என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்
Byமாலை மலர்21 April 2022 7:24 AM GMT (Updated: 21 April 2022 7:24 AM GMT)
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கில் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் 2 கார்களையும் சோதனையிட்டனர்.
அப்போது கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களில் இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து வேதாரண்யம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் 7 பேரும் வேதராண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கஞ்சாவை பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வந்து நள்ளிரவில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கீட்டமைன் என்ற போதை பொருளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
7 பேரும் எங்கிருந்து கஞ்சா மற்றும் போதை பொருளை எடுத்து வந்தனர். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கில் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் 2 கார்களையும் சோதனையிட்டனர்.
அப்போது கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களில் இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து வேதாரண்யம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் 7 பேரும் வேதராண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கஞ்சாவை பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வந்து நள்ளிரவில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கீட்டமைன் என்ற போதை பொருளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
7 பேரும் எங்கிருந்து கஞ்சா மற்றும் போதை பொருளை எடுத்து வந்தனர். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X