என் மலர்
கன்னியாகுமரி
- ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
- படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, கடல் சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அதன்படி அமாவாசை முடிந்த 3-வது நாளான இன்று காலை முதல் கன்னியாகுமரி கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் இந்த நிலை காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடற்கரைக்குச் செல்ல போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி கடலில் இறங்கியவர்களை சுற்றுலா போலீசார் வெளியேற்றினர்.
பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம்செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
- விஜய் வசந்த், அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
- மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அம்மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவை நேரில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் அமைய இருக்கும் ரெயில்வே மேம்பாலத்தை அந்த பகுதி மக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
மேலும் ஊரை ஒதுக்கி மேம்பாலம் கட்டும் திட்டத்தை கை விட வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
- KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.
- குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோடியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கை வைத்தனர்.
இதைதொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்தப் பணிகள் நிறைவுப்பெற்றன.

இந்நிலையில், இந்த புதிய வகுப்பறைகளை கன்னியாகுமரி மாவட்ட எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து, நாகர்கோவிலில் புதியதாக ஆரம்பிக்கப்படவுள்ள KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.

மேலும், மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மருத்துவமனை ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, ஆவணி திருவிழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
- நாகர்கோவிலில் மத நல்லிணக்க ஒற்றுமை நடை பயணம்.
- விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவிலில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் 33 சதவீத இடஒதுக்கீடு கோரி மத நல்லிணக்க ஒற்றுமை நடை பயணம் நடைபெற்றது. இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் கேசவன்புத்தன்துறை புனித மரியன்னை உயர்நிலை பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் தேவை என்ற பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டி முடித்த 2 வகுப்பறைகளை விஜய் வசந்த் நேற்று திறந்து வைத்தார்.
- பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
- பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.
கன்னியாகுமரி:
இரணியல் ரெயில் நிலையத்தில் அமைய இருக்கும் ஜல்லி யார்டு பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்க்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.

இதனால் இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் இரணியல் ரெயில் நிலையத்தின் முன்பு
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் கே.டி.உதயம், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
- ரூ.14.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
- 60000 லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ரூ.14 லட்சம் செலவில் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தொகுதியின் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் இன்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள மருங்கூர் பேரூராட்சி பொது மக்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அங்கன்வாடி கட்டிடம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை விஜய் வசந்த் இன்று திறந்து வைத்தார்.
இதேபோல், மகளிருக்கு பொருளாதார சுதந்திரம் வழங்குவதில் மிக சிறப்பாக செயலாற்றி வரும் மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்குவிக்கும் வகையில், தேரூர் பேரூராட்சி சங்கரன்புதூரில் மகளிர் சுய உதவி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கட்டிட பணிகள் நிறைவுபெற்ற நிலையில், விஜய் வசந்த் எம்.பி இன்று திறந்து வைத்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பீமநகரி ஊராட்சி அண்ணாநகரில் ரூ.9,50,000 தொகை ஒதுக்கீடு செய்து அலங்கார தரை கற்கள் பதித்து அந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக விஜய் வசந்த் எம்.பி இன்று திறந்து வைத்தார்.

அது போல் 60000 லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ரூ.14 லட்சம் செலவில் திறந்து வைத்தார்.

