என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மண் மாதிரி சேகரிப்பு முகாம்
திருமருகல் அருகே மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் கோபுராஜபுரம் கிராமத்தில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மண்மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நாகை வேளாண்மை இணை இயக்குநர் அகண்டராவ் தலைமை தாங்கினார். மண் சேகரிப்பு முகாமை ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் தொடங்கி வைத்து
சிறப்புரையாற்றினார். இதில் திருமருகல் வேளா-ண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் மண்மாதிரி சேகரிக்கும் முறைப்பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் பயிர்களுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி விளக்கி கூறினார். மாவட்ட மண்பரிசோதனை நிலைய
வேளாண்மை அலுவலர் ஜெயபிரகாஷ் மண்மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம் செய்து காண்பித்து மண்மாதிரி ஆய்வுக்கு அனுப்பும் முறைப்பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முகம்மது சாக்கீர் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story






