என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்9 Oct 2020 7:22 AM GMT (Updated: 9 Oct 2020 7:22 AM GMT)
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட மைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித மேலாண்மைத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட மைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித மேலாண்மைத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன் வரவேற்று பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தோழமை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வெங்கடாசலபதி, மஞ்சுளா, திம்மராஜ், ஹரிஷ்பாபு, கல்யாணசுந்தரம், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில், மாவட்ட பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித மேலாண்மை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்த பின் செயலாக்கிட வேண்டும். அதுவரை பழைய முறையிலேயே சம்பளப் பட்டியல் தயாரித்து வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X