போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

குடிபோதையில் அட்டூழியம் போலீசார் விசாரணை
போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமத்தில் பஸ் நிலையம் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்தராஜி என்பவரது மகன் ஆறுமுகம் (வயது 22) என்பவர் குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொது மக்களை அவதூறாக பேசினார்.

இது குறித்து கலவை போலீஸ் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சென்று ஆறுமுகத்தை கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது கஞ்சா வழக்கு நிலு வையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com