என் மலர்
உள்ளூர் செய்திகள்

அக்னீஸ்வரர் கோவிலில் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா
திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்த மான அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா நடைபெற்றது.
இதில் திருமுறை கருத்தரங்கு மற்றும் நூல் வெளியீட்டு விழாவும் நடைப்பெற்றது.
வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் தலைமையேற்று ஆசி வழங்கினார்.
தொடர்ந்து சூரியனார் கோவில் ஆதீனம் மகாசந்நிதானம் ஆசிவழங்கி தொடர்ந்து திருப்புகலூா் தலவரலாறு நூலினை வேளாக்குறிச்சி ஆதீன குருமகாசந்நிதானம் வெளியிட கும்பகோணம் நீதிமன்ற தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி எஸ்.பிரகாஷ் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து உழவாரப்பணி அரம்பையர் நடனம் மகாஅபிஷேகம் புல்லாங்குழல் இசை சங்கம சமர்ப்பணம் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
Next Story






