என் மலர்
கிருஷ்ணகிரி
கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த நேரலகிரியை சேர்ந்த கூலித்தொழிலாளி தரணி (22) என்பவருக்கும் இடையே முகநூல் (பேஸ்புக்) மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டது.
தனது காதலனை பார்க்க விரும்பிய மாணவி தன்னை கிருஷ்ணகிரி அழைத்து செல்லுமாறு ஏற்கனவே பழக்கமான கோழிக்கோடு அடுத்த மணாசேரியை சேர்ந்த விபின்ராஜ் (22) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். விபின்ராஜ் கடந்த 2-ந்தேதி தனது நண்பர்கள் அகித்ராஜ் (23), ஜோபின் (23) ஆகியோருடன் மாணவியை காரில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தார். வரும் வழியில் விபின்ராஜ் உள்பட 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
பின்னர் ஓசூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தனது காதலன் தரணியை தொடர்பு கொண்ட மாணவி, நடந்த விவரத்தை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காமராஜ் நகரில் உள்ள தனது பெரியப்பா மகள் நதியா என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்று மாணவிக்கு அடைக்கலம் கொடுத்தார். மாணவி மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்படி அவரது காதலன் தரணியை கேரள மாநிலம், முக்கம் போலீசார் தேடி வந்தனர்.
அவர் பேரிகை காமராஜ் நகரில் இருப்பதை அறிந்த போலீசார் தரணியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவியை மீட்ட போலீசார் அவர் கொடுத்த புகாரின் பேரில் பலாத்காரம் செய்த விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோவிந்தப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 30) பாஜக எஸ்.சி.அணி மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இந்திரா நகர் தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஆனந்தன், தனது வீட்டை ஒட்டி 6 சென்ட் நிலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாங்கி உள்ளார். அந்த இடத்தில் தற்காலிகமாக ஓலைக்குடிசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் மர்ம கும்பல், ஆனந்தனின் ஓலைக்குடிசைக்கு தீ வைத்தனர். இதில் தீ மளமள என்று பரவியது.
அப்போது குடிசையில் இருந்த ஆனந்தனின் தாயார் கூச்சல் போட்டார். உடனே சத்தம் கேட்டு ஆனந்தன் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பா.ஜனதா பிரமுகர் வீட்டிற்கு யார் தீ வைத்தது என்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் நடந்ததா? என்றும் தெரியவில்லை.
இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜனதா பிரமுகர் வீட்டுக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூன்றம்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). விவசாயி. இவருடைய மகன் குமார் (33). இவரது மனைவி லதா (30). இவர்கள் 3 பேரும் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் முன்றம்பட்டியில் இருந்து ஊத்தங்கரைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டி சென்றார். குமாரும், அவரது மனைவி லதாவும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.
அவர்கள் ஊத்தங்கரை அருகே சென்னப்பநாயக்கனூர் வேடியப்பன் கோவில் அருகில் சென்றபோது பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிளின் மீது மோதியது. இதில் நிலைக்குலைந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அப்போது குமாரும், அவருடைய மனைவி லதாவும் சம்பவ இடத்திலேயே லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.
இந்த விபத்தில் மோகன் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த கணவன்-மனைவி 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கணவன்-மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள களர்பதி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது45). விவசாயி இவருக்கு நளினி (42) என்ற மனைவியும் 3 மகள் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மணி நேற்றிரவு விவசாய வேலை யை பார்த்து விட்டு அருகே இவருக்கும் சொந்தமான இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கியுள்ளார்.
மற்றொரு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை கண்டு மணி அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர்மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் கைரேகை நிபுணர்களை வர வழைக்கப்பட்டு கைரேகை பதிவு சேகரித்தும், மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






