என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கீழ்வேளூர் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம்,  கீழ்வேளூர் அடுத்த இருக்கை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த  ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோவிலில்  பங்குனி தீமிதி திருவிழா கடந்த 13-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

     திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  

    ஒருவர் பின்  ஒருவராக பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர்  சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று  சுவாமி தரிசனம் செய்தனர்
    திருப்பூண்டி அருகே உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு மகாேஹாமம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

    யாகத்தில் உலக நன்மை வேண்டியும், உலக அமைதிகாகவும், விவசாயம் செழிக்கவும் போதிய மழை பொழிய ஹோமம் நடைபெற்றது. 


    பெரிய யாக குண்டம் அமைத்து 108 மூலிகை பொருட்கள் மற்றும் காய்கள், பழங்கள், கொண்டு மஹா யாகம் நடைபெற்றது. நிறைவாக யாகம் பூர்ணாஹூதியுடன் முடிவடைந்தது. 

    பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகையில் சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மதுபானம் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் நாகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகை பாலையூர் பகுதியில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

    இதையடுத்து பாலையூர் பிள்ளையார் கோவில் பகுதியில் சாராயம் விற்பனை செய்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

     விசாரணையில் அவர்கள் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது22), ஜெல்சன் (19), பெருங்க–டம்பனூர் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (19) என்பதும், இவர்கள் புதுச்சேரி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,370 லிட்டர் புதுச்சேரி சாராயம் மற்றும் 250 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கீழ்வேளூர் அருகே குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை இளம்பெண் ஒருவர் பத்திரமாக மீட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அஞ்சுவட்ட த்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் பின்புறம் மேலவீதி அடுத்தகவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்க படாமலும் புதர் மண்டியும் இந்த குளம் உள்ளது. குளத்தின் கரையில் அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த்என்பவ ரின் இரண்டு குழந்தை கள் விளையாடிக் கொண்டி ருந்தன. 

    அப்போது இளைய குழந்தை குளத்தில் உள்ள பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி குளத்தில் விழுந்தது.அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார். 
    இரு குழந்தைகளு ம்தண்ணீ ரில் தத்தளித்து கொண்டி ருந்தனர். 

    இதனை பார்த்த எழிலரசி என்பவர் உடன டியாக குளத்தில் இறங்கி இரண்டு குழந்தை களையும் காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார். இருப்பினும் குழந்தைகளை பத்திரமாக மீட்டார். தனது உயிரை துச்சமென நினைத்து குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசியை அப்பகுதி பொதுமக்களும் ஆசிரியர்களும் பாரா ட்டினர்.

    இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் புருஷோத்தமன் கூறுகையில், எழிலரசியின் செயல் பாராட்டுக்குறியது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளம் மக்களின் பயன்பாட்டில் இருந்தது. தற்போது குளத்தை சுற்றி புதர் மண்டி விட்டது. மேலும் பழைய சுற்றுச்சுவர் பாசி படிந்து சேறும் சகதியுமாக உள்ளது. 

    அறநிலைய துறை இந்த குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
    குத்தாலம் பள்ளியில் தேசிய பசுமைப் படையில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே உள்ள குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படையில் 2021-22 கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இலுப்பை மரக்கன்றுகள் நூறு வளர்த்தமைக்காக ஜெய் ஆகாஷ், ஜீவன் ஆகிய மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காரணத்திற்காக ஜித்தா, தர்ஷினி ஆகியோருக்கும் தூய்மை பராமரித்த லுக்காக பிரியதர்ஷினி என்ற மாணவிக்கும் பசுமை வீரர் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மாணவர்களுக்கு விருது வழங்கினார். முன்னதாக கணித ஆசிரியர் சிவ சண்முகநாதன் வரவேற்றார். 

    தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.

    திட்டச்சேரியில் உள்ள மின்வாரியத்துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேரூராட்சிக்கு சொந்த மான இடத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் மின்வாரி யத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. திட்டச்சேரியில் வீடுகள், கடைகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருமுனை, மும்முனை மின் இணைப்புகள் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேல் மின் வருவாய் ஈட்டக்கூடிய வருவாய் கிராமமாக திட்டச்சேரி உள்ளது.

    இந்த நிலையில் பகல், இரவு என 24 மணி நேரமும் மின் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மின் ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்றதாக அறையாகவும், மின் உபகரணங்களை வைக்கும் அறையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதம் அடைந்து உள்ளது. இந்த சேதம் அடைந்த கட்டிடத்திலேயே தற்போது வரை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து உண்டாக்கும் நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழை நீர் கசிவதால் கணினி மற்றும் உபகரணங்கள் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மின்கட்டணம் செலுத்து வதற்கு தனியார் கணினி மையங்களை நோக்கி செல்வதாகவும் அங்கு ரூ.10 முதல் 50 வரை பில் செலுத்த கமிஷனாக பெறப்படுகிறது எனவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் தேன் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5000 ஏக்கரில் மா சாகுபடி உள்ளது. ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5,000 டன் மாங்காய் விற்பனை செய்வது வழக்கம். கடந்த 2018 ம் ஆண்டு வீசிய கஜா புயலால் இந்த பகுதியில் உள்ள மாந்தோப்புகள் முற்றிலும் சேதமடைந்து.

