search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ணை குட்டைகள்"

    • போர்வெல்களுக்கு வரத்து பாதித்து சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
    • மும்முனை மின்சார வினியோகம் பெரும்பாலான பகுதிகளில் இல்லை.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பல்வேறு சாகுபடிக்கு போர்வெல்களில் இருந்து பெறப்படும் தண்ணீரே ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது கூடுதலாக போர்வெல் அமைத்தல், ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்து, கோடை காலம் துவங்கும் போது போர்வெல்களுக்கு வரத்து பாதித்து சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.

    மேலும் 24 மணி நேர மும்முனை மின்சார வினியோகம் பெரும்பாலான பகுதிகளில் இல்லை. எனவே போர்வெல்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை தேக்கி வைத்து பயிர்களுக்கு பாய்ச்ச பண்ணைக்குட்டை அமைக்கும் முறை பயனுள்ளதாக உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- நீரோட்டத்தின் அடிப்படையில் போர்வெல் அமைத்தாலும் கோடை காலங்களில் நீர்வரத்து குறைந்து விடுகிறது. எனவே சில மணி நேரம் மட்டும் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைத்து பின்னர் பயிர்களுக்கு பாய்ச்சுகிறோம். குறிப்பாக பண்ணைக்குட்டைகள் அமைத்து தண்ணீரை தேக்கி பயன்படுத்துகிறோம். முன்பு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், வேளாண்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை வாயிலாக பண்ணைக்குட்டை அமைக்க ஊக்கமளிக்கப்பட்டது. மானியத்திட்டங்களும் செயல்பாட்டில் இருந்தன.

    கடந்த சில ஆண்டுகளாக வறட்சி இல்லாததால் இத்திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த கோடை காலத்திலும் பயிர் சாகுபடி பரப்பு குறையாமல் இருக்க பண்ணைக்குட்டை மானியத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இது குறித்த விழிப்புணர்வையும் விவசாயிகளிடையே ஏற்படுத்த வேண்டும். பண்ணைக்குட்டை அமைப்பதால் மழைக்காலங்களிலும் மழை நீரை சேகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என்றனர்.

    ×