என் மலர்
உள்ளூர் செய்திகள்

காப்பர் வயர்களை திருடிய ெதாழிலாளி உள்பட 5பேர் கைது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் காகித புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தி த்தாள் காகித ஆலைக்குள் ஏராளமான காப்பர் வயர்கள், காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் ரூ. 2 லட்ச த்துக்கும் மேற்பட்டகாப்பர் வயர்கள், காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து டிஎன்பிஎல் காகித ஆலை விற்பனை அலுவலர் (கழிவு பொருட்கள்) அமரன் வேலா யுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் கந்தசா மிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (வயது31). , பசுபதி நகர் பகுதிகளைச் சேர்ந்த கோபி (30), செம்மடை பகுதியை சேர்ந்த பூபதி(28), புகளூர் சுந்தராம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (29). கந்தசாமி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (40) ஆகிய 5 பேரும் சேர்ந்து காகித ஆலைக்குள் இறங்கி காப்பர் வயர்களை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிம ன்றத்தில் ஆஜ ர்படுத்தப்படுத்தி 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.






