என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "obstructing traffic"
- ஜவஹர் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது
- பொதுமக்கள் கடும் அவதி
கரூர்:
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கரூர், ஜவஹர் பஜார் மற்றும் கோவை சாலையில் போக்குவ ரத்துக்கு இடையூறாக. வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கரூர் நகரின் மையப் பகுதியாக உள்ள ஜவஹர் பஜாரில், ஏராளமான துணிக் கடைகள், நகை கடைகள், தாலுகா அலுவலகம், கிளைச்சிறை, மையம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
போக்குவரத்துக்கு இடையூறாக
தினமும் காலை, 8 மணி முதல் இரவு 9 மணி வரை, கரூர், ஜவஹர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் வரும் 24 -ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, புத்தாடைகள், நகைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க நாள்தோறும் கரூர்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கரூர், ஜவஹர் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வருகிறவர்கள் தங்களது கார், டூவிலர் உள்ளிட்ட வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக, இஷ்டத்துக்கு நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றுவிட்டு, பல மணி நேரத்துக்குப் பிறகு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏற் படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொது மக்களிடமிருந்து பணம், கொள்ளை யர்கள் பறித்து செல்ல வாய்ப்பு உண்டு. எனவே, கரூர், ஜவஹர் பஜார். கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துசென்று கொண்டிருக்கும்.
- கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயப்படாமல் வந்து செல்ல முடியும்.
குனியமுத்தூர்:
கோவை உக்கடத்தில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியில் சாலையின் நடுவில் ஒரு பராசக்தி கோவில் உள்ளது. கோவிலின் இருபுறங்களிலும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக சென்றுகொண்டிருக்கும்.
இந்நிலையில் கோவிலின் வாசலில் ,எந்த நேரமும் நான்கைந்து கால்நடைகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறது. கால்நடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோவிலின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சாலையில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துசென்று கொண்டிருக்கும். இந்த வாகனங்களின் போக்குவரத்திற்கும் இந்த கால்நடைகள் இடையூறாக நடுரோட்டில் நின்று கொண்டிருக்கும். கோவில் வாசலில் கூட்டமாக கால்நடைகள் நிற்பதால் கோவிலுக்கு வரும் பெண்களும் குழந்தைகளும் அச்சமடைந்து திரும்பி செல்லும் நிலை உள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் அனைத்து சாலைகளும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த சூழலிலும் கூட இந்த கால்நடைகள் இங்குதான் அடைக்கலமாக இருந்தது.
இந்தக் கால்நடைகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கும் பகுதியானது உக்கடம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் இரண்டு கோவில்கள் இவ்வாறு மிகவும் பரபரப்பாக காணப்படும் இடம் ஆகும்.
சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்தும் சீராகும். கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயப்படாமல் வந்து செல்ல முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்