என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருப்பூண்டியில் தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் சென்னை சுற்றுச்சூழல் துறை இணைந்து காற்று மாசுபாடு நீர் மாசுபாடு என்ற தலைப்புகளில் நாகை மாவட்ட தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தினர். திருப்பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் துரைக்கண்ணன் தலைமை தாங்கினார். 

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசு பொருளும் வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தான் ஆரிப், முன்னாள் ஒன்றிய தலைவர் ஞான–சேகரன், ஊராட்சி மன்ற தலைவி ராதிகா சத்யராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் முகமது ரபீக், நீர் தர பரிசோதகர் கோகுலகிருஷ்ணன் சமூக ஆர்வலர்கள் நாகூர் சித்திக் வேளாங்கண்ணி ஆரோக்கிய ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மஞ்சப்பை மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்க–ப்–பட்டன. 

    முன்னதாக தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் வரவேற்புரை நல்கினார். பள்ளி தேசிய பசுமைப்படை ஆசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.
    நாலுவேதபதி கின்னஸ் பார்க் மைதானத்தில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட்: போட்டியில் வேதாரண்யம் அணி வெற்றி பெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே நாலுவேதபதி கின்னஸ் பார்க் மைதானத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 

    இதில் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை, நாகை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 24 அணிகளின் வீரர்களுடன் வேதாரண்யம் அணியினரும் கலந்துகொண்டு விளையா டினர்.போட்டியில் முதல் பரிசான ரூ.50 ஆயிரத்தை வேதாரண்யம் பீனிக்ஸ் அணி பெற்றது. 

    இரண்டாம் இடத்தை ரூ.30 ஆயிரம் நாகை அணியும், மூன்றாம் இடத்தை ரூ.20 ஆயிரம் கீழ்வேளூர் அணியும் பெற்றது. வெற்றிபெற்ற வேதாரண்யம் அணிக்கு என்.வி.ஆர் சுழல் கோப்பையை கராத்தே வீரர் வினோத் பீனிக்ஸ் அணிக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டர் வாசுதேவன் தலைமையிலான பயிற்சி மாணவர்கள் செய்திருந்தனர்.
    பனங்குடி கிராமத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் தாங்கினார்.

    தாசில்தார் அமுதா, தனி தாசில்தார் முத்து முருகேசபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் பனங்குடி கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வரும் 17 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 8 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள், இலவச தையல் இயந்திரம் என சுமார் ரூ.8 லட்சத்து 79 ஆயிரத்து 868 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மண்டல துணை தாசில்தார் யசோதா, திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
    வேதாரண்யம் அருகே ரூ.2.13 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை ஊராட்சியில் அரசின் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது. கோட்டாட்சியர் துரைமுருகன் வரவேற்றார். 

    நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. ஷகிலா, ஊராட்சி தலைவர் கஸ்தூரி, மாவட்ட கவுன்சிலர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கலந்துகொண்ட 326 பயனாளிகளுக்கு ரூ.2.13 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், தையல் எந்திரம், தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை சார்பிலான இடுபொருட்கள் உட்பட அரசின் நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பேசினார்.
     
    முன்னதாக அரசு சார்பில் மருத்துவம், விவசாயம், கல்வி உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்ப ட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டர். 

    நிகழ்ச்சியில் வேதார ண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி, ஒன்றிய ஆணையர் அண்ணாதுரை, தோட்டகலைத்துறை இணை இயக்குநர் திவ்யா, அலுவலர்கள் சிவராமகிருஷ்ணன், வைரமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர்ராஜன், டி.எஸ்.பி. முருகவேல் அரசு அதிகாரிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டனர். 
    தாசில்தார் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    திருமருகல் அருகே திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட 7 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    இதில் புறாகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சுபிக்ஷாமற்றும் நிவேதா ஆகிய இரண்டு மாணவிகள் தேர்ச்சி பெற்று ள்ளனர். 

