என் மலர்
கன்னியாகுமரி
- காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
- மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ் நாடு பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஶ்ரீ வல்ல பிரசாத், முன்னாள் மாநில தலைவர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.
- கோடை விடுமுறை சீசன் முடிந்த நாளான நேற்று வரை 60 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.
- அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த ஆண்டும் கோடை விடுமுறை சீசனையொட்டி கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை சீசன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமானோர் திரண்டு சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் படகில் சென்று பார்வையிட்டனர். மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, கலங்கரை விளக்கம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச், விவேகானந்தபுரத்தில் பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் உள்ள உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோடை விடுமுறை சீசனையொட்டி கடந்த 2½ மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து உள்ளனர். இதில் 3 லட்சத்து 84 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே விவேகானந்தர் நினைவு மண்டத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 43 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், மே மாதம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 300 சுற்றுலா பயணிகளும், கோடை விடுமுறை சீசன் முடிந்த நாளான நேற்று வரை 60 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.
கோடை விடுமுறை சீசனின் கடைசி நாள் அன்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
- பாராளுமன்ற குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்களை இரு அவைகளிலும் வழி நடத்துவார்.
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விருந்தில் கலந்து கொண்டோம்.
கன்னியாகுமரி
விஜய்வசந்த் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
அன்னை சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்களை இரு அவைகளிலும் வழி நடத்துவார். அவரது ஆளுமை மிகுந்த தலைமை மக்களின் குரலை பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்ய எங்களுக்கு ஊக்கம் அளிக்கும். நன்றி அன்னை அவர்களே என்று கூறியுள்ளார்.

அன்னை சோனியா காந்தி அவர்கள் புதிதாக வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விருந்தில் கலந்து கொண்டோம். தலைவர் ராகுல் காந்தி, திருமதி பிரியங்கா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ் நாடு பொறுப்பாளர் திரு அஜோய் குமார், மாநில தலைவர் திரு செல்வ பெருந்தகை மற்றும் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர் என்றும் கூறியுள்ளார்.
- கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்தது.
- மீனவர்கள் கடலில் இறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
இந்த காலங்களில் விசைப்படகு கள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை, திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப் பட்டது.
இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இதற்கிடையில் இந்த மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இதைத் தொடர்ந்து இந்த மீன்பிடி தடைகாலம் முடி வடைய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் விசைப் படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர்.
மீனவர்கள் தங்களது பழுதடைந்த விசைப்படகுகளை சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகுதியை சீரமைத்து வந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் இறக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். பச்சை நிற வர்ணம் தீட்டு வது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். மீன்பிடி தடைகாலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைய இருப்பதை தொடர்ந்து வருகிற 15-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.
இந்த விசைப்படகுகள் அன்று இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், திருக்கை, கைக்கொழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2 மாதங்களுக்கு பிறகு வருகிற 15-ந்தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.
- அகஸ்தீஸ்வரம், மயிலாடி, அஞ்சுகிராமம், சுசீந்திரம் பகுதிகளில் கனமழை பெய்தது.
- மழைக்கு நேற்று 3 வீடுகள் இடித்து விழுந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் பரவலாக மழை பெய்த நிலையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. கொட்டாரம் பகுதியில் நேற்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 5 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது. இடைவிடாது கொட்டிய கனமழையின் காரணமாக அந்த பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. சாமி தோப்பு, முகிலன் குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், மயிலாடி, அஞ்சுகிராமம், சுசீந்திரம் பகுதிகளில் கனமழை பெய்தது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 103.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
குருந்தன்கோடு, நாகர்கோவிலிலும் நேற்று இரவு விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தவாறு சென்றனர். குருந்தன்கோடு, குளச்சல் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. திற்பரப்பு, ஆணைக்கிடங்கு, கன்னிமார், தக்கலை, இரணியல் பகுதிகளிலும் விட்டுவிட்டு இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் மீதமுள்ள குளங்கள் நிரம்பி வருகிறது.
