search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் சாவு - ஜாதகம் பார்க்க சென்ற போது நேர்ந்த சோகம்
    X

    லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் சாவு - ஜாதகம் பார்க்க சென்ற போது நேர்ந்த சோகம்

    • இவர்கள் இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்
    • ். முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்

    குளித்தலை

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளை கோடங்கி பட்டியைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (வயது 50), பழனிச்சாமி (55).

    இவர்கள் இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பாப்பக்கா பட்டி செல்லும் வழியில் குளித்தலை முதல் தோகை மலை செல்லும் நெடுஞ்சா லையில் குப்பா ச்சிப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின் பகுதியில் இரு சக்கர வாகனம் மோதி யது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். படுகாயமடைந்த பழனிச்சா மி குளித்தலை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    இறந்த முருகேசனுக்கு ஒரு மகன் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பிரபாகரன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×