என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட கல்வி அதிகாரி மதிவாணன்.
    X
    பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட கல்வி அதிகாரி மதிவாணன்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

    வேதாரண்யத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை நாகை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து பிளாஸ்டிக் தவிர்த்தல், மாசுபாடு தவிர்த்தல் என்ற கருத்துகளை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசார பேரணி நடத்தினர்.

     பேரணியை நாகை முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஞ்சுகம், வேட்டைக்காரனிருப்பு தலைமையாசிரியர் பீட்டர் பிரான்சிஸ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வீரப்பன், இணைச் செயலாளர் வைத்தியநாதன், செயற்குழு உறுப்பினர் நாகூரான் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் பொய்யாமொழி மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேரணியில் மாணவர்கள் வணிக நிறுவனங்களிலும் வீடுகளிலும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி சென்றனர். விழாவில் தேசிய பசுமைப்படை ஆசிரியர் கண்ணையன் வரவேற்றார் பட்டதாரி ஆசிரியர் ரங்கசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×