search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்துக்கு இடையூறு"

    • திருவாடானையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இருந்து ஓரியூர் வரை பாண்டுகுடி வழியாக செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் கனரக வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    திருவாடானை அருகே உள்ள ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் அன்னை வேளாங்கண்ணி பேராலயமும் உலக பிரசித்தி பெற்றது.

    இத்திருத்தலங்களின் திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8, 9-ந்தேதிகளில் முடிவடையும். அதே போல் இந்த வருடமும் தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் வழிபட்டு பின்பு வேளாங் கண்ணிக்கு சென்று அங்கு உள்ள புனித ஆரோக்கிய மாதாவை வழிபட பக்தர்கள் நடைபயணமாகவும், வாகனங்களிலும் பயணிக்கின்றனர்.

    பக்தர்களும், வாகன ஓட்டிகளும் திருவாடா னையில் இருந்து பாண்டுகுடி வழியாக ஓரியூர் செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள கருவேல மரங்களால் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    அதே போல் அஞ்சுகோட்டை சாலை பிரிவில் ஓரியூர் செல்ல வழிகாட்டும் பெயர் பலகை இல்லாததாலும் பயணிகள் வழி மாறி செல்வது மிகவும் வேதனையளிக்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்றவும், அஞ்சுகோட்டை சாலை பிரிவில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பாதசாரிகளையும் அச்சுறுத்தி வருவதாக புகார்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கம் நகரில் உள்ள 18 வார்டுகளிலும் குறிப்பாக புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மெயின், மில்லத் நகர், போளூர் சாலை, தளவாநாயக்கன்பேட்டை, மேலப்பாளையம், ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு உள்பட போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகிறது.

    மேலும் கூட்டமாக மாடுகள் சாலையில் வழிமறித்து நிற்பதால் பல்வேறு நேரங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக் கொள்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.

    இது குறித்து பலமுறை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி தெரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பாதுகாத்து வளர்க்காமல் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் விட்டு செல்வதாகவும் இதனால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என சாலைகளில் செல்லும் பாதசாரிகளையும் கால்நடைகள் அச்சுறுத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் உட்பட கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாள ர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என செங்கம் பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • செல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசு வெடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனிப்படை போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூரில் திருமண விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் சட்டவிரோதமாக வெடி போடுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கு போலீசிடம் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். ஆனாலும் பலர் அப்படி செய்வதில்லை. போலீசாருக்கு தெரியாது என்று நினைப்பில் வெடி போட்டு மகிழ்கின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்று செல்லூர் போலீசுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் போலீசார் நேற்று காலை முதல் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அய்யனார் கோவில் மெயின் ரோடு திருமண மண்டபம் முன்பு போலீசாரின் அனுமதியின்றி பட்டாசு வெடித்து போக்கு வரத்துக்கு இடையூறு விளைவித்த, மேலக்குயில்குடி, கீழத் தெருவை சேர்ந்த ராஜா(35) கைது செய்யப்பட்டார்.

    செல்லூர் அய்யனார் கோவில் மெயின்ரோடு, ஆர்.எஸ்.நாயுடு தெரு சந்திப்பில் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (39), கணேசன் (42) ஆகியோரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் செல்லூர் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்துக்கு பேட்டரி மின்கசிவு தான் காரணம் என்ற போதிலும், தனிப்படை போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமத்தில் பஸ் நிலையம் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்தராஜி என்பவரது மகன் ஆறுமுகம் (வயது 22) என்பவர் குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொது மக்களை அவதூறாக பேசினார்.

    இது குறித்து கலவை போலீஸ் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சென்று ஆறுமுகத்தை கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது கஞ்சா வழக்கு நிலு வையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ரோந்து சென்ற போது சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு ரகளை செய்தார். போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்தார். ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தரணி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பொதுமக்களை அச்சுறுத்தியதால் போலீசார் கைது செய்தனர்
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடி யூர் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தைக்கோடியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்க ளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறாக பொதுமக்களை அச்சுறுத்தி வாலிபர் ஒருவர் மிரட்டிக்கொண்டு சுற்றித் திரிந்தார்.

    அவரை போலீசார் எச்சரித்தனர் ஆனால் வாலிபர் மீண்டும் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏலகிரி கிராமம் குள்ள கிழவன் வட்டம் பகுதியை சேர்ந்த சிலம்பர சன் (வயது 36) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துசென்று கொண்டிருக்கும்.
    • கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயப்படாமல் வந்து செல்ல முடியும்.

    குனியமுத்தூர்:

    கோவை உக்கடத்தில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியில் சாலையின் நடுவில் ஒரு பராசக்தி கோவில் உள்ளது. கோவிலின் இருபுறங்களிலும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக சென்றுகொண்டிருக்கும்.

    இந்நிலையில் கோவிலின் வாசலில் ,எந்த நேரமும் நான்கைந்து கால்நடைகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறது. கால்நடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோவிலின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சாலையில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துசென்று கொண்டிருக்கும். இந்த வாகனங்களின் போக்குவரத்திற்கும் இந்த கால்நடைகள் இடையூறாக நடுரோட்டில் நின்று கொண்டிருக்கும். கோவில் வாசலில் கூட்டமாக கால்நடைகள் நிற்பதால் கோவிலுக்கு வரும் பெண்களும் குழந்தைகளும் அச்சமடைந்து திரும்பி செல்லும் நிலை உள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் அனைத்து சாலைகளும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த சூழலிலும் கூட இந்த கால்நடைகள் இங்குதான் அடைக்கலமாக இருந்தது.

    இந்தக் கால்நடைகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கும் பகுதியானது உக்கடம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் இரண்டு கோவில்கள் இவ்வாறு மிகவும் பரபரப்பாக காணப்படும் இடம் ஆகும்.

    சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்தும் சீராகும். கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயப்படாமல் வந்து செல்ல முடியும்.

    ×