    இந்த நிலையில் சேதமடைந்த மாமரங்களை விவசாயிகள் பராமரித்து தற்போது துளிர்விட்டு மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் பூத்து குலுங்குகிறது. தற்போது மாமரம் பூத்து பிஞ்சு விட ஆரம்பித்திருப்பதால் காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என மா விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது மா பூக்கள் கருக துவங்கியுள்ளது.

    தேன்பூச்சி தாக்குதலாலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு பூக்கள் கருகி வருகிறது. பூத்த மரங்களும் அதிகளவில் காய்க்கவில்லை இந்த ஆண்டு மா விளைச்சல் நன்றாக என நினைத்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் போதிய விளைச்சல் இல்லதா நிலையில் சரியான விலையும் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே வேளாண்மை துறையினர் மா பூக்களாலில் ஏற்படும் கருகல் நோயை கட்டுபடுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என மா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்பிடி தடைக்கால நிவாரணத்வேதை உயர்த்தி வழங்க மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    வேதாரண்யம்:

    ஒவ்வொரு ஆண்டும் மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலமாக அரசு அறிவித்து உள்ளது இந்த 60 நாட்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க விசை படகுகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. 

    இந்த காலகட்டத்தில் விசைபடகுகள், பைபர் படகுகளை சீரமைப்பது, என்ஜூன் சர்வீஸ் செய்வது, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.

    இதற்கான செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகமாக உயர்ந்து வருகிறது. அனைத்து பொருட்களும் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. ஆனால் அரசு அறிவித்த தடைகால நிவராணம் தொகை ரூ.5 ஆயிரம் இதுவரை மீனவர்களுக்கு கிடைக்கவில்லை.

    தடை காலத்தின்போதே நிவராண தொகை கிடைத்தால் மீனவர்களுக்கு உதவியாக இருக்கும். 

    மேலும் புதுச்சேரி அரசு தடை காலத்தில் ஆண்டுதோறு ம் விசை படகுகள் சீரமைப்பு பணிக்கு ரூ.20 ஆயிரம், பைபர் படகுக்கு ரூ.3 ஆயிரம், ரேசன் கார்டுக்கு ரூ. 2500 வழங்கி வருகிறது.

     இதேபோல் தமிழக அரசு தமிழக மீனவர்களுக்கு தடை கால நிவராணம் வழங்க வேண்டும். தற்போது தடை கால நிவராணமாக தமிழக அரசு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    வேதாரண்யம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

     வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கத்தரிப்புலம், செட்டிபுலம், ஆயக்காரன்புலம், தகட்டூர் ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமானப் பணிகளையும், நாகக்குடையான், கத்தரிப்புலம் ஊராட்சியில் 'நடைபெற்று வரும் வீடு கட்டும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தென்னம்புலம், கருப்பன்காடு பகுதி வரை பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் ரூ.596.43 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும் தகட்டூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், கத்தரிப்புலம், தகட்டூர் ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமுதாய பண்ணைக்குட்டை அமைக்கும் பணியினையும்ெசட்டிப்புலம், ஆயக்காரன்புலம்-4 ஊராட்சிகளில் தலா ரூ.1.76 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் புனரமைக்கும் பணியினையும், 

    ஆயக்காரன்புலம்-4ம் சேத்தியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அப்பணியினை விரைந்து முடிக்க  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
    பின்னர், வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா, கொய்யாசெடி நடவுவயல், தென்னை  முந்திரி ஒட்டுக்கன்றுகள், முருங்கை கன்றுகள் போன்றவைகள் உற்பத்தி செய்வதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் ஜான்பிரிட்டோ, இளநிலை பொறியாளர் அருண்ராஜ், ஒன்றிய பொறியாளர்கள் வேல்கண்ணன், ஜான்பிரிட்டோ, அருள்ராஜன்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் .வீரமணி, ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    வேதாரண்யம் தொடக்கப்பள்ளியில் கேக் வெட்டி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவை ஆசிரியர்கள் நடத்தினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வடமழை ரஸ்தா தொடக்கப்பள்ளி 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

     பள்ளிகளில் வழக்கமாக ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றால் மற்றும் பணி ஓய்வு பெற்றால் பாராட்டு விழா நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 25 மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இணைந்து பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பள்ளியை விட்டு பிரிந்து செல்லும் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் விருந்தும் வைத்தனர்.

     நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் கருணாநிதி, அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பரிசுகளும் ஆசிரியர்கள் வழங்கி மகிழ்ந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து புகைப்படமும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். ஐந்து ஆண்டுகளில் பள்ளியில் ஆசிரியர்களுடன் ஒன்றாக இருந்து பழகிய மாணவ- மாணவியர்கள் கண்ணீர் மல்க விடை பெற்றனர்.

     பள்ளி தொடங்கிய 64 ஆண்டுகளில் இப்பள்ளியில் இது போன்ற ஒரு விழா நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×