என் மலர்tooltip icon

    மதுரை

    • சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், தனித்தனியாக தேர்கள் போன்ற சப்பரங்களில் எழுந்தருளி காட்சி அளித்து வருகின்றனர்.
    • இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் தனித்தனியாக தேர்கள் போன்ற சப்பரங்களில் எழுந்தருளி காட்சி அளித்து வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    சப்பரம் கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடையும். இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.

    அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.

    • பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா ஆரம்பமாக இருக்கிறது.
    • கடந்த 2 வாரத்தில், 8 ஜல்லிக்கட்டு காளைகள் திருடப்பட்டு உள்ளன.

    மதுரை :

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா, நடக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு ஆரம்பமாக இருக்கிறது.

    அங்கு வாடிவாசலில் தங்களது காளைகளை களம் இறக்கும் நடவடிக்கைகளில் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அதே நேரத்தில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில், 8 ஜல்லிக்கட்டு காளைகள் திருடப்பட்டு உள்ளன. முடுவார்பட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட பாலமேடு போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 4-ந்தேதி அதிகாலையில் 3 காளைகள் திருடப்பட்டனன. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம், 'காளை திருடர்களை' தேடிவருகின்றனர்.

    இதேபோல கடந்த 8-ந்தேதி தத்தனேரியில் பொன்னம்பலராஜதுரை என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை திருடப்பட்டு உள்ளது.

    காளைகள் களவாடப்படுவது காளை வளர்ப்பவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே கண்ணும் கருத்துமாக காளைகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

    இதுகுறித்து கடந்த 4-ந்தேதி திருட்டுபோன, பாலமேடு மஞ்சமலை சுவாமி கோவிலுக்கு சொந்தமான காளையை பராமரித்து வந்த முடுவார்பட்டி அழகப்பன் கூறியதாவது:-

    மஞ்சமலை சுவாமியை வழிபடும் பங்காளிகளாக சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காளைக்கன்று ஒன்றை வாங்கினோம். அந்த கன்றை கண்ணும் கருத்துமாக, எங்கள் வீட்டு பிள்ளையைப் போல எனது பொறுப்பில் வளர்த்து வந்தேன்.

    சில வருடங்களாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று காளையர்களிடம் சிக்காமல் தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்பட எக்கச்சக்க பரிசுகளை பெற்று, மஞ்சமலை சுவாமிக்கும், எங்கள் பங்காளிகளுக்கும் அந்த காளை பெருமை சேர்த்தது. செல்லப்பிள்ளையாக காளை வளர்ந்தது. 4-ந்தேதி எங்கள் வீட்டின் முன்பு காளையை கட்டிப்போட்டு இருந்தோம். அதிகாலையில் மர்மநபர்கள் காளையின் கயிற்றை அறுத்து, திருடிச் சென்றுள்ளனர். எங்களைத்தவிர மற்றவர்கள் காளையின் அருகில் கூட செல்ல முடியாது. ஆனால் மர்மநபர்கள், மயக்க மருந்து செலுத்தியோ, அல்லது வேறு வகையிலோ காளையின் நினைவை கலைத்து, வாகனத்தில் ஏற்றிச் சென்று இருக்க வேண்டும். இதுபற்றி புகார் அளித்து உள்ளோம். எங்கள் காளை மீண்டும் எங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதே நாளில் திருடப்பட்ட மற்றொரு காளையின் உரிமையாளரான கோடாங்கிபட்டி லெட்சுமி கூறியதாவது:-

    சிறிய கன்றுக்குட்டி பருவத்தில் இருந்து வளர்த்து வந்தோம். எங்கள் குலதெய்வத்தின் பெயர் முத்தையன் என்பதை காளைக்கு வைத்து, ஆசை ஆசையாக அழைப்போம். முத்தையா... என்ற சத்தத்தை கேட்ட உடன், அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தும். எங்கள் குடும்பத்தினர் முத்தையன் மீது உயிருக்கு உயிராக இருந்தோம்.எங்கள் வீடு சாலையோரமாக உள்ளது. ஏராளமான மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் எங்கள் முத்தையன் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளான். இதுவரை யாரிடமும் பிடிபட்டதில்லை. எங்களைத்தவிர, வெளிநபர்கள் யாரும் நெருங்கக்கூட முடியாது. கடந்த 4-ந்தேதி இரவு 11.30 மணி அளிவில்தான் காளையை கடைசியாக பார்த்துவிட்டு துங்கினோம். சில மணி நேரம் கழித்து பார்த்தபோது காணவில்லை.3 நாட்களுக்கும் மேலாக காளையை எல்லா பகுதியிலும் தேடினோம். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் குடும்பமே சோகத்தில் உள்ளது. காளையின் நினைப்பாகவே உள்ளது. முத்தையன் மீண்டும் எங்களிடம் வந்து சேருவான் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அதுவரை எங்களால் நிம்மதியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காரணம் என்ன?

    மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றுதிரண்டு தமிழக அளவில் நடத்திய போராட்டங்களுக்கு பிறகு ஜல்லிக்கட்டு மீண்டு வந்துள்ளது. எனவே கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் ஜல்லிக்கட்டு காளைகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு காளைகள் கை மாறின. தற்போது லட்சக்கணக்கான ரூபாய் என அவை மதிப்பிடப்படுகின்றன. இதுவும் மர்மநபர்கள் காளைகளை திருடுவதற்கு ஒரு காரணம். சிலர் ஜல்லிக்கட்டு காளை மோகத்தின் காரணமாகவும் அவற்றை திருடலாம். களத்தில் பரிசு வென்ற காளையை திருடி கைமாற்றினால், அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையிலும் இவ்வாறு வாயில்லா ஜீவன்களுக்கு வஞ்சகம் செய்கின்றனர்.

