என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • இந்தியாவில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு, ஜி 20 மாநாடு மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, காற்றாடி திருவிழா, சர்பிங் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளும் இங்கு நடைபெற்றதால் தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை பலமடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் இந்தியாவில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது.

    இந்த நிலையில் மாமல்லபுரம் பகுதிகளில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் மாடுகள் ஹாயாக சுற்றி வருகின்றன. பூஞ்சேரி கூட்டுரோடு கிழக்கு கடற்கரை சாலை, கல்பாக்கம் சாலையோரம் கொட்டப்படும் உணவுக்கழிவுகளுக்காக மாடுகள், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் வாகனங்கள் செல்லும் போது திடீரென குறுக்கே செல்வதால் விபத்துக்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இது குறித்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சாலையில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் அபராதமும் வசூலிக்கபட்டது. தற்போது இந்த நடவடிக்கை தீவிரம் காட்டாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் மாடுகள் இரவிலும் பகலிலும் சுற்றி திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரியிடம் கேட்டபோது,

    மாடுகளை பிடித்து அடைக்க நிரந்தரமான பவுண்டு வசதிகள் பேரூராட்சியில் இல்லை. அப்படி பல மாடுகளை பிடித்து அடைத்தால் அவற்றிற்கு உணவு ஏற்பாடுகள் செய்வதிலும் சிக்கல் வருகிறது. கூட்டமாக சுற்றும் மாடுகளை பிடித்து ஏற்றுவதற்கான வாகனம் இல்லை. மேலும் பணியாட்களும் பற்றாக்குறை உள்ளது. எனினும் சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • நிர்வாக காரணங்களால் இக்கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலை வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். நிர்வாக காரணங்களால் இக்கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. இந்தகூட்டம் வருகிற 29-ந்தேதி கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

    கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலை வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 22-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சாலை பள்ளத்தில் விழுந்து போலீஸ்காரர் பலியான சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள வீராணம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் இளங்கோ (வயது 29). காஞ்சிபுரத்தில் போலீசாக பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு வீராணம் புதூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    கல்பலாம்பட்டு ஏரி அருகே வாலாஜா-பனப்பாக்கம் சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

    தற்போது மழைக்காலம் என்பதால் அந்த பள்ளத்தில் மழை நீர் நிரம்பியிருந்தது.

    இதை கவனிக்காத இளங்கோ நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார்.

    பலத்த அடிபட்டதால் மயங்கி தண்ணீரில் மூழ்கினார். இதனை விடிய விடிய யாரும் பார்க்கவில்லை. இதனால் போலீஸ்காரர் இளங்கோ சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீஸ்காரர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து நெமிலி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    உடனடியாக அங்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை பள்ளத்தில் விழுந்து போலீஸ்காரர் பலியான சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.
    • இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இங்கு பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த கோவிலில் ஸ்ரணவ நட்சத்திரத்தை ஒட்டி வேதாந்த தேசிகர், வரதராஜ பெருமாள் கோவில் அருகே எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருவது வழக்கம்.

    அன்படி இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள் கோவில் அருகே சன்னதி வீதியில் நடை பெற்றது. அப்போது வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.

    அப்போது, தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்க்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகர் முன்பு பிரபந்தம் பாட எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வடகலை பிரிவினர் பிரபந்தம் பாடத்தொடங்கினர். இதனால் இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதனால் அங்கிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் விஷ்ணு காஞ்சி போலீசார் மற்றும் கோவில் செயல் அலுவலர் பூவழகி ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

    இருதரப்பினரையும் சுவாமி ஊர்வலம் முன்பு பாடுவதற்கு போலீசாரும, இந்து சமய அறநிலைத்துறையினரும் அனுமதி அளித்த பின்பு தேசிகர் சுவாமி விதி உலா போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சன்னதி வீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பிரபந்தம் பாடுவதில் அர்ச்சகர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
    • ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு, பெண்கள் உள் நோயாளிகளின் பிரிவு. குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் விவரம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் ஆஸ்பத்திரியின் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு டாக்டர்களுக்கு கலெக்டர் கலைச் செல்வி மோகன் அறிவுரை வழங்கி, மருந்தகத்தில் மருந்துகள் இருப்புகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர்- ஓரகடம் கூட்டு சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

    • குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.
    • பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வடமாநில மூதாட்டி ஒருவர் மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மூதாட்டியை அதிகாரிகள் மீட்டு விசாரித்தனர். அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி மாஜி (வயது 70) என்பதும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர். ஆனால் அவர் அங்கு தங்க விருப்பம் இல்லை எனவும் திரும்பவும் ஒடிசாவில் உள்ள குடும்பத்தினரிடம் செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். இது பற்றி ஒடிசாவில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த 2 பெண் போலீசார் மற்றும் ஒரு ஆண் போலீசாரிடம் பத்மாவதி மாஜியை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக மூதாட்டி பத்மாவதி மாஜி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, சமூக நல அலுவலர் கல்யாணி, ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகி ஜான்சி, வழக்கு பணியாளர் கலையரசி உடன் இருந்தனர்.

    • பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி செல்கிறது.

    அதேபோல காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு முருகன் காலனி பல்லவர் மேடு போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    மழையின் காரணமாக உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம்ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல்சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    காஞ்சிபுரம் பகுதியில் மொத்தம் 381- ஏரிகள் உள்ளன. இதில் ஏரிகள் முழுவதும் நிரம்பியது. 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு இந்த பயன்பாட்டுக்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, உத்திரமேரூர், மணிமங்கலம், போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    • 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
    • 134 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.

    காஞ்சிபுரம்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டிவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்ந 2 நாட்களாக பலத்த மழை பெய்கிறது. நேற்று இரவு முழுவதும் விட்டு,விட்டு பலத்த மழை கொட்டியதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஒரே நாளில் 39 ஏரிகள் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் 149 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 233 ஏரிகள் 50 சதவீதம், 294 ஏரிகள் சதவீதத்துக்கு மேலும், 134 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
    • காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுக்கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மது பிரியர்கள் இங்கு மதுவாங்கிவிட்டு சாலை யோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அவர்கள் அந்த பாதையை தவிர்த்து சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் போதை நபர்கள் அங்கேயே கும்பலாக நின்று ரகளையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடமாக விளங்கும் ராஜாஜி மார்க்கெட் வரவே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும். சாலையில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தீபாவளி பண்டிகையின் போது காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பலத்த காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது26). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சூர்யாவுக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்திக்கிற்கும் அடிக்கடி சிறு,சிறு தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் இருவரும் ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி கரையில் மதுகுடித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கார்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்யாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் பாலு செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கார்த்திக்கிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    வண்டலூைர அடுத்த கூடுவாஞ்சேரி, மணிமேகலை தெருவை சேர்ந்தவர்கள் கன்னியப்பன, வினித். இருவரும் நேற்று தீபாவளியை முன்னிட்டு வீட்டின் அருகில் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாளுடன் வினித்தை தாக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்னியப்பன் மர்ம கும்பலை தடுக்கு முயன்றார். இதில் அவருக்கு வெட்டு விழுந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியப்பன் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரிடம் இருந்து கத்தியை பறித்து எதிர்தரப்பு கோஷ்டியினரை சரமாரியாக வெட்டினார். இதில் வயிறு, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த எதிர்தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே பலத்த காயம்அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கோபால கண்ணன்(23) என்பது தெரியவந்தது. இந்த மோதலில் கன்னியப்பனுக்கும் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கன்னியப்பனின் நண்பர் வினித் மற்றும் அவரது சகோதரர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை தாக்கி உள்ளனர். அந்த வாலிபருக்கு ஆதரவாக நண்பர்களான கோபால கண்ணன் உள்பட 7 பேர் வந்து வினித்தை தாக்கினர். நண்பரை காப்பாற்ற முயன்றபோது கன்னியப்பன் எதிர்தரப்பினரின் கத்தியை பிடுங்கி வெட்டியதில் கோபால கண்ணன் பலியாகி விட்டார். மோதலுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் முறுக்கு கம்பெனி உள்ளது. நேற்று இரவு இந்த கம்பெனி அருகே வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையுண்ட வாலிபர் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. முறுக்கு கம்பெனியில் வேலைபார்த்த வாலிபர் ஒருவர் மாயமாகி உள்ளார். அவருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? கொலையுண்ட வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக 55 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன.

    111 ஏரிகள் 75 சதவீதமும், 174 ஏரிகள் 50 சதவீதமும், 406 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
    • மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    பிரபல தமிழ் நடிகை கவுதமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியை சேர்ந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சால் சதீஷ்குமார், ஆர்த்தி, பாஸ்கரன் மற்றும் ரமேஷ் சங்கர் ஆகியோர் போல் ஆவணங்கள் தயாரித்து நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் உள்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    ×