search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது
    X

    சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில்சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி வாய்க்கால் கரை பகுதியில் ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபதி (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுப்பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிராஜ் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×