search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தவுட்டுப்பாளையம் பகுதியில் நாய் தொல்லை
    X

    தவுட்டுப்பாளையம் பகுதியில் நாய் தொல்லை

    தவுட்டுப்பாளையம் பகுதியில் நாய் தொல்லை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அதிக அளவில் நாய்கள் தெருக்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான நாய்கள் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கருக்கள் காவிரி பகுதி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கும்பலாக சுற்றி திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும், ஆற்றுக்கு குளிக்க வருபவர்களையும் நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்துவதும், கடிப்பதுமாக உள்ளதால் தெருநாய்களை பிடித்து நாய்கள் காப்பகத்தில் ஒப்படைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×