search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மாமரம்.
    X
    தேன் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மாமரம்.

    தேன் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு

    வேதாரண்யம் பகுதியில் தேன் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5000 ஏக்கரில் மா சாகுபடி உள்ளது. ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5,000 டன் மாங்காய் விற்பனை செய்வது வழக்கம். கடந்த 2018 ம் ஆண்டு வீசிய கஜா புயலால் இந்த பகுதியில் உள்ள மாந்தோப்புகள் முற்றிலும் சேதமடைந்து.

    இந்த நிலையில் சேதமடைந்த மாமரங்களை விவசாயிகள் பராமரித்து தற்போது துளிர்விட்டு மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் பூத்து குலுங்குகிறது. தற்போது மாமரம் பூத்து பிஞ்சு விட ஆரம்பித்திருப்பதால் காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என மா விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது மா பூக்கள் கருக துவங்கியுள்ளது.

    தேன்பூச்சி தாக்குதலாலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு பூக்கள் கருகி வருகிறது. பூத்த மரங்களும் அதிகளவில் காய்க்கவில்லை இந்த ஆண்டு மா விளைச்சல் நன்றாக என நினைத்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் போதிய விளைச்சல் இல்லதா நிலையில் சரியான விலையும் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே வேளாண்மை துறையினர் மா பூக்களாலில் ஏற்படும் கருகல் நோயை கட்டுபடுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என மா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×