விவசாயிகள் சாகுபடி பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.19 அடி யாக இருந்தது. அணைக்கு 670 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 535 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.80 அடியாக உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 15.10 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தோவாளை, செண்பக ராமன்புதூர் பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
மழைக்கு நேற்று 3 வீடுகள் இடித்து விழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 17.4, பெருஞ்சாணி 16, சிற்றாறு 1-40.2, சிற்றாறு 2-17, கன்னிமார் 6.4, கொட்டாரம் 103.4, மயிலாடி 74.6, நாகர்கோவில் 78.2, ஆரல் வாய்மொழி 3, பூதப்பாண்டி 10.2, பாலமோர் 10.6, தக்கலை 29.6, குளச்சல் 66, இரணியல் 56.4, ஆணை கிடங்கு 16, குருந்தன்கோடு 91, கோழிப்போர்விளை 24.8, மாம்பழத்துறையாறு 12, களியல் 16.2, குழித்துறை 12, புத்தன் அணை 17.4, சுருளோடு 7, ஆணைகிடங்கு 11.4, திற்பரப்பு 36.8, முள்ளங்கினாவிளை 32.6.
- செல்வ பெருந்தகையை சந்தித்து வாழ்த்து.
- காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
கன்னியாகுமரி:
விஜய்வசந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
இந்த தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற மாநில தலைவர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
நேற்று வெற்றி கண்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த அடிப்படையில் கடல் உள் வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, கடல் சீற்றம் போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி கடல் திடீர் என்று உள் வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா படகுகள் தரைதட்டி நின்றன.
இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
- முகவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர்.
- சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
அந்தப் பகுதயில் போக்கு வரத்தும் மாற்றி அமைக்கப் பட்டு இருந்தது. அந்த பகுதி யில் பேரி கார்டுகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் பணிக்கான ஊழியர்கள் மற்றும் முகவர்கள் அடையாள அட்டை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நடை பெறும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட முகவர்களை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். அவர் களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் படிவம் 18 வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என்று பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் ஒரு சில முகவர்கள் மட்டுமே படிவம் 18 வைத்திருந்தனர். படிவம் 18 இல்லாத முகவர்களை போலீசார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் முகவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு படிவம் 18 இல்லாமல் அடையாள அட்டை வைத்திருந்த முகவர்களை போலீசார் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் நாகர்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 20 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் தற்போது 2 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.
- பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி 3411 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராணி 754 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
விளவங்கோடு:
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
இதில் தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பா.ஜ.க. கூட்டணி சார்பில் நந்தினி, அ.தி.மு.க. சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 20 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் தற்போது 2 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 9403 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி 3411 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ராணி 754 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
- சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
- கோடை விடுமுறை சீசன் வியாபாரிகளுக்கு கை கொடுக்காமல் போனது.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியதால் கன்னியாகுமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந் தது.
இதற்கிடையில் கோடை காலத்தில் கடும் வெயில் கொளுத்தியதாலும், அதன்பின்னர் தொடர் மழை பெய்ததினாலும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடியும் தருவாயில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்ததால் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
மேலும் விவேகானந்தர் மண்ட பத்துக்கு படகு போக்கு வரத்து இடை இடையே நிறுத்தப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்ட பத்தையும் சுற்றுலா பயணிகள் சரியாக பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் இந்த 3 நாட்களும் லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு அறை கொடுக்கப்பட வில்லை. இதனால் ஏற்கனவே லாட்ஜ்களில் அறை புக்கிங் செய்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வராமல் அறைகளை காலி செய்தனர். இதனால் கன்னியாகுமரிக்கு கடந்த 30-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.
இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடை பெற்றதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் நட மாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.
இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் வியாபாரிகளுக்கு கை கொடுக்காமல் போனது. இதனால் கன்னியாகுமரி வியாபாரிகள் வியாபாரம் நடக்காத விரக்தியில் உள்ளனர்.
- நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்
கன்னியாகுமரி:
நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான சீக்கியர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் உறையில் சொருகப்பட்ட கத்தியுடன் வந்தார்.
வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கத்தியுடன் வந்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






