என் மலர்tooltip icon

    கரூர்

    • இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
    • தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், புது குறுக்கு பாளையம், கூலக்கவுண்டனூர், கடைவீதி, சுந்தராம்பாள் நகர், கொங்கு நகர், புகழி மலை அடிவாரம், காந்திநகர், நந்தவனம், கந்தம்பாளையம், முல்லை நகர், காந்தி மண்டபம், மலைவீதி, நடுநானப்பரப்பு, அண்ணா நகர், கொங்கு நகர், பாலத்துறை தேசிய நெடுஞ்சாலை, கட்டிபாளையம், பாண்டிபாளையம், புன்னம்சத்திரம், செம்படாபாளையம், அண்ணா நகர் மேட்டு தெரு காவல் நிலையம் எதிரில், கந்தம்பாளையம் காலனி, காந்தி நகர் மூன்றாவது தெரு, முருகம் பாளையம், அதியமான் கோட்டை, முல்லை நகர், அய்யம்பாளையம், அதியமான் கோட்டை லட்சுமி நகர், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, பெரியார் நகர், பிரேம் நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, முருகம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், நன்செய் புகளூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் சுமார் 23க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று காலை3-வது நாளாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    நேற்று மாலை 4 மணிக்கு மேல் நொய்யல் சுற்று வட்டார பகுதி மற்றும் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று புகழிமலை அடிவாரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு சுமார் 6.30 மணி அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்று தண்ணீரில் இரவு கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான பாதுகாப்பு பணியில் அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை தலைமையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுரேஷ், நந்தகோபால் மற்றும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • குளித்தலை பகுதியில் வாகன விதி மீறலில் ஈடுபட்ட 1,675 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது
    • ரூ.18½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

    கரூர்,

    குளித்தலை, தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் செய்த வாகன சோதனையில் லாரியில் அதிகபாரம் ஏற்றிவந்தது, மது அருந்தி வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது.தலைக்கவசம் அணியாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட ஆயிரத்து 675 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.18 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் குளித்தலை போக்குவரத்து போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளது.

    • கரூர் வாங்கல் காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
    • 41க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

    கரூர்,

    கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நி லையில், நேற்று மாலை இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட, 20 விநாயகர் சிலைகள், 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

    பிறகு, விநாயகர் சிலைகள் கோவை சாலை, ஜவஹர் பஜார், ஐந்து சாலை, பாலம்மாள் புரம், அரசு காலனி, கணபதிபாளையம் வழியாக, வாங்கல் காவிரியாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது. அதேபோல் ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவ சேனா சார்பில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 21 விநாயகர் சிலைகளும் நேற்று இரவு, 80 அடி சாலையில் இருந்து முக்கிய பகுதிகள் வழியாக, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

    • கட்டண கழிப்பிடம் செல்வதில் தகராறு காரணமாக பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது
    • கரூர் டவுன் போலீசார் மற்றொரு டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், 

    கரூர், வடக்கு பிரதட்ணம் சாலையை சேர்ந்தவர் வெற்றி முரசு (வயது 26), மினி பஸ் டிரைவர். இவர், கரூர் பஸ் ஸ்டாண்டில், கட்டண கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். அப்போது, கழிப்பிடத்தின் ஊழியர், வெற்றி முரசுவிடம் கட்டண தொகையை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கரூர் நெரூரை சேர்ந்த மற்றொரு மினி பஸ் டிரைவர் கபில் (30), கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். பிறகு, கழிப்பிட ஊழியருக்கு ஆதரவாக கபில் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெற்றி முரசு, கபிலை கத்தியால் தலை, கண்களில் குத்தினார். அதில், காயமடைந்த கபில் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வெற்றி முரசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கேஸ் சிலிண்டர் விற்பனையாளர் படுகாயம் அடைந்தார்
    • லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தளவாபாளையம்அருகே அய்யம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சுந்தரம் (55). இவர் காகிதபுரம் பகுதியில் சிலிண்டர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கேஸ் சிலிண்டர்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்காக சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று சுந்தரம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம்கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்தார். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கரூரில் கல்குவாரி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
    • க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே அத்திபாளையத்தை சேர்ந்த தனியார் கல்குவாரியில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அழகம் பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் மணிவேல் (வயது 30) பணியாற்றி வந்தார். இவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் தங்கி இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த, க.பரமத்தி போலீசார் பிரேதத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிவேல் மனைவி முருகேஸ்வரி, அளித்த புகார்படி நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில், இருந்து வந்த மணிவேல் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகேபாலத்துறை அருகே அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பாலத்துறை பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் புகழூர் நகராட்சி மலை காவலன் தெரு ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த குழந்தை மணி என்பவர் மகன் மதுரை வீரன் (35) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கரூர் டீ கடையில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • ரூ.3500 மதிப்புள்ள 3 கிலோ 300 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறி முதல் செய்யப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் டவுன் மற்றும் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிக ளில் டீ கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை பிடித்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3500 மதிப்புள்ள 3 கிலோ 300 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறி முதல் செய்யப்பட்டது.

    • மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு அரசு மகளிர் பள்ளி தேர்வு
    • தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியரையும், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டினர்

    கரூர்,

    தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டிகள் கடந்த செப்டம்பர் 13ம்தேதி அன்று நடைபெற்றது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஐந்து குறுவட்ட அளவில் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டிகளில் கரூர் வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனர். இந்த பள்ளி மாணவிகள் மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள னர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி தலைமை யாசிரியர் ஷண்முகவடிவு உட்பட அனைத்து ஆசிரி யர்களும், பள்ளி பணியாளர்களும், சக மாணவி குறுவட்டத்தை சேர்ந்தகளும் பாராட்டினர்.

