என் மலர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் கடைமுகதீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்த படம்.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் முக்கிய உற்சவமான கடைமுக தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மயூரநாதர், ஐயாறப்பர், வதாரண்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர் ஆகிய கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். அப்போது உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
தொடர்ந்து தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் முன்னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். கடைமுக தீர்த்தவாரி விழாவையொட்டி காவிரியின் இரு கரைகளிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தொடர்ந்து தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் முன்னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். கடைமுக தீர்த்தவாரி விழாவையொட்டி காவிரியின் இரு கரைகளிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகராட்சி சார்பில் அனைத்துவித முன் ஏற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சென்னையில் ஒரே நாள் இரவில் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர் போக வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சென்னையில் முக்கிய வியாபார மையமாக உள்ள தி.நகரில் மழை வெள்ளம் தேங்கியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 3 நாட்களுக்கு பிறகே நிலைமை ஒரளவுக்கு சரி செய்யப்பட்டது.
மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு சென்னை மற்றும் புறகர் பகுதிகள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த 6-ந்தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது.
அதே போல் நாளையும் சென்னையில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதாவது, அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து நேற்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு வந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்யவும் வாய்ப்புண்டு.
சென்னையில் ஏற்கனவே மழை பெய்தது போல் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என தெரிகிறது.
இதன் காரணமாகவே வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகராட்சி சார்பில் அனைத்துவித முன் ஏற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் ஏற்கனவே குழு உள்ளது. தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் இந்த குழுவினர் உடனடியாக சென்று மழை நீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் மழை நீர் தேங்கினால் அவற்றை வடிய வைக்க 550-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மரங்கள் சாய்ந்து விழுந்தால் அவற்றை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் எந்திரங்களும் ஒவ்வொரு மண்டலத்திலும் கையிருப்பு உள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள், உஷார் படுத்தப்பட்டு தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைப்பதற்கு சென்னையில் பாதுகாப்பு மையங்களும், நிவாரண முகாம்களும் மீண்டும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக பேரிடர் துறை உயர் அதிகாரி கூறியதாவது:-
ஏற்கனவே பெய்த கன மழையின்போது பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அதே பகுதிகளில் மீண்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பலத்த மழை மீண்டும் பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில்தான் உள்ளது.
தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சென்னையில் ஒரே நாள் இரவில் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர் போக வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சென்னையில் முக்கிய வியாபார மையமாக உள்ள தி.நகரில் மழை வெள்ளம் தேங்கியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 3 நாட்களுக்கு பிறகே நிலைமை ஒரளவுக்கு சரி செய்யப்பட்டது.
மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு சென்னை மற்றும் புறகர் பகுதிகள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த 6-ந்தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது.
அதே போல் நாளையும் சென்னையில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதாவது, அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து நேற்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு வந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு.
இந்த காற்றழுத்த தாழ்வு நாளை சென்னைக்கு அருகே தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரை நோக்கி நெருங்கி வரும் என்று கணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ஏற்கனவே மழை பெய்தது போல் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என தெரிகிறது.
இதன் காரணமாகவே வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகராட்சி சார்பில் அனைத்துவித முன் ஏற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் ஏற்கனவே குழு உள்ளது. தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் இந்த குழுவினர் உடனடியாக சென்று மழை நீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் மழை நீர் தேங்கினால் அவற்றை வடிய வைக்க 550-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மரங்கள் சாய்ந்து விழுந்தால் அவற்றை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் எந்திரங்களும் ஒவ்வொரு மண்டலத்திலும் கையிருப்பு உள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள், உஷார் படுத்தப்பட்டு தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைப்பதற்கு சென்னையில் பாதுகாப்பு மையங்களும், நிவாரண முகாம்களும் மீண்டும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக பேரிடர் துறை உயர் அதிகாரி கூறியதாவது:-
ஏற்கனவே பெய்த கன மழையின்போது பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அதே பகுதிகளில் மீண்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பலத்த மழை மீண்டும் பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில்தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... தனுஷ்கோடி நில அமைப்பில் மாற்றம்- அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கிய கடல்
பொறையாறு-செம்பனார்கோவில் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளளது.