    மொத்தத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் மதிப்பு மிக்க பொருளாக பார்க்கப்படுகின்றன. இதனால்தான் ஜல்லிக்கட்டு தொடங்க உள்ள நேரத்தில் தொடர்ச்சியாக காளைகள் திருடப்படுகின்றன. சாலையோரங்களில் கட்டிப்போடப்பட்டு இருந்த காளைகள்தான் திருடப்பட்டு உள்ளன. எனவே பாதுகாப்பான இடங்களில் அவை பராமரிக்கப்படும்பட்சத்தில் திருட்டு சம்பவங்கள் தடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    • அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
    • சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரை ரூ.4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

    அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், மனுதாரர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    • மதுரை அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்பட்டது.
    • இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் தற்போது மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் - பசுமலையை இணைக்கும் அழகப்பன் நகர் ரெயில்வே கேட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்து தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

    எனவே அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 18-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • திருமங்கலம் அருகே கல்லூரி மாணவிகள் மாயமானார்கள்.
    • தாய் ரேணுகா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சுவ லட்சுமி(23).

    ராமையா குடும்பத்தினர் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். ராமையா கடந்த 1½ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சுவலட்சுமி அமெரிக்காவில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    செமஸ்டர் தேர்வு முடிந்து 4 மாதத்திற்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார். திரும்பவும் அமெரிக்க செல்ல வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். ஆனால் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 13ந் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தாய் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லாண்டி. இவரது மகள் தனசுபா (வயது19). இவர் உசிலம்பட்டி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாய் ரேணுகா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை செய்தனர்.
    • அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த மாதம் குக்கர் வெடிகுண்டு, கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் அருள் மகேஷ் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர் மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த உமர்ஷெரீப் (வயது 42) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. சில மணி நேர சோதனையின் பின் உமர்ஷெரீப்பை ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடனும் விசாரணை நடத்தப்பட்டது.

    என்.ஐ.ஏ. சோதனை யின்போது அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.24.50 லட்சம் மோசடி செய்த பெண் காசாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி மாட்டுத்தாவணி போலீசில் புகார் மனு கொடுத்தார்.

    மதுரை

    மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துவேல் ராஜன் என்பவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் மருத்துவமனையில் திருமால்புரம், தங்கவேல் நகரைச் சேர்ந்த முத்து மனைவி அங்கம்மாள், அய்யர்பங்களா, சக்தி நகரைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி வைடூரியம் ஆகிய 2 பேரும் காசாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    அப்போது அவர்கள் போலி ஆவணம் தயாரித்து ரூ.24.50 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன்அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கம்மாள், வைடூரியம் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து திலகர்திடல் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

    மதுரை

    மதுரை கீழ அண்ணாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் மனோஜ்குமார் நெருங்கி பழகினார்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மனோஜ்குமார் மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    ஆனால் மனோஜ்குமார் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் திலகர் திடல் போலீசில் மகளை பலாத்காரம் செய்ததாக புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுஜாதா 

    • மதுரை-கோவை ரெயில் நாளை போத்தனூர் வரை இயக்கப்படுகிறது.
    • இத்தகலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் கோவை-போத்தனூர் இடையே பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மதுரையில் இருந்து நாளை (16-ந் தேதி) காலை 7.25 மணிக்கு புறப்படும் கோவை ரெயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    மறு மார்க்கத்தில் கோவை-மதுரை ரெயிலும் போத்தனூரில் இருந்து இயக்கப்படும்.

    இத்தகலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் “வீலிங்” சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மாநகரில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வீலிங் சென்று, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்யும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகரில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வீலிங் சென்று, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்யும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

    எனவே இதில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனை பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சொக்கிகுளம், வல்லபாய் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வந்து, "வீலிங்" செய்து கொண்டிருந்தனர்.

    அதனை ஒருவர் வீடியோ வாக பதிவு செய்து கொண்டு இருந்தார். உடனே தனிப்படை போலீசார் மேற்கண்ட 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்த செல்போன், வீடியோ காமிரா, மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரித்ததில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மோட்டார் சைக்கிளில் வீலிங் சென்று இன்ஸ்டா கிராம் மற்றும் யூ-டியூப் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சோழவந்தான் அருகே பொது கழிப்பறை கட்டிடம் புதர்மண்டி பாழடைந்து காணப்படுகிறது.
    • சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தெருவில் வயலோர பகுதியில் கடந்த 2012 -ம் ஆண்டு ஒருங்கிணைந்த பொது கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.

    அப்போது தண்ணீர் மற்றும் மின் வசதிகள் இருந்ததால் பொதுமக்கள் பயன்படுத்தினர். நாளடைவில் மேற்கண்ட வசதிகள் இல்லாததால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அரசும் கண்டுகொள்ளவில்லை.

    இதன் காரணமாக பொது கழிப்பறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி செடிகொடிகள் வளர்ந்து அடர்ந்த புதராக மாறியுள்ளது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் அதிகரித்துள்ளன

    . மேலும் கொசு உற்பத்தி மையமாகவும் அந்த கட்டிடம் மாறியுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    ஆரம்ப காலத்தில் இந்த கழிப்பறை கட்டிடத்தை பெண்கள் பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் வசதி இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய நிலையில் உள்ளது. மேலும் இங்கு பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் இருப்பதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது.

    மதுரை

    தென்னிந்திய அளவி லான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அந்த பள்ளியை சேர்ந்த 5 மாணவ-மாணவிகள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    பதக்கம் வென்ற 5 பேரும் அடுத்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற மாண வர்களை டேக்வாண்டோ பயிற்சியாளர் மனோஜ்குமார், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

    ×