என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மத்தூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை-பணம் கொள்ளை
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள களர்பதி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது45). விவசாயி இவருக்கு நளினி (42) என்ற மனைவியும் 3 மகள் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மணி நேற்றிரவு விவசாய வேலை யை பார்த்து விட்டு அருகே இவருக்கும் சொந்தமான இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கியுள்ளார்.
மற்றொரு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை கண்டு மணி அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர்மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் கைரேகை நிபுணர்களை வர வழைக்கப்பட்டு கைரேகை பதிவு சேகரித்தும், மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்