என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ முகாம்
    X
    மருத்துவ முகாம்

    கொடமாண்டப்பட்டியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்

    மத்தூர் அருகே கொடமாண்டப்பட்டி கிராமத்தில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    மத்தூர்:

    மத்தூர் அருகே கொடமாண்டப்பட்டி கிராமத்தில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமிற்கான எற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரபீக், ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் மலர்க்கொடி சுந்தரவடிவேலு ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கொரோனாவின் தீவிரம் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
    Next Story
    ×