என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலைகள் கரைப்பு
    X

    விநாயகர் சிலைகள் கரைப்பு

    • கரூர் வாங்கல் காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
    • 41க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

    கரூர்,

    கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நி லையில், நேற்று மாலை இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட, 20 விநாயகர் சிலைகள், 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

    பிறகு, விநாயகர் சிலைகள் கோவை சாலை, ஜவஹர் பஜார், ஐந்து சாலை, பாலம்மாள் புரம், அரசு காலனி, கணபதிபாளையம் வழியாக, வாங்கல் காவிரியாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது. அதேபோல் ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவ சேனா சார்பில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 21 விநாயகர் சிலைகளும் நேற்று இரவு, 80 அடி சாலையில் இருந்து முக்கிய பகுதிகள் வழியாக, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

    Next Story
    ×