search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    சாலை தடுப்பு உலோக தகடுகள் திருடியர் கைது

    வேதாரண்யம் அருகே நெடுஞ்சாலைத்துறை சாலையில் தடுப்பு உலோக தகடுகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாமரைபுலம்- நாகக்குடையான் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் விபத்துகளை தடுப்பதற்கு உலோக தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தடுப்புகளை உடைத்து சுமார் 3 ஆயிரம் மதிப்புள்ள 30 கிலோவை யாரோ திருடிச் சென்று விட்டனர்.

    இது குறித்து வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மதன்குமார் வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான உலோக தகடுகளை திருடிய தாமரைபுலம் மேற்கு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×