என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
    X
    வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடக்கம்

    நாகை மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் சிறப்பு தூர்வரும் பணி 2021-யின் கீழ் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பிடாகை, ஆலத்தூர், பனங்காட்டூர், ஆலங்குடிச்சேரி

    மற்றும் மானாம்பேட்ட பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன்

    ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நீர்வளத்துறை காவிரி வடிநில உட்கோட்டம் நன்னிலம் கட்டுப்பாட்டிலுள்ள பாசன பிரிவு எண் ஒன்று திருமருகல் பராமரிப்பில் இருந்து

    வரும் திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, நரிமணியார் ஆறு, ஆறுகள் மற்றும் ஆறுகளில் கலக்கும் வடிகால் பாசன பிரிவு எண் 1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வருகிறது.  ஆலத்தூர் வடிகால்

    வாய்க்கால் 2 ஆயிரம் மீட்டர் வரை, பனங்-காட்டூர் வடிகால் வாய்க்கால் தொலைதூரம் 2 ஆயிரம் மீட்டர், ஆலங்குடிச்சேரி வடிகால் வாய்க்கால் 4 ஆயிரத்து 500 மீட்டர், தென்பிடாகை வடிகால் வாய்க்கால்

    3 ஆயிரம் மீட்டர் வரை உள்ளது. இவ்வடிகால் வாய்க்கால் மூலம் 656 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பயன் பெறும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காவேரி வடிநில கோட்ட

    செயற் பொறியாளார் சொர்ணகுமார், உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, திருமருகல் திருமருகல் ஒன்றிய ஆத்மா குழுத்தலைவர் செல்வசெங்குட்டுவன், உதவிபொறியார்கள் சரவணண்,

    செல்வகுமார், ஆலத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் லதா அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×