என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்.
    X
    திருமருகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்.

    அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

    திருமருகலில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனர். இதற்கு மகளிரணி மாநில குழு துணைத்தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பி னர் அற்புதராஜ் ரூஸ்வல்ட், வட்டத்துணை தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசன், ஜோதிலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொ ண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுவுடையா நன்றி கூறினார்.
    Next Story
    ×