search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
    X

    முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 4-வது நாள் விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா 4-வது நாளை முன்னிட்டு சுப்பிரம ணியருக்கு பல்வேறு வகை யான வாசனை திரவி யங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியர் சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலம லையில் உள்ள பாலசுப்பி ரமணிய சுவாமி கோவிலி லும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .மேலும் நொய்யல் சுற்று வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமா னை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பின்னர் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×