மேலும், சென்னை - நாகர்கோவில் தினசரி வந்தே பாரத் ரெயில் சேவை நேற்று துவங்கி வைக்கப்பட்டது. ரெயில் நாகர்கோவில் வந்தடைந்தபோது உற்சாக வரவேற்பளித்ததாக விஜய் வசந்த் எம்பி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பின்னர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு பாரளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பழனியில் முருகன் மாநாடு நடத்தியதை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன்.
- அண்ணாமலை அவருடைய அரசியல் அறிவை வளர்க்க படிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்றுள்ளார்.
கன்னியாகுமரி:
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ கன்னியாகுமரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதால் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்தது, காலை உணவு திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் என அனைத்து திட்டமும் தமிழக அரசால் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு இந்தியாவுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது.
மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால். தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்கிறார். இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளும் கூட கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது. கல்வியில் எக்காரணம் கொண்டும் அரசியல் இருக்கக் கூடாது.
பழனியில் முருகன் மாநாடு நடத்தியதை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். முருகன் தமிழ் கடவுள் மட்டும் கிடையாது. இதில் தமிழ் கலாச்சாரமும் ஒன்றிணைந்து இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமியர்களின் நோன்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம், கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடுகிறோம்.
முருகர் என்பது தமிழ் கலாச்சாரத்தோடு சேர்ந்தது அதை ஒரு மதமாக நான் பார்க்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அமைச்சர் கலந்து கொண்டதில் எந்த தவறும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட இயக்கம் இந்து மதத்தை சொந்தம் கொண்டாடி வருகின்ற இந்த வேளையில் அதை உடைப்பதற்கான புரிதலாக கூட நான் இதை பார்க்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நாணயம் வெளியிட்டது மத்திய அரசு. அதில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டது புரோட்டா கால். தொடர்ந்து மத்திய அரசினை நாங்கள் எதிர்த்து வருகிறோம். தமிழகத்தில் ஒருபோதும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாறாது. கூட்டணி மாற்றம் என்ற நிலையை தி.மு.க. தலைமை ஒருபோதும் எடுக்காது.
அண்ணாமலை அவருடைய அரசியல் அறிவை வளர்க்க படிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்றுள்ளார். அதனை வரவேற்கிறேன். நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க. மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருக்க நாங்கள் ஏன் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். அந்த சிந்தனை ஒருபோதும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பதிலும் மழை பெய்தது.
நாகர்கோவில்:
வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. திடீரென மழை வெளுத்து வாங்கியது. காலை 7.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். சில மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தவாரே பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டது. மழையின் காரணமாக ரோடுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மீனாட்சிபுரம் சாலை, அசம்புரோடு, கோட்டார் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்ற ஊழியர்களும் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தக்கலை, குழித்துறை, மார்த்தாண்டம், இரணியல், மயிலாடி, கொட்டாரம், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பதிலும் மழை பெய்தது. மழை பெய்து வருவதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணைகள் முழு கொள்ளளவு எட்டி உள்ள நிலையில் அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.03 அடியாக இருந்தது. அணைக்கு 657 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.36 அடியாக உள்ளது. அணைக்கு 388 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.78 அடியாக உள்ளது. அணைக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடற்கரை கிராமங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் கடலுக்கு மீன் பிடித்து சென்ற பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பினர். இன்று மாவட்டத்தின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள், கட்டு மரங்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
- சிறந்த தொழிலதிபராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் எச்.வசந்தகுமார் திகழ்ந்தார்.
- உயிர் தந்தவரின் உயிர் பிரிந்து 4 ஆண்டுகள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ஹரிகிருஷ்ண பெருமாள் - தங்கம்மை தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வசந்தகுமார். இவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்பட 6 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள்.
இளம் வயதில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றிய இவர், பின்னர் சிறிய மளிகை கடை ஒன்றை தொடங்கினார். ஆரம்பத்தில் மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பொருட்களை விற்று, அவற்றிற்கு தவணை முறையில் பணம் வசூலித்தார். அதன்பின்னர் படிப்படியாக முன்னேறி 1978-ஆம் ஆண்டு வசந்த் அண்டு கோ என்ற வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கடையைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் மூலம் தொழிலதிபராக வெற்றிகண்ட வசந்தகுமார் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா என விரிபடுத்தி தொழில் சாம்ராஜ்யம் படைத்தார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், மாநில துணைத் தலைவராக பதவி வகித்தார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்தார். அத்துடன் நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 2006 மற்றும் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று எம்.பி.யானார்.
சிறந்த தொழிலதிபராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் எச்.வசந்தகுமார் திகழ்ந்தார்.
இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி உடல்நலக்குறைவால் எச்.வசந்தகுமார் காலமானார்.
கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்த குமாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது மகன் விஜய் வசந்த் எம்.பி. அஞ்சாலி செலுத்தினர்.

இதைதொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
உயிர் தந்தவரின் உயிர் பிரிந்து 4 ஆண்டுகள். மெய் விட்டு சென்றாலும் காலத்தால் அழிக்க முடியாத உங்கள் நினைவுகள் என்றும் பசுமையாய் எங்களுடன். நீங்கா நினைவுகளுடன் தந்தையின் நினைவு நாளில், அவர் வழி நடப்பதே அவருக்கு நான் செய்யும் நன்றி கடன் என்று கூறிகிறார்.
- திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ராபின்சன் அவர்களின் தாயார் மறைவு.
- குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த விஜய் வசந்த்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ராபின்சன் அவர்களின் தாயார் டாட்டி பாய் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அவர்கள் இல்லத்திற்கு சென்று உடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
- இறைவன் முருகனை பற்றி புகழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ நாள் கிழமை என்பது கிடையாது.
- எல்லாமே ஓட்டுக்கான யுக்தி என்று சொல்ல முடியாது.
முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றதை பற்றி விஜய் வசந்த் எம்.பி.யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதில் கூறியிருப்பதாவது:-
இறைவன் முருகனை பற்றி புகழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ நாள் கிழமை என்பது கிடையாது. ஒவ்வொரு வழிபாட்டு தளங்களிலும் ஒவ்வொருடைய இறைவன் வழிபாடுகள் இருக்கும்.
அதில் முருக பெருமனை வைத்து ஒரு கூட்டம் நடக்கிறது. எல்லாவற்றையுமே விமர்சனம் செய்வது என்பது தவறான விஷயம் என்பதை பதிவு செய்கிறேன். பழனி கோவிலில் முருகனை பற்றி கருத்தரங்கம் நடை பெற்றது. இதை அரசியல் ஆக்கவேண்டாம் என்று தான் சொல்வேன். இதற்கும் தேர்தலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இது அரசங்கம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியகவே நான் கருதுகிறேன்.
கேள்வி- முத்தமிழ் முருகன் மாநாடு பற்றி இது ஓட்டுக்கான யுக்தி என்று தமிழசை சொல்கிறார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன.
பதில்- எல்லாமே ஓட்டுக்கான யுக்தி என்று சொல்ல முடியாது. தமிழக அரசை குறை சொல்வது தவறானது. அது அவர்களுடைய கருத்து சொல்லி இருக்கிறார். ஆனால் தேர்தலுக்கான ஒரு பணியாக கருதவில்லை. இதை இறைவனுக்கு செய்கிற பணியாகவே கருதுகிறேன்.
கேள்வி- தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடி அறிமுகம் செய்து இருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை பற்றி உங்கள் கருத்து?
பதில்- விமர்சனங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. மக்களும் அரசியல் வட்டராங்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள தருணத்தில் விமர்சனங்கள் இயற்கையானது. இந்த விமர்சனங்களை தாண்டி வருவது தான் வெற்றிக்கான இலக்கு. வருங்காலங்களில் இந்த விமர்சனங்களை எப்படி கையாளுகிறார் என்பதை பார்ப்போம்.
கேள்வி- பிரதமரின் உக்ரைன் பயணம் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும்.
பதில்- உக்ரைனுக்கு பிரதமர் மோடி முதல் முறையாக சென்றார். அங்குள்ள பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். அதன் நிலைப்பாடு இனிமேல் தான் தெரியும்.

இதனிடையே விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவு-
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி கூறும் பயணம் நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் அன்பும் ஆதரவும் தந்து கொண்டிருக்கும் பொது மக்களுக்கும், காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி நிர்வாகிகளுக்கும் நன்றி.






