என் மலர்tooltip icon

    கரூர்

    • இவர்கள் இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்
    • ். முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்

    குளித்தலை

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளை கோடங்கி பட்டியைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (வயது 50), பழனிச்சாமி (55).

    இவர்கள் இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பாப்பக்கா பட்டி செல்லும் வழியில் குளித்தலை முதல் தோகை மலை செல்லும் நெடுஞ்சா லையில் குப்பா ச்சிப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பகுதியில் இரு சக்கர வாகனம் மோதி யது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். படுகாயமடைந்த பழனிச்சா மி குளித்தலை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    இறந்த முருகேசனுக்கு ஒரு மகன் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பிரபாகரன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
    • இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

    குளித்தலை

    கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான விழிப்புணர்வு பேரணி யானது தோகைமலையில் நடைபெற்றது.

    தோகைமலை ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது, தோகைமலை பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மாணவர்கள், வாக்காளர் பட்டியில் திருத்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் கலந்து கொண்டனர்.

    பேரணிக்கு சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியில் தேர்தல் துணை தாசில்தார் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மணி, தீபக் மற்றும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலரின உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் இயங்கிவரும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையமும் கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து, கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்தியது.
    • இந்த வார விழாவின் 4வது நாள், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கரூர்

    மதுரையில் இயங்கிவரும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையமும் கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து, கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்தியது.

    இந்த வார விழாவின் 4வது நாள், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    விழிப்புணர்வு முகாமில் தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் இயக்குநர் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு பேசினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கூட்டுறவு வார விழா வருடா வருடம் நவம்பர் மாதம் 14 முதல் 20-ந்தேதி வரையில் எதற்காக கொண்டாடப்படுகிறது, நவம்பர் 14-ம் தேதியில் குழந்தைகள் தினத்தன்று ஏன் தொடங்கி நடைபெறுகிறது எனவும், கூட்டுறவில் என்னென்ன வகையான சங்கங்கள் உள்ளது எனவும்,ஆவின் பாலில் உள்ள சத்துக்கள் குறித்தும்,கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் ஏன் உறுப்பினர்களாக சேரவேண்டும் எனவும், உறுப்பினர்களாக சேர்வத னால் உறுப்பினர்களுக்கு கிடைக்க கூடிய பயன்கள் என்ன எனவும், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பி னர்களாக யார்யார் எல்லாம் சேரலாம் எனவும், உறுப்பினர்களாக சேர்வதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் எனவும், கூட்டுறவு சங்கங்க ளில் அதன் உறுப்பினர்க ளாலேயே நிர்வகிக்கப்பட்டு வருவதனால் சங்கத்திற்கு கிடைக்கக்கூடிய லாபம் கூட்டுறவு சங்கங்களில் சட்டம் மற்றும் விதிகளின் படி சங்க உறுப்பினர்களுக்கே பிரித்து வழங்கப்படுகிறது எனவும்,18-வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேரலாம் எனவும் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் சங்க உறுப்பினர்க ளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    விழிப்புணர்வு முகாமில், கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர்திருப்பதி வரவேற்புரையாற்றினார்.கள அலுவலர் நீலாவதி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். சங்க உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பணியா ளர்கள் மற்றும் பொதுமக்க ளும் விழிப்புணர்வு முகா மில் கலந்துகொண்டார்கள்.

    தவுட்டுப்பாளையம் பகுதியில் நாய் தொல்லை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அதிக அளவில் நாய்கள் தெருக்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான நாய்கள் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கருக்கள் காவிரி பகுதி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கும்பலாக சுற்றி திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும், ஆற்றுக்கு குளிக்க வருபவர்களையும் நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்துவதும், கடிப்பதுமாக உள்ளதால் தெருநாய்களை பிடித்து நாய்கள் காப்பகத்தில் ஒப்படைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில்சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில் ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபதி (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிராஜ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

     வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா ,பான்பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது .

    இதன் பேரில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பி.எல். குடியிருப்பு பகுதியில்இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

    வேலாயுதம் பாளையம் 

    கரூர் மாவட்டம் டி.என்.பி.எல். குடியிருப்பு பகுதி யில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் சிறப்பு மருத்துவ பரிசோ தனை முகாம் நடைபெற்றது.

    ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்த னர். ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோத னை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோத னை களை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    பொதுமக்கள் கீரை, காய்கறிகள் போன்ற சத்தா ன உணவுகளை அதிக அள வில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக கிராம பகுதியில் உள்ள வீடுகளின் அருகே மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு உண்டான வழிமுறை செய்ய வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பானைகளை திறந்து வைக்காமல் மூடி இருக்க வேண்டும். அதில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும். பொது மக்கள் பாது காப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 4-வது நாள் விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா 4-வது நாளை முன்னிட்டு சுப்பிரம ணியருக்கு பல்வேறு வகை யான வாசனை திரவி யங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியர் சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலம லையில் உள்ள பாலசுப்பி ரமணிய சுவாமி கோவிலி லும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .மேலும் நொய்யல் சுற்று வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமா னை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பின்னர் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    காப்பர் வயர்களை திருடிய ெதாழிலாளி உள்பட 5பேர் கைது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் காகித புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தி த்தாள் காகித ஆலைக்குள் ஏராளமான காப்பர் வயர்கள், காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் ரூ. 2 லட்ச த்துக்கும் மேற்பட்டகாப்பர் வயர்கள், காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து டிஎன்பிஎல் காகித ஆலை விற்பனை அலுவலர் (கழிவு பொருட்கள்) அமரன் வேலா யுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் கந்தசா மிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (வயது31). , பசுபதி நகர் பகுதிகளைச் சேர்ந்த கோபி (30), செம்மடை பகுதியை சேர்ந்த பூபதி(28), புகளூர் சுந்தராம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (29). கந்தசாமி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (40) ஆகிய 5 பேரும் சேர்ந்து காகித ஆலைக்குள் இறங்கி காப்பர் வயர்களை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிம ன்றத்தில் ஆஜ ர்படுத்தப்படுத்தி 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.

    • தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை கொண்டு சென்ற நீண்ட லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும் அவதிக்குள்ளானார்கள்

    கரூர்,

    பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மிக நீளமான லாரியில், சுமார் 360 அடி நீளமுள்ள காற்றாலை மின்விசிறி இறக்கைகளை ஏற்றிக் கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை முந்திக்கொண்டு எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு நீளமானதாக இருந்தது. தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே வந்தபோது நீளமான அளவிலான காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி சென்ற லாரி செல்ல முடியாமல் நின்றது.இதனால் நீண்ட நேரம் லாரிக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள், பரமத்தி வேலூர் வரை காவிரி ஆற்றுப் பாலத்தில் அணிவகுத்து நீண்ட நேரம் நின்றன.

    இதனால் வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும், மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல ப்பட்ட நோயாளிகளும் பெரும் அவதிக்குள்ளா னார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு லாரி நகர்த்தப்பட்டது. இதன் காரணமாக பின்னால் நின்ற வாகனங்கள், தவிட்டுப்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக கடந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • டெங்கு பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது
    • சேமங்கி சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை நடவடிக்கை

    வேலாயுத ம்பாளையம்,

    கரூர் மாவட்டம் சேமங்கி சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் ஓலப்பா ளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலி யர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்ப குதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளு க்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதிய வர்கள், பாலூட்டும் தாய்மா ர்கள், மாற்று த்திறனாளிகள் ,நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோத னைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.

    கீரை காய்கறிகள் போன்ற சத்தானவற்றை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக கிராம பகுதியில் உள்ள வீடுகளின் அருகே மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு உண்டான வழிமுறை செய்ய வேண்டும். வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பானைகளை திறந்து வைக்காமல் மூடி இருக்க வேண்டும். அதில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது.

    சிரட்டைகள் உரல்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நல்ல தண்ணீரில் உற்பத்தி யாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது. எனவே பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • புன்னம்சத்திரம் பகுதியில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது
    • சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கரூர், 

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் வடிகால் பணிகளை முறையாக பராமரிக்காமல் தனி நபர்கள்வடிகாலின் இடையில் கான்கிரீட் மற்றும் மணல்களை கொட்டி வைத்து அடைத்து விடுகின்றனர்.

    இதனால் கழிவுநீர் வெளியே செல்லாமல் நீண்ட நாட்களாக சுமார் 3 அடி முதல் 5 அடிவரை தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவு நீரில் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் ,மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே சுகாதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறையினர் சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் .

    இது குறித்து மாவட்ட கலெக்டர், ஒன்றிய ஆணையர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சுகாதாரத் துறைக்கு, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே தற்போது அதிகப்படியான டெங்கு காய்ச்சல் ஏற்படுவதால் பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் மூடி கிடக்கும் சாக்கடை கழிவு நீர்வடிகால் வசதியை சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    ×