    தேர்ச்சி பெற்ற இரண்டு மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஆண்டுதோறும் ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது. கடந்த வருடம் நடைபெற்ற தேர்விலும் இப்பள்ளி மாணவர்கள் நான்குபேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற மாணவ ர்களை ஊக்குவித்த தலைமை ஆசிரியரையும், ஆசிரியர்களையும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.
    வடுகச்சேரியில் மருத்துவமனை கட்ட ரூ.80 லட்சம் பூர்விக நிலபத்திரத்தை கலெக்டரிடம் விவசாயி வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடுகச்சேரி ஊராட்சியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல வேண்டுமானால் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

     இதனை போக்கும் வகையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேஸ்வரன் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான 37 சென்ட் பூர்வீக இடத்தை மருத்துவமனை கட்ட வழங்கியதோடு இல்லாமல், அந்த இடத்தில் குடியிருந்த 16 குடும்பங்களுக்கு , தனது சொந்தமான 6 லட்சம் மதிப்பிலான நிலத்தில் மாற்று இடம் வழங்கியுள்ளார்.

    இதற்கு உரிய பத்திரத்தை நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ்யிடம் அதற்கான பத்திரத்தை நேரில் வழங்கினார். இந்த மனித நேயம் உள்ள செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

    நாகை மாவட்டத்தில் மோட்டார் வாகன அலுவலர்கள் நடத்திய சோதனையில் 20 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்கான்களை பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி உத்தரவின் பேரில் போக்கு வரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் குறிப்பாக தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏர்கான்) பயன்படுத்தபடுகிறதா? என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் மோட்டார் வாகன அலுவலர்கள் திடீர் சோதனைஇரண்டு வார காலமாக மேற்கொள்ள ப்பட்டது. 

    இச்சோதனையில் 20 தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில் அதிகஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    திருமருகல் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தர்ணா சாமி கோவில் அமைந்துள்ளது. 

    இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 

    இதை தொடர்ந்து மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதியுலா நேற்று முதல் இரவு நடைபெற்றது. இதில் பெரியநாயகி அம்மன், பெத்தர்ணா சாமி வாகனங்களில் வீதி உலா ரதக்காவடி உடன் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    வேதாரண்யத்தில் மின்கசிவால் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வண்டுவஞ்சேரி ஊராட்சி வெள்ளி கிடங்கு பகுதியில் வசிப்பவர்  ரத்தினசாமி (63)  நேற்று இவர் வீட்டில் இருந்த போது எதிர்பாராத விதமாக மின் கசிவின் காரணமாக கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

     மேலும் வாய்மேடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் வந்த வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி மற்றும்  தீயணைப்பு அலுவலர்கள் வீட்டில் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

    இதில் வீட்டிலுள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது வீட்டின் சேத மதிப்பு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
     
    சம்பவ இடத்திற்குவந்த கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குமார், ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் வீட்டிற்கு தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் நிதியுதவியும் வழங்கினர்.
    திருமருகல் அருகே வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் கீழப்பூதனூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.முகாமில் திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு கலைச்செல்வன் முன்னிலை வகித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    விவசாயிகளுக்கு மண் மாதிரி மற்றும் நீர் மாதிரி எடுத்து ஆய்வகத்தில் ஒப்படைக்கும் செயல்முறை குறித்தும் மண் மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்தும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் சுதா எடுத்துரைத்தார்.

    சகோதரத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி மற்றும் கூட்டுறவு துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டு விரைவாக எடுத்துரைத்தனர்.இந்த முகாமில் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பல், ஏர்வாடி, பனங்குடி மற்றும் போலகம் கிராமங்களில் முகாம்கள் நடைபெற்றது.
    வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே புஷ்பவனம், நாலுவேதபதி உட்பட பல்வேறு மீனவ கிராமங்களில் நாகை இந்திய கடற்படை பாதுகாப்பு குழும போலீஸ் மற்றும் மீனவர்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு ஆலோசணைக் கூட்டம் நாகை முகாம் லெப்டினட் கமாண்டர் கர்மீந்தர் சிங் தலைமையில் நடந்தது.

