search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

    மீன்பிடி தடைக்கால நிவாரணத்வேதை உயர்த்தி வழங்க மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    வேதாரண்யம்:

    ஒவ்வொரு ஆண்டும் மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலமாக அரசு அறிவித்து உள்ளது இந்த 60 நாட்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க விசை படகுகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது. 

    இந்த காலகட்டத்தில் விசைபடகுகள், பைபர் படகுகளை சீரமைப்பது, என்ஜூன் சர்வீஸ் செய்வது, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.

    இதற்கான செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகமாக உயர்ந்து வருகிறது. அனைத்து பொருட்களும் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. ஆனால் அரசு அறிவித்த தடைகால நிவராணம் தொகை ரூ.5 ஆயிரம் இதுவரை மீனவர்களுக்கு கிடைக்கவில்லை.

    தடை காலத்தின்போதே நிவராண தொகை கிடைத்தால் மீனவர்களுக்கு உதவியாக இருக்கும். 

    மேலும் புதுச்சேரி அரசு தடை காலத்தில் ஆண்டுதோறு ம் விசை படகுகள் சீரமைப்பு பணிக்கு ரூ.20 ஆயிரம், பைபர் படகுக்கு ரூ.3 ஆயிரம், ரேசன் கார்டுக்கு ரூ. 2500 வழங்கி வருகிறது.

     இதேபோல் தமிழக அரசு தமிழக மீனவர்களுக்கு தடை கால நிவராணம் வழங்க வேண்டும். தற்போது தடை கால நிவராணமாக தமிழக அரசு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×