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கரூர் மாவட்டத்தில் உதவி மையங்கள் அமைப்பு
    • பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் பிரபுசங்கர் அழைப்பு

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றினை பின்வரும் அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை அழைத்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 9489984960, கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984961, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984962, கரூர் வட்டாட்சியர் அலுவலகம்- 9489984963, அரவக்குறிச்சி - 9489984964, மண்மங்கலம் - 9489984965-, புகளூர் - 9489984966, கிருஷ்ணராயபுரம் - 9489984967, குளித்தலை - 9489984968, கடவூர் - 9489984969.

    மேலும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையத்தில் தங்களது குடும்ப அட்டை எண்ணை அளித்து, தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் பேரில் மேல்முறையீடு செய்ய விரும்பும் பட்சத்தில் தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தின் வாயிலாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இச்சேவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உட்செலுத்தி விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி முதல்வரின் முகவரி திட்டத்தின் இலவச அழைப்பேசி எண் 1100–ல் அழைத்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்து விபரங்களை அறிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் அனைத்தும் இ-சேவை மையத்தில் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள இயலும். இச்சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்க தமிழ்நாடு அரசின் ஆணையின்படி கரூர் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறறது
    • நாளை விநாயகரை கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெறுகிறது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பால த்துறை, புதுக்குறுக்கு பா ளையம், கூலக்கவுண்ட னூர், கடைவீதி, சுந்தரா ம்பாள் நகர், கொங்கு நகர், புகழி மலை அடிவாரம், காந்திநகர், நந்தவனம், கந்தம்பாளையம், முல்லை நகர், காந்தி மண்டபம், மலைவீதி ,நடுநானப்பரப்பு, அண்ணா நகர், கொங்கு நகர்,பாலத்துறை தேசிய நெடு ஞ்சாலை, கட்டிபாளையம், பாண்டிபாளையம், புன்னம்சத்திரம், செம்படாபாளையம், அண்ணா நகர் மேட்டு தெரு காவல் நிலையம் எதிரில், கந்தம்பாளையம் காலனி ,காந்தி நகர் மூன்றாவது தெரு, முருகம் பாளையம், அதியமான் கோட்டை, முல்லை நகர், அய்யம்பா ளையம், அதியமான் கோட்டை லட்சுமி நகர்,நொய்யல், மரவாபாளை யம், சேமங்கி, பெரியார் நகர் ,பிரேம் நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, முருக ம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பா ளையம், நன்செய் புகளூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி

    மற்றும் பொதுமக்கள் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது . நேற்று காலை விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .பல பகுதிகளில் அக்கினி குண்டம் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதி அதன் பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு சுண்டல் ,பொங்கல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நாளை (20 - ந் தேதி) அனைத்து பகுதிகளிலும் உள்ள விநா யகர் சிலைகள் வாகன ங்களில் ஊர்வலமாக எடு த்துச் சென்று புகழிமலை அடிவாரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது .

    அதனைத் தொடர்ந்து இரவு சுமார் 7 மணி அளவில் விநாயகர் சிலை களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் கரைக்க உள்ளனர்.

    விநாயகர் சிலை ஊர்வ லத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரவக்கு றிச்சி உட்கோட்ட துணைப் போலீஸ் சூப்பிரண்டு அண்ணா துரை தலை மையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள், போலீசார் செய்துள்ளனர்.

    • 38 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது
    • புகளூர் டிஎன்பிஎல் காகிதஆலை நிறுவனம் வழங்கியது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் சமுதாயப் பணிகளில் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஓனவாக்கல் மேடு கிராமத்தை சேர்ந்த நலிவுற்ற சமுதாயத்தை சார்ந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் பள்ளியில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.ஓனவாக்கல் மேடு கிராமத்தைச் சேர்ந்த 38 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் 2023- 2024 ஆம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வி பயின்று வருகின்றனர்.இலவச கல்வி பெரும் குழந்தைகளுக்கு 2செட் பள்ளி சீருடைகள், காலனி, காலனி உறை மற்றும் பள்ளி கட்டணம் முழுவதும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வியும், இவர்களுக்கான பள்ளி கட்டணம் உட்பட அனைத்து செலவினங்களையும் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தின் மூலமாக பள்ளி நிர்வாகத்திற்கு செலுத்தும் .2007 -2008 ஆம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்த இலவச கல்வி திட்டத்தின் மூலம் இதுவரை 11 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.

    மேலும் இந்த கல்வியாண்டில் 38 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ 13 லட்சம் செலவிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வித் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி சேஷாயி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் காகித பிரிவில் 3 1/2 ஆண்டுகால கட்டணமில்லா தொழில்நுட்ப பட்டய படிப்பு பயில ஆண்டுதோறும் 5 மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ,விடுதி கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்தி காகித ஆலை நிறுவனம் கட்டணம் இல்லா கல்வி அளித்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎல் காகித ஆலை அழகு -1 ஐ சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் என்.புகளூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அழகு-2 ஐ சுற்றியுள்ள மொண்டிசெட்டிப்பட்டி, கே .பெரியபட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதல் முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசையின்படி வித்யா ,பிரவீன், ராமன் மற்றும் கௌசிக் ஆகிய நான்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 63 மாணவர்கள் கட்டணமில்லா தொழிற் பட்டயப்படிப்பு முடித்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் .இக்கல்வியாண்டில் 19 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவச தொழிற்கல்வி பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவனம் தனது சமுதாய நலப்பணித் திட்டத்தின் மூலம் இந்த கல்வியாண்டில் 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது .38 மாணவர்களுக்கு இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குநர்( இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர்( மனிதவளம் )கலைச்செல்வன் மற்றும் முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு38பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளை வழங்கினார்கள்.

    ×