    கூட்டங்களில் மீனவ பிரதிநிதிகளிடம் பேசிய கடற்படை அதிகாரிகள் கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் எந்த குற்ற சம்பவங்களுக்கும் மீனவர்கள் துணை போகாமல் குற்றங்கள் மற்றும் கஞ்சா, போதை பொருள்கள் கடத்தல், அந்நியர்கள், படகுகள் வருகைகள் குறித்து உரிய நேரத்தில் போலீஸ் மற்றும் கடற்படையினருக்கு தகவல் தெரிவித்து உதவ வேண்டும் என்றும், கரை ஒதுங்கும் பொருள்கள், சந்தேகநபர்கள் செயல்பாடுகள் குறித்தும் தகவல் தெரிவித்து உதவ வேண்டும் என்றும் பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்தும் வேண்டுகோள் விடுத்தும் பேசினர்.
     
    கூட்டத்தில் மீன்வளத்துறை மேற்பா–ர்வையாளர் விக்னேஷ், கடற்படை வீரர்கள் ராஜேஷ், நவீன், அலோக் குமார் உட்பட அதிகாரிகளும் ரமேஷ், தினேஷ், முருகானந்தம் உள்ளிட்ட மீனவ பஞ்சாயத்தார் தலைமையிலான மீனவ ர்களும் கலந்துகொண்டனர்.
    வேதாரண்யம் பகுதியில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மை துறையினர் நேரடி செயல் விளக்கமளித்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், தாமரைபுலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலில் தென்னை மரங்களில் அதிக அளவு வெள்ளை ஈ (ருகோஸ் சுருள் நோய்) தாக்குதல் காணப்படுகிறது. இந்த நோய் தென்னை வாழை, மா, முந்திரி, கொய்யா, சீதாப்பழம் ஆகிய சாகுபடியிலும் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நோயை கட்டுப்படுத்த நாலுவேதபதியில் வேளாண்மைதுறையினர் நேரடி செயல்விளக்கம் அளித்தனர் பின்பு விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் கூறிய ஆலோசனையில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் மஞ்சள் நிறம் வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மை உடையதால் மஞ்சள் நிறத்தில் பாலீத்தின் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவி ஒட்டும் பொறிகளை ஐந்தடி நீளம் ஒன்னரை அடி அகலத்தில் ஏக்கருக்கு பத்து என்ற எண்ணிக்கையில் 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம், தென்னை மரங்களில் நான்கடி உயரத்தில் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து அதில் வெள்ளை கிரீஸ் அல்லது ஆமணக்கு எண்ணெய் தடவி வைக்கலாம்

    இதில் வெள்ளை ஈ ஒட்டிக்கொள்ளும் மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிர, செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம் பூச்சிதாக்கப்பட்ட தென்னை மரங்களிலே மேல் தலிபான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்

    தென்னையில் மஞ்சள் நிற பூக்கள் தரும் சனப்பு செனடுப்பூ காராமணி போன்ற பயிர்களை தென்னையில் ஊடுபயிராக விதைப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டு கண்ணாடி இறக்கைபூச்சி என்கார்னியா ஒட்டுண்ணிகளை பெருக்கத்தை அதிகரித்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம் அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதன் போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிர்ப்பூக்கிகள் வளர்ப்பதற்கு உரிய சூழலை மேம்படுத்த சாலச் சிறந்ததாகும்

    எனவே தென்னை விவசாயிகள் இந்த ஆலோசனையை பின்பற்றி வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்திடலாம் என வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார் உடன் வேளாண்மை அலுவலர்கள் நவீன், யோகேஷ் உதவி வேளாண்மை அலுவலர் கனிமொழி மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
    ×