என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மளிகை கடையில் ரூ.1 லட்சம் திருட்டு
    X

    மளிகை கடையில் ரூ.1 லட்சம் திருட்டு

    • கரூர் மளிகை கடையில் ரூ.1 லட்சம் திருட்டு நடந்தது
    • பணத்தை திருடிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்

    கரூர்,

    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழ வெளியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சுப்ரமணி (வயது 56). இவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் தங்கராசு என்பவ ரது மகன் சரத்குமார் (30). இவர்கள் கட்டிடம் உடைக்கும் கூலி வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று சுப்ரமணி மளிகை கடைக்கு சரத்குமார்சென்று பன்னீர் சோடா கேட்டுள்ளார். இதனால் சுப்ரமணி பன்னீர் சோடா எடுப்பதற்காக கடைக்கு உள்ளே சென்றதாக தெரிகிறது. அப்போது மளிகைக்கடைக்கு உள்ளே சென்ற சரக்குமார், அங்கு கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடி உள்ளார். இதனை பார்த்த ராமசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரத்குமாரை பிடித்து தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தோகை மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சரத்குமாரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    Next Story
    ×