திருநாவலூர் அருகே லாரிகளில் கடத்தி செல்லப்படும் அழகிய கூழாங்கற்கள்: தப்பியோடி விடும் டிரைவர்கள்

கூழாங்கற்கள் கடத்திலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறது.யார் பிடித்தாலும் லாரியின் டிரைவர் தப்பிவிடுகிறார். லாரியின் உரிமையாளரும் கைது செய்யப்படுவதில்லை.
திருநாவலூர் அருகே லாரிகளில் கடத்தி செல்லப்படும் அழகிய கூழாங்கற்கள்: தப்பியோடி விடும் டிரைவர்கள்
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் பகுதியில் கூழாங்கற்கள் அதிளவில் உள்ளது. இதனை விற்பனை செய்யவோ அல்லது கடத்தவோ தடை உள்ளது. இதனை மீறி இந்த கூழாங்கற்கள் அடிக்கடி லாரிகளில் கடத்திச் செல்லப்படுகிறது. கூழாங்கற்கள் கடத்திலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தொடர்ந்து அதிகாரிகள் எச்சரித்து வரும் நிலையில் கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. சேந்தநாடு அடுத்த கள்ளமேடு பகுதியில் இருந்து அழகு வாய்ந்த கூழாங்கற்களை லாரியில் கடத்துவதாக உளுந்தூ ர்பேட்டைதாசில்தார் ராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தாசில்தார் கூழாங்கல் கடத்திய லாரியை மடக்கி பிடித்தார். அப்போது லாரியை நிறுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.

இது குறித்து தாசில்தார் ராஜ், திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். திருநாவலூர் பகுதியில் கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை போலீசார், வருவாய் துறை அதிகாரிகள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அடிக்கடி மடக்கி பிடிக்கின்றனர். யார் பிடித்தாலும் லாரியின் டிரைவர் தப்பிவிடுகிறார். லாரியின் உரிமையாளரும் கைது செய்யப்படுவதில்லை. குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். டிரைவரையோ, உரிமையாளரையோ கைது செய்யாமல், இது தொடர்பாக யாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்போகிறார்கள். இது போன்ற வழக்கில் எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com