என் மலர்
கள்ளக்குறிச்சி
- Arrested for assaulting mother-brother over land dispute near ரிஷிவந்தியம் கைது செய்யப்பட்டார்.
- வீரம்மாள் முனியனின் பங்கை அவாிடம் கொடுத்து விடு, என்று கூறியுள்ளார்
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வீரம்மாள் (வயது50). இவர் தனக்கு சொந்தமான விளை நிலத்தை தனது மகன்கள் ஏழுமலை(30), முனியன்(28) ஆகியோருக்கு சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் மொத்த நிலத்திலும் ஏழுமலை விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீரம்மாள், ஏழுமலையிடம் உன்னுடைய பங்கில் மட்டும் விவசாயம் செய்ய வேண்டும், முனியனின் பங்கை அவாிடம் கொடுத்து விடு, என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகியோர் வீரம்மாளை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்த முனியனையும் அவர் தாக்கியதாக தொிகிறது. இதுகுறித்து வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, கிரிஜா ஆகிய 2 பேர் மீது ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- கூழாங்கற்கள் கடத்திலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறது.
- யார் பிடித்தாலும் லாரியின் டிரைவர் தப்பிவிடுகிறார். லாரியின் உரிமையாளரும் கைது செய்யப்படுவதில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் பகுதியில் கூழாங்கற்கள் அதிளவில் உள்ளது. இதனை விற்பனை செய்யவோ அல்லது கடத்தவோ தடை உள்ளது. இதனை மீறி இந்த கூழாங்கற்கள் அடிக்கடி லாரிகளில் கடத்திச் செல்லப்படுகிறது. கூழாங்கற்கள் கடத்திலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தொடர்ந்து அதிகாரிகள் எச்சரித்து வரும் நிலையில் கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. சேந்தநாடு அடுத்த கள்ளமேடு பகுதியில் இருந்து அழகு வாய்ந்த கூழாங்கற்களை லாரியில் கடத்துவதாக உளுந்தூ ர்பேட்டைதாசில்தார் ராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தாசில்தார் கூழாங்கல் கடத்திய லாரியை மடக்கி பிடித்தார். அப்போது லாரியை நிறுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இது குறித்து தாசில்தார் ராஜ், திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். திருநாவலூர் பகுதியில் கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை போலீசார், வருவாய் துறை அதிகாரிகள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அடிக்கடி மடக்கி பிடிக்கின்றனர். யார் பிடித்தாலும் லாரியின் டிரைவர் தப்பிவிடுகிறார். லாரியின் உரிமையாளரும் கைது செய்யப்படுவதில்லை. குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். டிரைவரையோ, உரிமையாளரையோ கைது செய்யாமல், இது தொடர்பாக யாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்போகிறார்கள். இது போன்ற வழக்கில் எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- மகாலட்சுமி பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
- பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது 53). கூலித் தொழிலாளி, இவரது மகள் மகாலட்சுமி (21) இவர் பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் வயிற்று வலி வருவதாகவும் அவ்வாறு வயிற்றை வலிக்கும் போது தனியார் மருந்தகத்தில் மருந்தை வாங்கி சாப்பிடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை கூலி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மதியம் வீட்டுக்கு திரும்பி னார். அப்போது வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பருத்தி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் ஏன் வாந்தி எடுக்கிறாய்? என கேட்டபோது பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறி யுள்ளார். அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் மகாலட்சுமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து இவரது தந்தை மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஸ்டாலின் செய்த ஒரே சாதனை செந்தில் பாலாஜியை கைது செய்ததுதான்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி பஸ் நிலை யம் அருகே அ.தி.மு.க. சார்பில் லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, ஜெய லலிதா பேரவை இணை செயலாளர் பிரபு, முன்னாள் காமராஜ் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். கள்ளக்கு றிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். கள்ளக் குறிச்சி மாவட்ட செயலாள ரும், திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு அறங்காவலர் குழு பிரதி நிதியுமான குமரகுரு தலைமை தாங்கி பேசிய தாவது:-
நாங்கள் எதிர்க்கட்சியாக உள்ளோம். எனவே மக்கள் பிரச்சனைகளை சொல்லு கிறோம். ஆளுங்கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்க்கு கொண்டு வந்த திட்டங்களை மேடையில் சொல்லுங்கள். தி.மு.க. ஆட்சியில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் வாங்கி ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முறைகேடாக கொள்ளையடித்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி யை சிறை வைப்போம் என ஸ்டாலின் ஏற்கனவே கூறி னார். அதுதான் தற்போது நடந்துள்ளது. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை செந்தில் பாலாஜியை கைது செய்ததுதான். தற்போது ஆட்சியாளர்கள் அரசு ஊழியர்களை மிரட்டி கொத்தடிமை போல் வைத்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் சுதந்திரமாக பணியாற்றினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் பல்வேறு மக்கள் திட்ட பணிகள் எடப்பாடி ஆட்சி யின் போது கொண்டு வரப் பட்டன. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவல கம் கட்டும் பணி, ெரயில் பாதை அமைக்கும் பணி, வெளிவட்ட சாலை அமைக்கும் பணி ஆகியவை கிடப்பில் போடப் பட்டுள்ளன. இந்த பணி களை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். இல்லை யெனில் அ.தி.மு.க .மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசி னார்.
தொடர்ந்து தமிழக அரசை கண்டித்துகண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப் பிள்ளை, ஒன்றிய செயலா ளர்கள் தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம் சுந்தர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞான வேல், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில்தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜ சேகர் நன்றி கூறினார்.
- கலியன் ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார்.
- கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் குருபீடபுரம் பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 45). இவர் எலவனசூர்கோட்டை அருகே கொட்டயூர் பகுதியில் உள்ள ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது. இதில் அலறி கீழே விழுந்தார். இதனை பார்த்த சக பணியாளர்கள் கலியனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலியன் இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கலியனின் உறவினர்கள் கொட்டயூர் பகுதியில் உள்ள கல்குவாரி கம்பெனி முன்பு திரண்டனர். இறந்த கலியனிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதனால் கலியன் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் வழங்க வேண்டும் எனக் கூறி முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எலவனசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், தனிப்பிரிவு ேபாலீசார் சுரேஷ் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையிட்ட கலியன் உறவினர்களிடம் இறந்த கலியன் குடும்பத்திற்கு உரிய முறையில் இழப்பீட்டு தொகை வாங்கி தரப்படும் என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை முன்னிட்டு கம்பெனியின் ஒப்பந்ததாரர் இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் கலியன் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று கூறியதின்பேரில் முற்றுகையிட்ட கலியன் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
- 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் திரு.வி.க நகர் அருகே உள்ள வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். வருகின்ற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் 4 மணி நேரத்தில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகள் சந்தைகளில் ஆடுகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சின்னசேலம் வார சந்தையில் காலை 5 மணி முதல் வியாபாரிகள் ஆடுகளை விற்க தொடங்கினர். சுமார் 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த வார சந்தைக்கு காட்டுசெல்லூர், வட குரும்பூர், கிளியூர், மடப்பட்டு ,சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வழக்கமாக இந்த சந்தையில் சுமார் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடை பெறும்.
இந்த நிலையில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்
8 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் சுமார் 3 மணி நேரத்தில் ஆடுகள் 3 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மேப்பிலியூர் கிராமத்தில் இருந்து குழாங்கற்கள் கடத்தபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
- சந்தேகமடைந்த ஊழியர்கள் லாரியில் சோதனையிட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா மேப்பிலியூர் கிராமத்தில் இருந்து குழாங்கற்கள் கடத்தபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து விழுப்புரம் உதவி புவியிலாளர் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே ஒரு லாரி வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்ட போது, லாரியின் டிரைவர் தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் லாரியில் சோதனையிட்டனர். இதில் லாரியில் குழாங்கற்கள் இருந்ததை கண்டறிந்தனர்.தொடர்ந்து இது குறித்து புவியிலாளர் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். மேலும், லாரியின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது போல கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என புவியிலாளர் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
- இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு காரணம் சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை துறை சில தினங்களுக்கு முன்பு வருகிற 28-ந் தேதி அன்று சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்தவர்கள் மற்றும் நில அளவியர் ஆகியோர் நேற்று அம்சாகுளத்தில் தொடங்கி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கூகையூர் ரோடு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்து மஞ்சள் நிறத்தில் அம்பு குறியீடு போடப்பட்டது.
பின்னர் கடை உரிமை யாளர்களிடம் வருகின்ற 28-ந் தேதிக்கு முன்னதாகவே ஆக்கிரமிப்புகளை தங்களு டைய செலவிலே எடுக்கு மாறு தெரிவித்தனர். மீறும் பட்சத்தில் 28-ந் தேதி அன்று ஆக்கிரமிப்புகளை எடுக்கும்போது அதற்கான ஏற்படும் பொருள்கள் சேதாரத்தை, தேசிய நெடுஞ்சாலை துறையோ, பேரூராட்சி நிர்வாகமோ ஏற்றுக் கொள்ளாது என கடை உரிமையாளர்களுக்கு தெரிவித்தனர்.
- ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது.
- 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார். உதவி அலுவலர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்தல், கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயக்குமார் கருப்பாயிடம் இது என்னுடைய இடம், இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- ஜெயக்குமார் அசிங்கமாக திட்டி, கொடுவாளால் நடராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தை சே ர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் நடராஜன்(49) விவசாயி. சம்பவத்தன்று நடராஜனின் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி கருப்பாயி, அவரது நிலத்தில் வேலை ப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜெய க்குமார்(45) கருப்பாயிடம் இது என்னுடைய இடம், இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைப்பார்த்த நடராஜன், ஜெயக்குமாரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அசிங்கமாக திட்டி, கொடுவாளால் நடராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தார்.
- தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தாத்தா, பாட்டி சிறுமியை பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
- திடீரென தாலி கட்டி, கட்டாயப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்தார். படிப்பு வராததால் பள்ளியை விட்டு நின்று போன சிறுமி வீடடு வேலைகளை செய்து வந்தார். இவரது தாய் சிறுமி குழந்தையாக இருந்தபோதே பாம்பு கடித்து இறந்து போனார். இவரது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தாத்தா, பாட்டி சிறுமியை பராமறித்து வளர்த்து வருகின்றனர். பிளஸ்-1 வகுப்பிலிருந்து பாதியிலேயே நின்றதால், சிறுமியின் தாத்தா, பாட்டி திருக்கோவிலூரில் உள்ள தனியார் நர்சிங் மையத்தில் சேர்ந்து படிக்க வைத்தனர். 6 மாதத்திற்கு பிறகு சிறுமி அங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் சிறுமியின் உறவினர் மணிகண்டன் (வயது 23), ஏ.சி.மெக்கானிக் பணி செய்கிறார். இவர் சித்தலூர் பகுதியில் உள்ள பெரியசாமி கோவிலுக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது, சிறுமியின் கழுத்தில் மணிகண்டன் திடீரென தாலி கட்டி, கட்டாயப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வீடு மற்றும், விளைநிலப் பணிகளை செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்து நடந்தவைகளை கூறினார். மேலும், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






