என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முக்குலத்து புலிகள் கட்சி
நீங்கள் தேடியது "முக்குலத்து புலிகள் கட்சி"
இந்திய அரசு கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்குலத்து புலிகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
1974-ம் ஆண்டு வரை இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழகத்தின் சேதுபதி மன்னருக்கு சொந்தமான இடம் கச்சத்தீவு. தமிழக அரசை கேட்காமல் பிரதமர் இந்திராகாந்தி தன்னிச்சையாக கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் தாரை வார்த்து விட்டார். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்போது பார்வர்டு ப்ளாக் எம்.பி யாக இருந்த பி.கே.மூக்கையா தேவர் மட்டும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தங்களில் 10 வருடங்களுக்கு இந்திய மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் அனுமதி இருக்கிறது. அந்த அனுமதியை ரத்து செய்து விட்டது மத்திய அரசு. இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை இழந்தனர்.ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும், படகுகள், வலைகளை இழந்துள்ளனர். 2008 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமல் தாரைவார்க்கப் பட்டதால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2011 ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இப்போது இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் இந்திய அரசு தான் நிதி உதவிகள், பெட்ரோலிய பொருட்கள் எல்லாம் உதவி வருகிறது. இந்த சூழலில் தமிழக மீனவர்களின் நலன் கருதியும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் விதமாகவும் கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X