பொறையாறு:
செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொறையாறு துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்ணப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, விசலூர், எடுத்துக்கட்டி சாத்தனூர், கண்ணங்குடி, கிள்ளியூர், டி.மணல்மேடு, மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, கீழையூர், கருவாழக்கரை, காளகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, ஆக்கூர், ஆக்கூர் கூட்டுரோடு, அனப்பன்பேட்டை, மடப்புரம், மாமாகுடி, சின்னங்குடி, சின்னமேடு, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவி, செம்பதனிருப்பு, மற்றும் அதனை சார்ந்த கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முத்தலாக் கூறி விவாகரத்து பெறுவது சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்ட நிலையில் சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் முத்தலாக் கூறி தனது மனைவிக்கு விவாகரத்து வழங்க முடியும். வாட்ஸ்-அப் மூலம முத்தலாக் கூறி விவாகரத்து பெற்ற சம்பவம் கூட நடைபெற்றுள்ளது. இதனால் விவாகரத்து பெறும் பெண்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுவதுண்டு. முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.
சட்டம் கொண்டு வந்தபின் சிலர் முத்தலாக் கூறி விவாகரத்து வழங்கியதாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் பெண் ஒருவர் தனது கணவரிடம் முத்தலாக் கூறச்சொல்லி அந்த கணவர் கூற மறுத்ததால், மனைவியின் உறவினர்கள் அந்த நபரை தாக்கிய சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் கோட்டக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஆசீப். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஆசீப் நடவடிக்கை சரியில்லாததாலும், போதை பழக்கம் இருந்ததாலும், அவரது மனைவியுடன் சேர்ந்த வாழ விரும்பவில்லை.
இதனால் முத்தலாக் கூறி விவாகரத்து தரும்படி கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால், ஆசிப் முத்தலாக் கூற மறுப்பு தெரிவித்ததால், அப்துல் ஆசீப்பை, அவரது மாமனாருடன், மனைவியின் உறவினர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிப்பை தாக்கியதாக ஆறுபேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முத்தலாக் கூற மறுத்ததால் கணவனரை உறவினர்களுடன் சேர்ந்து மனைவி தாக்கிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வக்கீல் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த பெரம்பூர் சென்னியநல்லூர் பெரியதெருவை சேர்ந்தவர் அன்புமணன்(வயது 31). இவர் தனியார் பஸ் டிரைவராக உள்ளார். அன்புமணன் சீர்காழி கரிக்குளம் பகுதி வழியாக தனியார் பஸ் இயக்கி சென்றார். அப்போது எதிரே புதுத்துறை பகுதியை சேர்ந்த வழக்குரைஞர் ராஜேஷ், சிவா, மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ராஜா ஆகியோர் சென்ற காரின் மீது பஸ் மோதி, கார் சைடு கண்ணாடியை உடைத்துவிட்டு பஸ் புதிய பேருந்துநிலையம் சென்றுவிட்டதாம்.
அங்கிருந்து பஸ் வெளியே வரும்போது காரில் வந்தவர்கள் பஸ்சை தடுத்துநிறுத்தி டிரைவரை கடுமையாக திட்டியதோடு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்திருந்த பேருந்து ஓட்டுனரை காவல்நிலையத்திலேயே ராஜேஷ் கடுமையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து அன்புமணன் அளித்த புகாரின் பேரில் வழக்குரைஞர் ராஜேஷ், சிவா, ராஜா ஆகியோர் மீது சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து வக்கீல் ராஜேஷ், சிவா ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜாவை தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணாசிங் சீர்காழி காவல்நிலையத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
உவரியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
நெல்லை:
உவரி பகுதியைச் சேர்ந்த வர் ரமேஷ். இவரது மகள் அல்ட்ரின் ரேஷ்மா (வயது 19). இவர் நெல்லையில் உள்ள விடுதியில் தங்கி இருந்து, ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 11-ந்தேதி கல்லூரி விடுதியில் இருந்து வீடு செல்வதாக கூறி, புது பஸ் நிலையம் சென்றார்.
ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ரமேஷ், பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
உவரி பகுதியைச் சேர்ந்த வர் ரமேஷ். இவரது மகள் அல்ட்ரின் ரேஷ்மா (வயது 19). இவர் நெல்லையில் உள்ள விடுதியில் தங்கி இருந்து, ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 11-ந்தேதி கல்லூரி விடுதியில் இருந்து வீடு செல்வதாக கூறி, புது பஸ் நிலையம் சென்றார்.
ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ரமேஷ், பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை உடனான மயூரநாதர்கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்ந ஆண்டு துலா உற்சவம் கடந்த மாதம் 18-ந் தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டமும் நடந்தது. முன்னதாக. அபயாம்பிகையுடன் மயூரநாதர், பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலை 3 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டமும் நடந்தது. முன்னதாக. அபயாம்பிகையுடன் மயூரநாதர், பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலை 3 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.
பள்ளிதோறும் மாணவர்களை சந்திப்பது, அவர்களது பிரச்சினைகளை பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுப்பது என உளவியல் ஆலோசகர்களுக்கான பணி வரன்முறைகள் நிர்ணயிக்கப்பட்டன.
திருப்பூர்:
கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடந்த 2013ல் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டது. இதில் கல்வி மாவட்டங்களை இணைத்து 10 மண்டலங்களில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிதோறும் மாணவர்களை சந்திப்பது, அவர்களது பிரச்சினைகளை பதிவு செய்வது, ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுப்பது என உளவியல் ஆலோசகர்களுக்கான பணி வரன்முறைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திற்கு ஒரு உளவியல் நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவியல் நிபுணர் தலைமையிலான குழு பள்ளிகள் தோறும் மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். கொரோனாவுக்கு பின் இதன் செயல்பாடு முடங்கியுள்ளது.
இதுகுறித்து கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்வியாளர் மூர்த்தி கூறியதாவது:
பள்ளிகளில் நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை. புகார் கொடுத்தாலும் பள்ளி நிர்வாகங்கள் அந்த புகார்களை முறையாக விசாரிப்பதில்லை. பாலியல் சீண்டல்கள், பருவ மாறுபாடு, உடலியல் சார்ந்த பிரச்சினைகள் என மாணவிகள் முன்வைக்கும் பிரச்சினைகள் ஏராளம்.
இப்பாதிப்புகள் குறித்து பெற்றோர்களிடமும் சொல்ல முடியாமல், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிப்பது வாக்குமூலத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
சில இடங்களில் பெற்றோர்களது அளவுக்கதிகமான கண்டிப்பால், இடைநிற்றலை தழுவ வேண்டி வருமோ என்ற அச்சத்தில் வெளி வட்டாரங்களில் நடக்கும் பிரச்சினைகளை வீட்டில் பகிர்வது குறைந்து வருகிறது. சில பெற்றோர்களுக்கு குழந்தைகள் சொல்வதை கேட்ககூட நேரமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில்:
கொரோனாவுக்கு பின் நடமாடும் உளவியல் ஆலோசனை குழு முடங்கி விட்டது. பள்ளிகள் மீண்டும் செயல்பட துவங்கியது முதல் கடந்த ஒரு மாதமாக தேசிய மகளிர் ஆணையம், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து பள்ளி, கல்லூரிகளில் இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உளவியல் ரீதியான ஆலோசனை குழு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
மயிலாடுதுறை மயூரநாதர்கோவிலில் நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர்கோவில் நாயன்மார்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த புகழ்பெற்ற கோவிலாகும். மயிலாடுதுறையில் துலாக்கட்ட காவிரிக்கரையில் புனித நீராடி அம்மன் மயிலாக இறைவனை பூஜித்ததாகவும், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாதத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவச்சுமைகளை போக்கி கொண்டதாகவும் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ஐப்பசி மாதத்தில் கடைசி 10 நாட்கள் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து கோவில்களின் சாமி மற்றும் அம்மன் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு மயூரநாதர் கோவில், வதாண்யேஸ்வரர் கோவில், படித்துறை விஸ்வநாதர் கோவில், அய்யாரப்பர் கோவில், காசி விஸ்நாதர்கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் துலா உற்சவ விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அப்போது மயூரநாதர், அவையாம்பிகையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண விழா நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு ஐப்பசி மாதத்தில் கடைசி 10 நாட்கள் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து கோவில்களின் சாமி மற்றும் அம்மன் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு மயூரநாதர் கோவில், வதாண்யேஸ்வரர் கோவில், படித்துறை விஸ்வநாதர் கோவில், அய்யாரப்பர் கோவில், காசி விஸ்நாதர்கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் துலா உற்சவ விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அப்போது மயூரநாதர், அவையாம்பிகையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண விழா நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. உண்மையில் மனதளவில் மட்டுமின்றி, உடல் அளவிலும் பெண்கள் பலமிக்கவர்கள்.
