என் மலர்tooltip icon

    கரூர்

    • நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
    • வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.

    உத்தமபாளையம்:

    கரூர் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பரமசிவம் என்பவர் மேலாளராக உள்ளார்.

    சின்னமனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுத்து அதனை வசூல் செய்வதற்காக பல ஊழியர்களையும் கணேசன் நியமித்துள்ளார். கணேசன் 2 மாதத்துக்கு ஒரு முறை நிதி நிறுவனத்துக்கு வந்து வரவு செலவு கணக்குகளை பார்த்து பணத்தை பெற்றுச் செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று பைனான்ஸ் மேலாளர் பரமசிவம் மற்றும் ஊழியர் கண்ணன் ஆகியோர் வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொண்டு காமயகவுண்டன்பட்டியில் இருந்து நாராயணதேவன் பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    செல்லாயி அம்மன் கோவில் அருகே இவர்கள் நின்று கொண்டு இருந்த போது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் பணம் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றனர்.

    மிளகாய் பொடி தூவியதால் நிலை குலைந்து கீழே விழுந்த அவர்கள் அதன் பின்னர் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கண்ணன் தனது நண்பர்கள் 2 பேரை சேர்த்துக் கொண்டு வசூல் செய்த பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர். பணம் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில் ரூ.2 லட்சமே கிடைத்ததால் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான கரூரைச் சேர்ந்த அபிஷேக் (36), வேலூரைச் சேர்ந்த பாஸ்கரன் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.2 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் இறையாண்மையையும், சமநல சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகம் அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குநர் (இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (பேப்பர் புரொடக்சன்) மகேஷ், துணைப் பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர்(மனித வளம்) சிவக்குமார், மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன், துணை மேலாளர் (பாதுகாப்பு) சங்கிலி ராஜன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    • கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை யும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.
    • கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை யும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.

    கரூர்

    கரூர் மாவட்டத்தில் கரூர் வட்டாரத்தில் உள்ள ஆர்.1561 தாந்தோணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில், கோடங்கிபட்டியில் சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் கல்வி திட்ட கூட்டமும், நிதி சார் மேலாண்மை மற்றும் விழிப்பு ணர்வு கூட்டமும் நடைபெற்றது. கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை யும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.

    கரூர் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் வசந்தகுமார் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவதுf:-

    சங்க உறுப்பினர்கள் எத்தனை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளோம் என்பது முக்கிய மில்லை. ஒரு வங்கி அல்லது ஒரு சங்கத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் போதுமானது. அந்த கணக்கை தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும். குடும்பத்தில் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் யாராக இருந்தாலும் மேல்படிப்பு படிப்பதற்கு கல்வி கடன் பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    கரூர் மாவட்ட நபார்டு வங்கியின் கோட்ட மேலாளர்மோகன் கார்த்திக் பேசும்போது:-

    சங்கத்தில் உறுப்பினர்க ளுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகிறது, ஒரு வங்கியிலோ அல்லது ஒரு சங்கத்திலோ கடன் பெற்ற பிறகு வேறு ஊரிலோ, பக்கத்தில் உள்ள வங்கியிலோ, முன்னர் பெற்ற கடனை கட்டி முடிக்காமல் புதிய கடன்கள் பெற முடியாது. பயிர்க்கடன்,சுய உதவிக்குழு கடன் எதுவானாலும் முழு வதும் திருப்பி செலுத்தி விட்டு புதிய கடன்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கரூர் வட்டார கள மேலாளர் கதிர்வேல் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கரூர் சரக மேற்பார்வையாளர் ரமேஷ் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மகளிர் சுயஉதவி குழு ஆரம்பித்து சங்கத்தி ல் கடன்பெற்று தங்களுடைய வாழ்வாதா ரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    சங்க செயலாள வளர் மதி, கரூர் மாவட்ட கூட்டு றவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திருப்பதி, சங்க பணியாளர் குணசேகரன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

    அதேபோல் வேலாயு தம்பாளையம்-நொய்யல் செல்லும் சாலையில் உள்ள புங்கோடை பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பாப்பன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(வயது 57) என்பவர் கடைகளுக்கு சப்ளை செய்ய வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் பெங்களூருவில் இருந்து, வாங்கி வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவி த்தார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.
    • பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.

    பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார். துணைத் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்கு றிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    பூமி பூஜை விழாவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் முரளிராஜா, வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள், பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.
    • அதனைத் தொடர்ந்து புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் புகழூர் நகரக் தி.மு.க. சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது, புகழூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகள், நடு நாணப்பரப்பு நகராட்சி துவக்கப்பள்ளி, குறுக்குபாளையம் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு புகழூர் நகர கழக செயலாளரும், புகழூர் நகர்மன்ற தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், செல்வகுமார், நந்தா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் அண்ணாவேலு, நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, வார்டு தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

    • பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்பு ப்பாளையம், திருக்கா டுதுறை, பேச்சிப்பா றை , வேட்டமங்கலம் உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கி ன்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.700- க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

    கார்த்திகை தீபம், கிருத்திகை மற்றும் பவுர்ண மியை முன்னிட்டு நடை பெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.220- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.1,800-க்கும், செவ்வ ந்திப்பூ ரூ.250- க்கும், கனகா ம்பரம் ரூ.1,200-க்கும் ஏலம். போனது.

    பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

    • வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
    • புகளூர் தாசில்தார் முருகன் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி மாற்றம்,திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் படிவம் 6, வடிவம் 7, படிவம் 8 போன்றவற்றில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினர்.

    சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.புகளூர் தாசில்தார் முருகன் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • அண்ணாமலைக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    குளித்தலை:

    கரூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு கரூர் மட்டுமல்லாமல் திருச்சி, தொட்டியம், முசிறி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரி சார்பில் மாணவர்களுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் (வயது 19) 3-ம் ஆண்டும், தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.

    இவர்கள் தினமும் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். இன்று காலை இந்த 2 மாணவர்களும் சக மாணவ, மாணவிகளுடன் கல்லூரிக்கு புறப்பட்டனர்.

    குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாமலைக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி மோதலாக உருவானது.

    இருவரும் கைகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சக மாணவர்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்து பகுதியில் பலமாக குத்தினார்.

    இதனால் அவருக்கு ரத்தம் பீறிட்டது. நிதீஷ்குமார் அலறிதுடித்தபடி சாய்ந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை உடனடியாக திருப்பி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

    படுகாயம் அடைந்த நிதிஷ்குமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அண்ணாமலையை கைது செய்தனர்.

    மாணவர் அண்ணாமலை சைக்கோ போன்று நடந்து கொண்டதாகவும், இதனால் நிதிஷ்குமார் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் நிதிஷ்குமாரின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.

    கல்லூரி பேருந்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலாயுதம் பாளையம் பகுதியில் திடீர் மழையால் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் பாதிப்பு

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் ,வாங்கல், என். புதூர், கடம்பங்கு றிச்சி,நொய்யல், மரவாபாளையம், தோட்டக்குறிச்சி,புகழிமலை, காகிதபுரம், மூர்த்திபா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மாலை சுமார் 6.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் நனைந்து கொண்டு அவ திப்பட்டு சென்றனர் .

    அதேபோல் சாலை ஓரங்களில் போடப்ப ட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்க டைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணி க்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்கா ரர்கள் மழையின் காரண மாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர் .தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது .

    கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    புகழூர் நகராட்சி திட்ட பணிகளுக்காக காகித ஆலை நிறுவனம் சார்பில் காசோலை வழங்கல்

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி நிர்வாக திட்டப் பணிகள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் சமூக நலத்துறை (சி.எஸ்.ஆர்), நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தங்களது சமூக பங்களிப்பு தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் முயற்சியினால், புகழூர் நகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு திட்டப் பணிகள் பயன்பாட்டிற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் தங்களது சமூக பங்களிப்பு தொகைக்கான காசோலையை புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் , நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் நகராட்சி ஆணையர் பால்ராஜ் ஆகியோரிடம் செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குநர்( இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (மனிதவளம்)கலைச்செல்வன், முதுநிலை மேலாளர்( மனிதவளம்) சிவக்குமார், மேலாளர் (மனித வளம்) ராஜா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் காகித ஆலை,நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    நொய்யல் பகுதி வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் சிறப்பு முகாம்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்ட மங்கலம் அரசு தொடக்க ப்பள்ளி, குந்தாணி பாளை யம் அரசு தொடக்கப்பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகர் அரசு தொடக்கப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சா வடிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல், முகவரி மாற்றம்,திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடை பெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் படிவம் 6, படிவம் 7, படிவம் 8 போன்றவற்றில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் ,முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையா ளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்கு ச்சாவடி அலுவ லர்களிடம் வழங்கினர்.

    சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் புகளூர் தாசில்தார் முருகன் ஆய்வு நடத்தினார். அதே போல் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாவ ட்ட கலெக்டர் தங்கவேல் மற்றும் புகளூர் தாசில்தார் முருகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி வாக்காளர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

    ×