத்தை சேர்ந்த சுமார் 25 குடும்பத்தினர் மாற்று கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.
அவர்களை மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன் வரவேற்றார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் பேரறிவாளன், திருப்புகலூர் முன்னாள் ஊராட்சி மன்ற சுப்பரவேல், பொறுப்பாளர்கள் விடுதலைகனல், சுரேஷ், கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.
நாகை அருகே சிறுமிக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் மட்டுமே கொண்ட பள்ளியில் வேதாரண்யம் அடுத்துள்ள தகட்டூரை சேர்ந்த தமிழ்செல்வன் (58) பள்ளி தலைமையாசிரியராகவும், ஆசிரியையாக தேவகி (47) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மது போதையில் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் அப்பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் குளத்தில் தள்ளி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் பெற்றோரிடம் சொல்லத் தயங்கிய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து தனது மகளிடம் தாயார் விசாரித்ததில் தலைமையாசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து புகார் அளிக்க சென்ற பெற்றோரிடம் அந்த ஆசிரியர்க்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு மிரட்டியும், பணம் தருவதாக சொல்லியும் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்ட குழந்தைகள் சேவை அமைப்பு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நேரடியாக சிறுமியின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று பாலியல் தொந்தரவு நடந்துள்ளது என்பதை உறுதி படுத்தினர்.
இதுதொடர்பாக நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமையாசிரியரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் தமிழ்செல்வன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
மேலும் அப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை தேவகியை வேறு பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.மேலும் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியரை கைது செய்தனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிவன்-பார்வதிக்கு சந்தனம் பூசி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்த இடம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் சிவலிங்கத்திற்கு பின்புறம் திருமண கோலத்தில் சிவனும் பார்வதியும் அமைந்துள்ளனர். இந்த சிவனும் பார்வதிக்கும் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று கையால் அரைக்கப்பட்ட சந்தனம் பூசப்பட்டு காட்சி தருவார்.
இந்த சந்தனம் ஆண்டு முழுவதும் சாமிமேல் அப்படியே இருக்கும். சென்றாண்டு பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு நேற்று உச்சி காலத்தில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று சாமிக்கு பல்வேறு திரவியங்கள் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்பட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலிகை களான சந்தனாதி தைலம் சாம்பிராணி தைலம் போன்ற தைலங்கலால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இன்று உச்சிக்காலத்தில் அகஸ்தியர்க்கு திருக்கல்யாண தரிசனம் நடைபெற்றது.
இதையடுத்து மாலையில் கையால் அரைக்கப்பட்ட சந்தனம் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பூசப்பட்டு தீபாரதனை நடைபெற உள்ளது. சிறப்பு அபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதினம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கத்திரி வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.
ஆனால் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பள பகுதிகளில் மழை நீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் உற்பத்தி துவங்குவதற்கு ஒரு வார காலம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.