* பெண்கள் தனக்கான உடையைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே, வாழ்நாளில் சுமார் ஒரு வருட காலத்தைச் செலவழிக்கின்றனர்.
* ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் பெண்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தங்களது இரண்டு காதுகளால் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களைக் கேட்டு உள்வாங்கும் திறனும் பெண்களுக்கு உண்டு.
* ஆண்களை விட, குறைவாகவே பெண்கள் பொய் பேசுவார்கள். தான் பேசுவது பொய் என்று பிறர் கண்டுபிடிக்காதவண்ணம், உண்மைபோலவே பேசும் திறமை பெண்களிடம் உள்ளது. மேலும் மற்றவர்கள் பேசும் பொய்யை எளிதாக கண்டுபிடிக்கும் திறனும் அவர்களுக்கு உண்டு.
* நுகரும் திறன் பெண்களுக்கு, ஆண்களை விட சற்று கூடுதலாகவே இருக்கும். வண்ணங்களைப் பிரித்துப் பார்க்கும் திறனும் பெண்களுக்கு ஆண்களை விட 20 சதவீதம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களைப் பார்க்க முடியும்.
* ஆண்கள் ஒரு நாளுக்கு 5000 முதல் 7000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்கள் ஒரு நாளுக்கு 20,000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்
களுக்கு, தான் பேசுவதை பிறர் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
* பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. உண்மையில் மனதளவில் மட்டுமின்றி, உடல் அளவிலும் பெண்கள் பலமிக்கவர்கள். வலியை தாங்கும் சக்தி ஆண்களை விட, பெண்களுக்கு அதிகமாக உள்ளது.
* உதட்டுச்சாயம் பயன்படுத்தும்போது நம்மை அறியாமல் அதை விழுங்க நேரிடும். அந்தவகையில் நாள் தோறும் உதட்டுச் சாயம் பயன்படுத்துவதன் மூலம், தன் வாழ்நாளில் பெண்கள் உட்கொள்ளும் உதட்டுச் சாயத்தின் அளவு மட்டுமே 5 கிலோவுக்கும் அதிகமாம்.
* சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட பெண்கள் அதிகமாக கவலைப்படுவார்கள். அதேசமயம் அவர்களால் கவலைகளில் இருந்து சீக்கிரமே மீண்டு வர இயலும். அதுமட்டுமல்லாமல் பிரச்சினைக்கானத் தீர்வையும் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.
* பெண்கள் அதிகமாக அழுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வருடத்திற்கு 30 முதல் 60 முறை பெண்கள் அழுகின்றனர்.
* சுற்றி இருப்பவர்களைத் திருப்திப்படுத்தவும், மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு தன்னை சரிபடுத்திக்கொள்ளவும் பெண்கள் விரும்புவார்கள். முக்கியமாக ஆடை அலங்கார விஷயத்தில் மற்றவர்களின் கருத்தை கவனமுடன் கேட்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.
* தனது கோபத்தைப் பெரும்பாலும் உணர்ச்சிகள் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் பெண்கள் வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் கோபத்தை செயல் வடிவத்தில் வெளிப்படுத்துவார்கள்.
* பெண்கள் அழுவதற்குப் பெரிதாக எந்த காரணமும் தேவை இல்லை. பெரும்பாலான பெண்கள் மற்றவர்கள் அழுவதை பார்த்தாலே, அழுது விடுபவர்களாக இருப்பார்கள்.
