search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் - ரூ.13.60 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடக்கம்
    X

    புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் - ரூ.13.60 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடக்கம்

    • கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.
    • பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.

    பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார். துணைத் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்கு றிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    பூமி பூஜை விழாவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் முரளிராஜா, வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள், பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×