என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சாராய எதிர்ப்பு பேரணியை ஆர்.டி.ஓ துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
வேதாரண்யத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தமிழக அரசு மதுவிலக்கு ஆயத்-தீர்வை மற்றும் விளையாட்டு ஆனணயம் சார்பில் கள்ளச்-சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து துவங்கிய பேரணியை வேதாரண்யம் கோட்டாட்சியர் துரை--முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேரணியில் அரசு கலை அறிவியல் கல்லூரி,
ஆர்வி கல்வி நிறுவனங்கள் உட்பட அரசு மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து-கொண்டு முக்கிய விதிகள் வழியாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
பேரணியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கல்லூரி பேராசிரியர் ராஜா உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள் பாலாஜி, மகேந்திரன், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