* ஆண்களை விட பெண்களே இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
* ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் பெண்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தங்களது இரண்டு காதுகளால் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களைக் கேட்டு உள்வாங்கும் திறனும் பெண்களுக்கு உண்டு.
* ஆண்களை விட, குறைவாகவே பெண்கள் பொய் பேசுவார்கள். தான் பேசுவது பொய் என்று பிறர் கண்டுபிடிக்காதவண்ணம், உண்மைபோலவே பேசும் திறமை பெண்களிடம் உள்ளது. மேலும் மற்றவர்கள் பேசும் பொய்யை எளிதாக கண்டுபிடிக்கும் திறனும் அவர்களுக்கு உண்டு.
* நுகரும் திறன் பெண்களுக்கு, ஆண்களை விட சற்று கூடுதலாகவே இருக்கும். வண்ணங்களைப் பிரித்துப் பார்க்கும் திறனும் பெண்களுக்கு ஆண்களை விட 20 சதவீதம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களைப் பார்க்க முடியும்.
* ஆண்கள் ஒரு நாளுக்கு 5000 முதல் 7000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்கள் ஒரு நாளுக்கு 20,000 வார்த்தைகள் வரை பேசுவார்கள். பெண்
களுக்கு, தான் பேசுவதை பிறர் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
* பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. உண்மையில் மனதளவில் மட்டுமின்றி, உடல் அளவிலும் பெண்கள் பலமிக்கவர்கள். வலியை தாங்கும் சக்தி ஆண்களை விட, பெண்களுக்கு அதிகமாக உள்ளது.
* உதட்டுச்சாயம் பயன்படுத்தும்போது நம்மை அறியாமல் அதை விழுங்க நேரிடும். அந்தவகையில் நாள் தோறும் உதட்டுச் சாயம் பயன்படுத்துவதன் மூலம், தன் வாழ்நாளில் பெண்கள் உட்கொள்ளும் உதட்டுச் சாயத்தின் அளவு மட்டுமே 5 கிலோவுக்கும் அதிகமாம்.
* சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட பெண்கள் அதிகமாக கவலைப்படுவார்கள். அதேசமயம் அவர்களால் கவலைகளில் இருந்து சீக்கிரமே மீண்டு வர இயலும். அதுமட்டுமல்லாமல் பிரச்சினைக்கானத் தீர்வையும் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.
* பெண்கள் அதிகமாக அழுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வருடத்திற்கு 30 முதல் 60 முறை பெண்கள் அழுகின்றனர்.
* சுற்றி இருப்பவர்களைத் திருப்திப்படுத்தவும், மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு தன்னை சரிபடுத்திக்கொள்ளவும் பெண்கள் விரும்புவார்கள். முக்கியமாக ஆடை அலங்கார விஷயத்தில் மற்றவர்களின் கருத்தை கவனமுடன் கேட்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.
* தனது கோபத்தைப் பெரும்பாலும் உணர்ச்சிகள் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் பெண்கள் வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் கோபத்தை செயல் வடிவத்தில் வெளிப்படுத்துவார்கள்.
* பெண்கள் அழுவதற்குப் பெரிதாக எந்த காரணமும் தேவை இல்லை. பெரும்பாலான பெண்கள் மற்றவர்கள் அழுவதை பார்த்தாலே, அழுது விடுபவர்களாக இருப்பார்கள்.
* ஆண்களை விட பெண்களே இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
மழைவிட்டு 4 நாட்களாகியும் நீர் வடியாததால் நெற் பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின. கடந்த 10-ந் தேதி காலை மழை விட்டது. நேற்றுடன் 4 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை.
மாவட்டத்தில் பெருபாலான பகுதிகளில் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நட்ட சம்பா நெற்பயிர்கள், நடவு செய்ய வேண்டிய பாய் நாற்றுகள் மழை நீரில் மூழ்கி உள்ளன.
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு, மூவலூர், மல்லியம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் வாய்க்கால், பட்டமங்கலம் வாய்க்கால்கள் தூர் வாராததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே வடிகால்களை தற்காலிகமாக தூர்வாரி மழைநீரை வடிகட்ட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி பெற்ற பின்னரே இதனை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது ஒரு தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர அவரது குணத்தை அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு நபரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.






