என் மலர்
நாகப்பட்டினம்
தலைஞாயிறில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைஞாயிறு ஒன்றியகுழுத்தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா வரவேற்றார்.
தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கிய பேரணி மேலத்தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைந்தது.விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களுக்கும் வணிக வளாக நிறுவனங்களுக்கும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
முடிவில் சுகாதார ஆய்வாளர் பட்டாபிராமன் நன்றி தெரிவித்தார்.
திருமருகல் அருகே சாராய கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி தேப்பி–ராமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகுமார் மகன் அபிமன்யு (வயது 20). இவர் கடந்த 15-ம் தேதி பாண்டிச்சேரியில் இருந்து திருவாரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சாராயத்தை மூட்டையில் வைத்து கடத்தி சென்றுள்ளார்.
அப்போது அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் அபிமன்யுவை விரட்டி பிடிக்க முயன்றுள்ளார்.அப்போது மோட்டார் சைக்கிளை விட்டு அபிமன்யு தப்பி சென்று தலைமறைவானார்.
இந்த நிலையில் திருக்கண்ணபுரம் போலீசார் அபிமன்யு மீது வழக்கு பதிவு செய்து அபிமன்யுவை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அபிமன்யுவை திருப்புகலூர் கடைத்தெருவில் கைது செய்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்து சிறையில் அடைத்தார்.
வேதாரண்யம் பகுதியில் கோடைக்கால நிலக்கடலை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், பெரியகு த்தகை, நாலுவேதபதி, செட்டிபுலம், கத்தரிப்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500 ஏக்கரில் கோடைக்காலத்தில் 90 நாட்களில் மகசூல் தரக்கூடிய நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நிலக்கடலை சாகுபடிக்கு தண்ணீரை மோட்டார் மூலம் இறைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நிலக்கடலை பூத்து பிஞ்சு விட ஆரம்பித்துள்ள நிலையில் செடியில் வெள்ளை நோய் மற்றும் மஞ்சள்புள்ளிநோய் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது இதனால், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக கடலை சாகுபடியை பார்வையிட்டு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திட்டச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமநாதன் வரவேற்றார்.
சித்த மருத்துவர் அஜ்மல்கான் முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி டெங்கு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். முன்னதாக டெங்கு குறித்த உறுதி மொழியை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த இருக்கை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 13-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஒருவர் பின் ஒருவராக பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
திருப்பூண்டி அருகே உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு மகாேஹாமம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
யாகத்தில் உலக நன்மை வேண்டியும், உலக அமைதிகாகவும், விவசாயம் செழிக்கவும் போதிய மழை பொழிய ஹோமம் நடைபெற்றது.
பெரிய யாக குண்டம் அமைத்து 108 மூலிகை பொருட்கள் மற்றும் காய்கள், பழங்கள், கொண்டு மஹா யாகம் நடைபெற்றது. நிறைவாக யாகம் பூர்ணாஹூதியுடன் முடிவடைந்தது.
பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகையில் சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மதுபானம் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் நாகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகை பாலையூர் பகுதியில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து பாலையூர் பிள்ளையார் கோவில் பகுதியில் சாராயம் விற்பனை செய்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது22), ஜெல்சன் (19), பெருங்க–டம்பனூர் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (19) என்பதும், இவர்கள் புதுச்சேரி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,370 லிட்டர் புதுச்சேரி சாராயம் மற்றும் 250 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ்வேளூர் அருகே குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை இளம்பெண் ஒருவர் பத்திரமாக மீட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அஞ்சுவட்ட த்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் பின்புறம் மேலவீதி அடுத்தகவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்க படாமலும் புதர் மண்டியும் இந்த குளம் உள்ளது. குளத்தின் கரையில் அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த்என்பவ ரின் இரண்டு குழந்தை கள் விளையாடிக் கொண்டி ருந்தன.
அப்போது இளைய குழந்தை குளத்தில் உள்ள பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி குளத்தில் விழுந்தது.அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார்.
இரு குழந்தைகளு ம்தண்ணீ ரில் தத்தளித்து கொண்டி ருந்தனர்.
இதனை பார்த்த எழிலரசி என்பவர் உடன டியாக குளத்தில் இறங்கி இரண்டு குழந்தை களையும் காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார். இருப்பினும் குழந்தைகளை பத்திரமாக மீட்டார். தனது உயிரை துச்சமென நினைத்து குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசியை அப்பகுதி பொதுமக்களும் ஆசிரியர்களும் பாரா ட்டினர்.
இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் புருஷோத்தமன் கூறுகையில், எழிலரசியின் செயல் பாராட்டுக்குறியது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளம் மக்களின் பயன்பாட்டில் இருந்தது. தற்போது குளத்தை சுற்றி புதர் மண்டி விட்டது. மேலும் பழைய சுற்றுச்சுவர் பாசி படிந்து சேறும் சகதியுமாக உள்ளது.
அறநிலைய துறை இந்த குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.






