என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.24.50 லட்சம் மோசடி
Byமாலை மலர்15 Dec 2022 8:29 AM GMT
- தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.24.50 லட்சம் மோசடி செய்த பெண் காசாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி மாட்டுத்தாவணி போலீசில் புகார் மனு கொடுத்தார்.
மதுரை
மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துவேல் ராஜன் என்பவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் மருத்துவமனையில் திருமால்புரம், தங்கவேல் நகரைச் சேர்ந்த முத்து மனைவி அங்கம்மாள், அய்யர்பங்களா, சக்தி நகரைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி வைடூரியம் ஆகிய 2 பேரும் காசாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
அப்போது அவர்கள் போலி ஆவணம் தயாரித்து ரூ.24.50 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கம்மாள், வைடூரியம் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X