search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசி
    X
    குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசி

    குளத்தில் மூழ்கிய குழந்தைகளை மீட்ட இளம்பெண்

    கீழ்வேளூர் அருகே குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை இளம்பெண் ஒருவர் பத்திரமாக மீட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அஞ்சுவட்ட த்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் பின்புறம் மேலவீதி அடுத்தகவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்க படாமலும் புதர் மண்டியும் இந்த குளம் உள்ளது. குளத்தின் கரையில் அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த்என்பவ ரின் இரண்டு குழந்தை கள் விளையாடிக் கொண்டி ருந்தன. 

    அப்போது இளைய குழந்தை குளத்தில் உள்ள பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி குளத்தில் விழுந்தது.அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார். 
    இரு குழந்தைகளு ம்தண்ணீ ரில் தத்தளித்து கொண்டி ருந்தனர். 

    இதனை பார்த்த எழிலரசி என்பவர் உடன டியாக குளத்தில் இறங்கி இரண்டு குழந்தை களையும் காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார். இருப்பினும் குழந்தைகளை பத்திரமாக மீட்டார். தனது உயிரை துச்சமென நினைத்து குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசியை அப்பகுதி பொதுமக்களும் ஆசிரியர்களும் பாரா ட்டினர்.

    இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் புருஷோத்தமன் கூறுகையில், எழிலரசியின் செயல் பாராட்டுக்குறியது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளம் மக்களின் பயன்பாட்டில் இருந்தது. தற்போது குளத்தை சுற்றி புதர் மண்டி விட்டது. மேலும் பழைய சுற்றுச்சுவர் பாசி படிந்து சேறும் சகதியுமாக உள்ளது. 

    அறநிலைய துறை இந்த குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
    Next Story
    ×