search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலாயுதம்பாளையத்தில் 15 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது
    X

    வேலாயுதம்பாளையத்தில் 15 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

    • கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

    அதேபோல் வேலாயு தம்பாளையம்-நொய்யல் செல்லும் சாலையில் உள்ள புங்கோடை பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பாப்பன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(வயது 57) என்பவர் கடைகளுக்கு சப்ளை செய்ய வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் பெங்களூருவில் இருந்து, வாங்கி வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவி த்தார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×